நீயாக நான், நானாக நீ 1

Advertisement

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்...:love::love::love: சொன்ன மாதிரியே வந்துட்டேன்...:giggle::giggle::giggle: இதுக்கு முன்னாடி நான் எழுதுன கதைகளுக்கு நீங்க கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீங்கங்கிற நம்பிக்கையோட இதோ முதல் எபி போட்டுட்டேன்...:giggle::giggle::giggle: வாங்க ஆகாஷ் அண்ட் பூமியோட கூட நாமும் பயணிப்போம்...:love::love::love:

eiVKY6Q41139.jpg

அத்தியாயம் 1

அந்த அதிகாலை வேளையில், சூரியன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியைத் தழுவ சோம்பியவாறு, கருநிற மேகங்களுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்க, அவள் தன் அலைபேசியில் வைத்த அலாரமோ தன் வேலையை செவ்வனே செய்யத் துவங்கியது.

காதருகே ஒலித்த அலாரத்தின் சத்தத்தில், லேசாக அசைந்தவள், ஒற்றைக் கண்ணை சோம்பலுடன் திறந்து அலைபேசியில் மணியைப் பார்த்தாள். அது 5.55 எனக் காட்டியது.

‘ஹ்ம்ம் இன்னும் 5 நிமிஷம் இருக்கு… அதுவரைக்கும் சுகமா தூங்கலாம்…’ என்று படுத்தவளை அலறியடித்து எழச் செய்தது அந்த பாட்டு சத்தம்.

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா
டண்டனக்கா நக்கா

எங்க தல எங்க தல டீ ஆரு
செண்டி மெண்டுல தாறு மாறு


மைதிலி காதிலி இன்னாரு
அவர் உண்மையா லவ் பண்ண சொன்னாரு


மச்சான் அங்க தாண்டா
தல நின்னாரு


டண்டனக்கா நக்கா நக்கா நக்கா

டண்டனக்கா நக்கா

“ஐயோ கடவுளே… காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சுட்டானா…” வாய்விட்டு புலம்பியபடி தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

நடு கூடத்தில் இசைப்பான் அதிர்ந்து கொண்டிருக்க, அவள் தேடி வந்தவனோ சமையலறையில் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் காய்களை வெட்டிக் கொண்டிருந்தான். அதுவும் மேற்சட்டை இல்லாமல் வெறும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு, டி.ஆர் போல தலையை சிலுப்பி ஆடிக் கொண்டிருந்தவனை பார்த்தபோது அவளிற்கு இருந்த தூக்கம் மறைந்து கோபம் அதனிடத்தை பிடித்தது. வேகமாக சென்று இசைப்பானை அணைத்தாள்.

“எவ அவ…” என்று நாக்கை மடித்துக் கொண்டு தர லோக்கல் ஸ்லாங்கில் கேட்டபடி திரும்பிவன் அங்கு நின்றவளைக் கண்டதும், “ஆ…அம்மா… பத்ரகாளி…” என்று கத்தினான்.

தூங்கி எழுந்து… இல்லை இல்லை… எழுப்பப்பட்ட கோபத்தில் அப்படியே வந்ததால், தலைமுடி கலைந்து, கண்ணிலிட்ட மை இழுகி ஒரு மாதிரியாகத் தான் இருந்தாள்!!!

அவன் அப்படி கத்தியதும் அவளின் கோபம் மேலும் பெருக, “டேய் எரும… எதுக்கு காலைலேயே கழுத மாதிரி கத்திட்டு இருக்க… அதுவும் இப்படி ‘ப்ரீ ஷோ’ காட்டிட்டு இருக்க… எத்தன தடவ சொல்லிருக்கேன், பொண்ணு இருக்க வீட்டுல இப்படி சட்டை இல்லாம இருக்காதன்னு…” என்று கத்தினாள்.

அவள் அப்படி கூறியதும், அவளை சுற்றி வந்து தேடுவது போல பாவனை செய்தவன், “பொண்ணா… இங்க யாரும் இல்லையே…” என்றான் அவளை சீண்டும் பொருட்டு.

அவன் கூறியதில் பல்லைக் கடித்தவள், “ஏன் என்ன பார்த்தா பொண்ணா தெரியலையா…” என்றாள்.

மெல்ல அருகில் வந்தவன், அவளை மேலும் கீழும் ஒரு அளவிடும் பார்வை பார்த்தவன், “உன்ன பார்த்தா பொண்ணு மாதிரி இல்ல… பஜாரி மாதிரி தான் இருக்கு…” என்று கூறியவன் சட்டென்று தன்னறைக்குச் சென்று மறைந்தான். பின்னே அங்கிருந்தால் மீண்டும் அவளிடம் திட்டு வாங்க வேண்டுமல்லவா…

‘அடேய் கருவாயா… எங்கிட்ட மாட்டமையா போயிடுவ… அப்போ இருக்கு உனக்கு…’ என்று கருவியவள் பணிக்கு செல்ல ஆயத்தமானாள்.

அவள் பூமிகா மணிவண்ணன். மணிவண்ணன் – விசாலாட்சி தம்பதியரின் ஒரே புதல்வி. அவளது குடும்பம், மதுரையை ஒட்டிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டது. பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் மதுரையிலேயே முடித்தவள், தன் வேலைக்காக சிங்காரச் சென்னையில் காலடி எடுத்து வைத்தாள். ஆனால் இங்கு வந்த நாள் முதல், ஏன் தான் இங்கு வந்தோம் என்று அவளிற்கு தோன்ற வைத்த பெருமை அவனையே சாரும்.

அவன் ஆகாஷ். ஆகாஷின் அன்னை மீனாட்சி, மணிவண்ணனின் தங்கை. தேடித் தேடி தன் தங்கைக்கு சிவகுருவை மணமுடித்து வைத்தார் மணிவண்ணன். ஆனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த காலமோ ஐந்தாண்டுகள் மட்டுமே. பணிக்காக வெளியூர் சென்றவர் விபத்தில் சிக்கி, தன் ஆசை மனைவியையும் மகனையும் இவ்வுலகில் தனியே விட்டுச் சென்று விட்டார்.

பூவும் பொட்டுமாக மகிழ்ச்சியுடன் புகுந்த வீட்டிற்கு சென்ற தங்கை, அவை அனைத்தையும் இழந்து மீண்டும் பிறந்தகம் நாடி வந்தது அந்த பாசமிகு அண்ணனிற்கு வேதனை அளித்தது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தங்கையையும் தங்கை மகனையும் கையில் வைத்து தான் தாங்குகிறார்.

மருமகன் என்று வந்து விட்டால், மகள் கூட இரண்டாம் பட்சம் தான் அந்த மனிதருக்கு…

இதுவே சிறு வயதிலிருந்தே பூமிகாவிற்கு ஆகாஷை பிடிக்காமல் போகக் காரணமாகியது. ஆம் பூமிகாவின் அத்தை மகன் அத்தான் தான் ஆகாஷ்.

ஆகாஷ் ஊரில் இருந்தவரை இருக்குமிடம் தெரியாமல் இருப்பவன் என்று பெயர்பெற்றவன். அவன் இவ்வளவு வாய் பேசுவான் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

அவன் ஊரில் இருந்த நாட்களும் குறைவே. எட்டாம் வகுப்பிலிருந்தே விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்தவன், வேலையும் சென்னையில் தேடிக் கொள்ள, பூமிகா அவனைப் பார்க்கும் நாட்கள் பெரும்பாலும் விடுமுறை தினங்களாகவே இருக்கும்.

அப்போதும் சும்மா இருக்காமல், சிறுவயதில் நடந்த சண்டைகளுக்கு பழிவாங்க மீண்டும் ஒரு சண்டையை அவனிடம் ஆரம்பிக்க, அவன் பதிலுக்கு இவளை வம்பிழுக்க என்றே அந்த நாட்களையும் கழித்ததால், இருவருக்கும் இடையே சுமூகமான சூழ்நிலை இன்று வரை ஏற்படவே இல்லை.

ஆகாஷ், கணினி பொறியியலில் பட்டம் பெற்று மென்பொருள் பொறியியலாளராக வேலை செய்து கொண்டிருக்கிறான். இருவருக்கும் எதில் ஒற்றுமையோ, படிப்பில் ஒரே மாதிரியே யோசித்தனர். பூமிகாவும் அதே துறையைத் தான் தேர்ந்தெடுத்தாள்.

பூமிகா கல்லூரி படிப்பை தேர்ந்தெடுத்த சமயம்… “கண்ணு… நம்ம ஆகாஷு கூட அந்த படிப்பு தான் படிக்கிறானாம்… உனக்கு படிப்புல எதனாச்சும் சந்தேகம்னா அவனே சொல்லித் தருவான்…” என்று பூமிகாவின் அன்னை விசாலாட்சி கூறியபோது, “யாரு அந்த கருவாயனா… நா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கணும்னு சொன்னதே அவனுக்கு போட்டியா இருக்கணும்னு தான்… பெரிய இவன்… உன் புருஷன் அவன தலையில தூக்கி வச்சு கொண்டாடுறாரு…” என்று எண்ணெயில் இட்ட அப்பளமாக பொறிந்தாள்.

“பூமி எத்தன முறை சொல்றது… உன்ன விட மூணு வயசு பெரியவன்… மாமன் முறை வேணும்… மாமான்னு கூப்பிடாட்டியும் மரியாதையா பேசிப் பழகு…” என்று விசாலாட்சி கூறிக் கொண்டிருக்கையிலேயே, அங்கு வந்தார் மீனாட்சி.

மீனாட்சியைப் பார்த்த பூமிகா, வேண்டுமென்றே கண்ணைக் கசக்கியவாறு, “பாருங்க அத்த… உங்க அண்ணி என்ன திட்டிட்டே இருக்காங்க…” என்று அவரிடம் செல்லம் கொஞ்சினாள்.

“அண்ணி இப்போ எதுக்கு பாப்பாவ திட்டுறீங்க… சின்ன பிள்ளைங்க… இப்போ அப்படி தான் அடிச்சுக்குங்க… விடுங்க அண்ணி…” என்று தன் அண்ணியிடம் கூறியவர், “இந்தா கண்ணு உனக்கு பிடிக்கும்னு அத்த சீடை செஞ்சு வச்சுருக்கேன். .” என்று ஆசையுடன் தன் மருமகளுக்கு எடுத்து ஊட்டினார்.

இதிலிருந்தே தெரிந்திருக்கும், யாருக்கு யார் செல்லம் என்று.

பூமிகா படிப்பை முடிக்கவும், விதி பூமி மற்றும் ஆகாஷின் வாழ்வில் விளையாடிப் பார்க்க எண்ணியதோ… அவளின் வேலை ரூபத்தில் அதற்கு பிள்ளையார் சுழியிட்டது.

பூமிகா அவளிற்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதை மகிழ்ச்சியுடன் வீட்டில் பகிர்ந்து கொள்ள, அவர்கள் கூறியதைக் கேட்டு பூமிக்கு தான் மனம் முழுக்க இருந்த மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

“சென்னையிலேயே வேலை கிடைச்சுருச்சா… ரொம்ப நல்லது… அப்போ ஆகாஷுக்கும் பூமிக்கும் கல்யாணத்த முடிச்சு ஜோடியா சென்னைக்கு அனுப்பிடலாம்…” என்று கூறி சிரித்தார் மணிவண்ணன்.

விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த ஆகாஷிற்கும் இது அதிர்ச்சியே…

பெரியவர்கள் மனதிலிருந்த ஆசை இருவருக்குமே அரசல் புரசலாக தெரிந்திருந்தாலும், இப்படி பொதுவில் அதுவும் இவ்வளவு விரைவாக இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று இருவரும் எதிர்பார்த்திருக்க வில்லை.

அவர்களின் நிலையைக் கண்ட மணிவண்ணன், “என்ன ரெண்டு பேரும் இப்படி நிக்குறீங்க… சரி நான் நேரடியாவே கேக்குறேன்… ஆகாஷு, என் மகள கட்டிக்க உனக்கு சம்மதமா..?” என்று கேட்டார்.

அவர் வார்த்தைகளில் கேள்வி தொக்கியிருந்தாலும், கண்களிலோ ‘தான் வளர்த்த பையன் தன் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிப்பானா…’ என்ற அபரிமிதமான நம்பிக்கை தான் தெரிந்தது. அந்த நம்பிக்கையை உடைக்க விரும்பாதவன், ‘சரி’ என்று தலையசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தான்.

ஆகாஷ் எப்படியும் சம்மதிக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் இருந்தவளின் நம்பிக்கையை உடைத்தது அவனின் ‘சம்மதம்’…

‘அடப்பாவி… உன்ன நல்லவனா காட்டிக்க என்ன மாட்டிவிட்டுட்டியே… ஐயோ இவரு வேற என் பக்கம் திரும்புறாரே… என்ன ஆனாலும் சரி, இதுக்கு ஒத்துக்கவே கூடாது….’ என்று முடிவெடுத்தவள், மணிவண்ணன் பேசும் முன்பே, “எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல…” என்று கூறினாள்.

“உங்கிட்ட யாரும் கேக்கல…” என்று பட்டென்று மணிவண்ணன் கூறியதும், அதுவரை இறுக்கமாக இருந்த ஆகாஷின் முகத்தில் புன்னகை அரும்ப, சூழ்நிலை கருதி அதை மறைத்தான். ஆனால் அவன் மறைக்கும் முன் அதைக் கண்டுவிட்ட பூமி, ‘இரு டா இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உனக்கு இருக்கு…’ என்று மனதில் கூறிக் கொண்டாள்.

அப்போது தோளைத் தொட்ட அத்தையைக் கண்டவள், அவரின் கண்களில் இருந்த கலக்கத்தையும் கண்டு கொண்டாள்.

“ஏன் கண்ணு… உனக்கு ஆகாஷ பிடிக்கலையா… எதுவா இருந்தாலும் சொல்லு கண்ணு… அண்ணன் கிட்ட நான் பேசுறேன்…” என்றார்.

ஆனால் பூமியோ அவரின் முகத்திலிருந்த கலக்கத்தை போக்க வேண்டும் என்று சிந்தித்ததில் அவளின் தலை தானாக ‘சம்மதம்’ என்று அசைந்தது.

அடுத்தகட்ட வேலைகளைப் பற்றி மூவரும் விவாதித்துக் கொண்டிருக்க, “மாமா…” தயங்கி ஒலித்தது அவனின் குரல்…

“சொல்லு ஆகாஷு…” என்று மணிவண்ணன் சொல்ல, அவரை இடித்த அவரின் மனையாள், “இன்னும் என்ன ஆகாஷு… மாப்பிள்ளன்னு சொல்லுங்க…” என்றார்.

“ஹாஹா… அதுவும் சரி தான்… சொல்லுங்க மாப்பிள்ள…”

‘கல்யாணமே வேணாம்னு சொல்லலாம்னு இருந்தா, இவங்க இப்போ மாப்பிள்ளன்னு கூப்பிட்டு வெறுப்பேத்திட்டு இருக்காங்க…’ என்று மனதில் நினைத்தவன், அதை மறைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அது… அது வந்து மாமா… இப்போ வேலை அதிகமா இருக்கு மாமா… அதோட இன்னும் வேலைல நான் பெருசா எதுவும் சாதிக்கல மாமா… அதுக்குள்ள எப்படி கல்யாணம்….” என்று இழுத்தான்.

‘நான் இன்னும் சாதிக்கல… உங்க பொண்ணு என்ன பாதிக்கலன்னு சீன போட்டுட்டு இருக்கான்… இந்த அப்பாவும் அவன என்னமோ சுந்தர் பிச்சை ரேஞ்சுக்கு லுக் விடுறாரு… கடவுளே இன்னும் என்னென்ன பாக்க வேண்டியத்திருக்குமோ…’ பூமியின் மைண்ட் வாய்ஸ் தான் இது…

“நீ சொல்றதும் சரி தான் ஆகாஷு…” என்று சிறிது யோசித்தவர், “சரி அப்போ நிச்சயத்த முடிச்சுட்டு ரெண்டு பேரையும் அனுப்பலாம்…” என்றார்.

அதன்பின் நடந்த வேலைகள் அனைத்தும் மின்னல் வேகம் தான். இரண்டே நாட்களில் சொந்தங்கள் அனைவருக்கும் சொல்லி, வீட்டிலேயே நிச்சயத்தை முடித்தனர். அங்கு அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க, சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் குழப்பத்துடனே இருந்தனர்.

அடுத்த வாரத்தில் இருவருக்கும் பல அறிவுரைகள் கூறி சென்னை அனுப்பி வைத்தனர். அவனுடன் தங்க மாட்டேன் என்று அடம்பிடித்தவளை, “அப்போ நீ வேலைக்கே போக வேண்டாம்…” என்ற ஒற்றை வாக்கியத்தில் அடக்கியிருந்தார் மணிவண்ணன்.

ஆகாஷ் தங்கியிருந்தது இரு படுக்கை அறையுடன் கூடிய அடுக்குமாடி வீடு என்பதாலும், அங்கு தங்கியிருந்த அவனின் நண்பன் சமீபத்தில் பெங்களூருவிற்கு மாற்றலாகி சென்று விட்டதாலும் அவள் அங்கு தங்குவதற்கு பிரச்சனை இல்லாமல் போயிற்று.

ஆனால் இங்கு வந்த முதல் நாள் அவன் வாழ்க்கை முறையைக் கண்டவள் சற்று அதிர்ந்து தான் போயிருந்தாள். ஊரில் எப்போதும் ‘டிப்-டாப்’பாக ஆடை அணிந்து மரியாதையுடன் வலம் வருபவன், இங்கு அழுக்கு லுங்கியோ, இல்லை ஷார்ட்ஷோ அணிந்து தான் காட்சி தருகிறான்.

அவனிற்கு குடிப்பழக்கம் இருப்பதே அவளுக்கு அதிர்ச்சி தான், இதில் அவன் நடு வீட்டில் வைத்து குடிப்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதை அவனிடம் கேட்க, “இது என் வீடு… நான் இங்க இப்படி தான் இருப்பேன்… உன்னால பார்க்க முடியலைனா கண்ண மூடிட்டு போடி…” என்றுவிட்டு மீண்டும் குடியில் ஐக்கியமாகி விட்டான்.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவள், ‘கருவாயா… ஒரு நாள் இதையெல்லாம் எங்க அப்பாக்கு ‘ப்ரூஃவ்’வோட காட்டி அவரு வாயாலேயே உன்ன திட்ட வைக்கிறேன்…’ என்று மனதில் நினைத்து அதற்கான சரியான சந்தற்பத்திற்காக காத்திருந்தாள்.

வெளியே கமகமக்கும் மணத்தை முகர்ந்தவள், ‘இதுக்காக தான் டா உன்கூட இருக்கேன்… இப்படி வேளாவேளைக்கு மூக்கு பிடிக்கிற மாதிரி ருசியான சாப்பாடு யாரு செஞ்சுத்தருவா… அதுக்காக மட்டும் தான் உன் தொல்லையெல்லாம் தாங்கிட்டு இருக்கேன்… இல்லைனா அப்போவே உன்ன தூக்கிப் போட்டு மிதிச்சுட்டு போயிருப்பேன்…’ என்று மனதினுள் கூறிக்கொண்டு வெளியே விறைப்பாக காட்டிக் கொண்டு தன்னறைக்கு வெளியே வந்தாள்.

“ப்ச் லேட்டாச்சு… இன்னுமா மதியத்திற்கு எடுத்து வைக்கல…”

“ஹ்ம்ம் இவ பெரிய மகாராணி… சமைச்சத டப்பால எடுத்து வைக்க கூட மாட்டாளாம்… இந்நேரம் எனக்கு வேற பொண்ணு கூட கல்யாணமாகிருந்தா, அவ எனக்கும் என் பிள்ளைக்கும் சமைச்சு எடுத்துவச்சு எங்கள சிரிச்சுகிட்டே வழியனுப்பிருப்பா… ஹ்ம்ம் என் வாழ்நாள்ல அதெல்லாம் கனவாவே போயிடும் போல… என் விதி என்ன இவ கூட கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்குது…” என்று மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருந்தான்.

அதைக் கேட்டவள், ‘ஓ சாருக்கு எல்லாம் எடுத்துவச்சு சிரிச்சுட்டே டாட்டா காட்டுற பொண்டாட்டி வேணுமா…’ என்று நினைத்தவள், அவனின் கண்படும் இடத்தில் நின்று, அலைபேசியில், “ஹலோ அத்த… உங்க பையனுக்கு…” என்று ஆரம்பித்தவளை இடைமறித்து அவளின் அலைபேசியை பறித்தவன், “ஹலோ அம்மா…” என்று மூச்சிரைக்க பேசியிருந்தான்.

அதற்குப்பின் அவனிடமிருந்து வந்தது எல்லாம், ‘ம்ம்ம்’ மட்டுமே…

ஆகாஷ், அன்னை வார்த்தைக்கு மறுபேச்சு பேசாமல் அவர் கூறுவதை செய்பவன். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வாள் பூமிகா.

அங்கு அவனின் தாய் ஏதோ கூற, “இல்லம்மா அவ வேலையா இருக்கா… அப்பறம் பேசுங்க…” என்றுவிட்டு அலைபேசியை அணைத்து அவளின் கையில் திணித்திருந்தான்.

அவனைப் பார்த்து உதடு வளைத்து சிரித்தவள், “கருவாயா இனிமே டெய்லி நீதான் எனக்கு சாப்பாடு கட்டி கைல குடுத்து சிரிச்சுட்டே வழியனுப்பணும்… எங்க இப்போ ஒரு ட்ரையல் பார்க்கலாம்…” என்றாள்.

அவனோ முறைத்துக் கொண்டே அந்த டப்பாவை அவள் கையில் கொடுக்க, “ச்சு… என்ன இது உனக்கு சிரிக்கக் கூட தெரியாதா… இரு அத்த கிட்ட…” என்று அவள் சொல்லும்போதே, தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி, கையைக் கூப்பி, “எம்மா தாயே… கிளம்பு முதல…” என்றான்.

அவள் கிளம்பியதும், “ச்சே… இவள எப்படி தான் இத்தன நாளா அத்தையும் மாமாவும் பார்த்துக்கிட்டாங்களோ…” என்று கூறியதும், அவனின் மனச்சாட்சி, ‘அவங்களுக்காக ரொம்ப ஃபீல் பண்ணாத… இவள உன் தலைல கட்டிட்டு அவங்க இப்போ ஜாலியா தான் இருக்காங்க… உன் நிலைமை தான் இனி ரொம்ப மோசம்…’ என்று உண்மையை (!!!) எடுத்துரைத்தது.

“அதுவும் சரிதான்…” என்று தன் வருங்காலத்தை நினைத்து நீண்ட பெருமூச்சு விட்டவன் தன் பணிக்குச் செல்ல ஆயத்தமானான்.

ஒருவருக்கொருவர் பிடிக்காமல் இருக்கும் இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்… அவர்களோடு நாமும் பயணிப்போம்…

தொடரும்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நீயாக நான்
நானாக நீ"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் இங்கே படிக்க ரீ ரன்
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
பார்கவி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பார்கவி டியர்

ஆனால் இதை ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே
ரீ ரன் ஸ்டோரியா?
இல்லை ஆரம்பித்து விட்டு பாதியிலே நிறுத்தி விட்டீர்களாபார்கவி டியர்?
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "நீயாக நான்
நானாக நீ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பார்கவி டியர்
நன்றி பானு மா:love::love::love:
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
Nice start...
ரெண்டு பேரும் சண்டை போடுறது நல்லாத்தான் இருக்கு;);););););)
Tq so much:love::love::love:
Aww sandai poduradhu dhn nalla iruka apo rendu peraiyum sandai matume poda vachuduvom;):cool:;)
 

Barkkavi

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பார்கவி டியர்

ஆனால் இதை ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கே
ரீ ரன் ஸ்டோரியா?
இல்லை ஆரம்பித்து விட்டு பாதியிலே நிறுத்தி விட்டீர்களாபார்கவி டியர்?
நன்றி பானு மா:love::love::love:
இது ரீரன் கதை தான்... போட்டிக்காக எழுதியது...:):giggle::)
சைட்ல இப்போ தான் போடுறேன்...:giggle::giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top