மிகவும் அருமையான பதிவு மிலா.லேகாவுக்கு பிறகு தங்கள் குடும்பத்துக்கு தான் அரண்மனை சொந்தம் என பாலாம்பிகை கனவு கண்டிருக்க மகள்,அண்ணன் மகன்,பேரன்கள் என லேகா குடும்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியில் பலாம்பிகை.
சுசிலாவை கண்டு பொறாமையில் பொங்கிய பாலா பேசிய பேச்சால் முதலுக்கே மோசமாயிருச்சு.பாலாம்பிகை குடும்பத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட,அவள் பேர பசங்கள் அவர்கள் வகிக்கும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இத்தனை நாள் மலர்ச்செண்டு அனுப்பி மன்னிப்பு கேட்ட வாணன்,விழாவில் வைர கழுத்தணியை நிலாவுக்கு அணிவித்து தன் காதலையும் கூறி நிலாவின் கோபத்தை போக்கி விட்டான்.
நிலா கோபமா இருந்தப்போ அவளை சமாதானம் பண்ண சுத்தி சுத்தி வந்தவன்,அவள் கோபம் தீர்ந்து அவனை தேடும் போது வேலையென்று எட்டியும் பார்க்காமல் இருக்கானே.
வாணன் திகைச்சு போறதை போல நிலா என்ன கேட்டிருப்பா.
ரெண்டு பேருக்கும் இப்போ தான் பல்பு எரிஞ்சிருக்குகார்டு கொடுத்தியே வாணா அதுல ஐ லவ் யூ னு எழுதிருக்கலாமே....
நிலா நீங்க என் புருசன் தானன்னு கேட்டிருப்பாளோ......