எல்லாம் சரி தான். ஆனா பல்ராம் நிலைமை யோசிக்கும் போது கஷ்டமாதான் இருக்கு. ஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து, அத தாங்கி சுகமான கற்பனைகளோட அதை பெத்து, ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்துவிட்டு,கடைசியில, பிள்ளைகள் பெத்தவருக்கு பெருமையை தேடித்தரலைனாலும் பரவால்ல ஆனா தலை நிமிரவும் விடல. இது அவருக்கு எவ்வளவு தலையிரக்கம்.
அஜய் இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாக தான் போயிட்டான். இவன விட சேனாபதி நல்லவருதான்.
கல்யாண்னுக்கு தாரணிதான் வேணும்னா, முன்னாடியே பலராம் கிட்ட பேசி அவருக்கு அவன் குடும்பத்தை பத்தி எடுத்து சொல்லி புரிய வச்சியிருக்கலாம். 24 வருஷம் அவரு பொண்ணு மேல வச்சிருந்த நம்பிக்கைய 24 மணிநேரத்துக்குள்ள ஒன்றுமில்லாமல் பண்ணிட்டாங்க.
இந்த மாதிரி சூழ்நிலையாலதான் பொண்ண பெத்தவங்க ரொம்பவும் பயந்து தன் குழந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் போடறாங்க.