Family மொத்தமும் உப்புமா
family-யாடான்னு கேட்கற மாதிரி இப்படி குமரன், கார்த்தி, கார்த்திக்குன்னு, பெயரோட மூணு பேரும் முருகப்பெருமானுக்கு Brand Ambassador வேலை பார்க்கறாங்க.
ராணி ராணி தான், அன்னிக்கு ஒன்னு இன்னிக்கி ஒன்னுன்னு இல்லாமல் பையன் காசுலயே கும்மாளம் போட்டுக்கிட்டு, அவன்கிட்டயே கெத்து குறையாமல் வந்து போறாங்களே.
ஹ்ம், atleast மஹா மாதிரி இல்லாமல் எப்பவுமே முழுக்க முழுக்க சுயநலமாய் இருக்காங்களேன்னு நினைச்சு, இந்த character-ஐக்கூட கடந்து போய் விட முடியுது, ஆனால் மஹாலக்ஷ்மியை அப்படி கடக்க முடியலை. இறுதியில் கதையில antagonist-டே இவங்க தானோன்னு நினைக்க வெச்சுருச்சு கதையோட நகர்வு.
கதையின் - எழுத்தாளரின் படைப்பு எல்லையை தாண்டி, எனக்கு தோணிய ஒரு சந்தேகம் -
கதையோட ஹீரோ ஒரு பெண்ணுக்கு(ஹீரோயின்) இழைத்த மாபெரும் தவறை மறக்க-கடக்க, அந்த தவறினால் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விளைவுகள் புள்ளியாய் சிறுத்து அவனது ஒரு நல்ல மாண்பு நிறைந்த மறுபக்கம் பெரிதாக விரிந்து மங்கையின் (வாசகர்களின்) மனதை நிறைப்பதற்காக பெண்ணைப்பெற்றவரின்
(கார்த்திகாவோட அம்மா) characterisation ASSASINATE ஆக வேண்டிய கட்டாயம் எழுகிறதோ?
To be precise : ஒரு கணவன் மனைவியின் அந்நியோன்யம் அதிகரிக்க, மனைவியின் பெற்றோர் குணங்கள் தாழ்ந்த நிலையில் சித்தரிக்க படுவது வேதனையாக உள்ளது.
அந்த ஹீரோவை "ஏன்டா என் பொண்ணை இப்படி கடத்தி கஷ்டப்படுத்தினன்னு?" கேள்வி கேட்க உரிமைப்பட்டவங்க, கேள்வி கேட்டுட்டா ஹீரோ image damage ஆகிடும் என்று, அவனை கேள்வி கேட்கும் தரத்தை இழக்க வைக்க அவனை விட அதிகமா தன் பெண்ணுக்கு அநீதி இழைக்கறவங்களா தான் பொண்ணோட அம்மா-அப்பா சித்தரிக்கப்படறாங்க. இந்த போக்கு எந்த அளவுக்கு சரி? பதில் அவரவர் பார்வையை பொறுத்தது - அப்படி தானே?