தனிமை நாடி நடந்து சென்றேன்
என் தமிழன்னை எதிர்ப்பட்டாள்
தனியே செல்கிறாயே
மகளே உன்னை தாங்கி கொள்ளாவா எனக் கேட்டாள்
தாவி சென்றேன் அவளிடத்தில்
மனதிற்குள் எதையோ
வைத்து மறுகுகிறாய்
உனக்கு மருந்தை நான் தரவா என்றாள்
மறுப்பேதும் சொல்லவில்லை
அவள் மணிமொழிதான் மீறவில்லை நான்
சிரித்து பேசினாள் அதில் சிலப்பதிகாரம் கண்டேன்
கால் கொலுசை சிணுங்க செய்தாள்
அங்கு கம்பராமாயணம் கண்டேன்
கண்களில் காதல் மொழி பேசினாள்
அங்கு பாரதியின் கண்ணம்மா காதல் கண்டேன்
சிறிது வருத்தம் கொண்டேன்
என் செல்ல அன்னையிடம் தான் கேட்டேன்
வரலாறு பேசும் வளர்ந்த கவிஞர்களின்
கவிதைகளை பொத்தி வைத்திருக்கும் நீ
வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு வஞ்சனை செய்வது ஏனோ? என்றேன்
வைகை என அவள் சிரித்தாள்
நான் வளர்க்கும் மகளே
வரலாறாய் ஆனதுடி என் மூத்த தலைமுறை
அக்கவிஞர்கள் எல்லாம் என் குழந்தைகளடி
நீங்கள் எல்லாம் என் குழந்தைகளின் குட்டிகளடி
பரம்பரைகள் பெருகினால்தானே நம்
புகழ் பாரெங்கும் பரவும் என கேட்டால்
பதிலின்றி நான் நின்றேன்
மேலும் பேசினால் அவள்
மல்லிகை மலராய்
உங்கள் படைப்பு மல்ரும் போது
என் கூந்தலில் சூட்டிக்கொள்வேன்
என் இக்கால கவிஞர்களை
என் கண்ணிற்க்கு மையாய்
மாற்றிக்கொள்வேன் என்றால்
மகிழ்வுடன் நான் நின்றேன்
மணிமொழி அவள் சொன்னால்
என்னை மகிழ்விப்பவர்கள்க்கு
மணிமகுடம் உண்டென்று
காலம் வரும் போது கைசேறும்
கலங்காதே மகளே
சென்று வா,வென்று வா என்றால்
கண்விழித்து பார்த்தேன்
கனிமொழி அவளை காணவில்லை
அப்பொழுதான் கண்டறிந்தேன்
அது கனவு என்று
என் தமிழன்னை எதிர்ப்பட்டாள்
தனியே செல்கிறாயே
மகளே உன்னை தாங்கி கொள்ளாவா எனக் கேட்டாள்
தாவி சென்றேன் அவளிடத்தில்
மனதிற்குள் எதையோ
வைத்து மறுகுகிறாய்
உனக்கு மருந்தை நான் தரவா என்றாள்
மறுப்பேதும் சொல்லவில்லை
அவள் மணிமொழிதான் மீறவில்லை நான்
சிரித்து பேசினாள் அதில் சிலப்பதிகாரம் கண்டேன்
கால் கொலுசை சிணுங்க செய்தாள்
அங்கு கம்பராமாயணம் கண்டேன்
கண்களில் காதல் மொழி பேசினாள்
அங்கு பாரதியின் கண்ணம்மா காதல் கண்டேன்
சிறிது வருத்தம் கொண்டேன்
என் செல்ல அன்னையிடம் தான் கேட்டேன்
வரலாறு பேசும் வளர்ந்த கவிஞர்களின்
கவிதைகளை பொத்தி வைத்திருக்கும் நீ
வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு வஞ்சனை செய்வது ஏனோ? என்றேன்
வைகை என அவள் சிரித்தாள்
நான் வளர்க்கும் மகளே
வரலாறாய் ஆனதுடி என் மூத்த தலைமுறை
அக்கவிஞர்கள் எல்லாம் என் குழந்தைகளடி
நீங்கள் எல்லாம் என் குழந்தைகளின் குட்டிகளடி
பரம்பரைகள் பெருகினால்தானே நம்
புகழ் பாரெங்கும் பரவும் என கேட்டால்
பதிலின்றி நான் நின்றேன்
மேலும் பேசினால் அவள்
மல்லிகை மலராய்
உங்கள் படைப்பு மல்ரும் போது
என் கூந்தலில் சூட்டிக்கொள்வேன்
என் இக்கால கவிஞர்களை
என் கண்ணிற்க்கு மையாய்
மாற்றிக்கொள்வேன் என்றால்
மகிழ்வுடன் நான் நின்றேன்
மணிமொழி அவள் சொன்னால்
என்னை மகிழ்விப்பவர்கள்க்கு
மணிமகுடம் உண்டென்று
காலம் வரும் போது கைசேறும்
கலங்காதே மகளே
சென்று வா,வென்று வா என்றால்
கண்விழித்து பார்த்தேன்
கனிமொழி அவளை காணவில்லை
அப்பொழுதான் கண்டறிந்தேன்
அது கனவு என்று
Last edited: