அஞ்சனுக்கு கீர்த்தியை பிடிச்சுருக்கு ஆனால் கீர்த்தி .....
கீர்த்தி அம்மா சொல்றது நியாயம் தானே அருணுக்கு காதலிக்க தெரிஞ்சுது தானே அப்போ அதில் உறுதியாக இருக்க வேண்டாமா அவ அம்மா கிட்ட உறுதியாக பேச வேண்டிய தானே
அவங்க காதலிச்சு ஏமாந்தவங்க அதனால் தன்னோட நிலை பொண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறாங்க ஆனால் அருண் மட்டும் கீர்த்திக்காக உறுதியாக நின்று இருந்தால் கண்டிப்பாக சம்மதிச்சு இருப்பாங்க
கீர்த்தி தன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறாள் என்று தெரிஞ்சும் அருண் இப்படி செய்யுறது தியாகம் இல்ல துரோகம்
அவளை பைக்கில் கூட்டிகிட்டு ஊர் சுத்தும் போதும் அவ மனசுல ஆசைய வளர்க்கும் போதும் தெரியலையா அருண்க்கு தன்னோட நிலைமை ...
அஞ்சன்கிட்ட சொன்னால் அவனே உதவி செய்வான். அவனோட அப்பாவே இவனுக்காக போய் பொண்ணு கேட்பாரே ஆனால் எதையுமே செய்யாமல் ரொம்ப ஈசியா தியாகம் செய்துட்டான்...
இவன் என்ன சொன்னாலும் கீர்த்தியோட மனசை பத்தி கொஞ்சம் யோசிச்சிருக்கணும்...
அஞ்சன் குணத்தை பத்தி தெரிஞ்சும் கீர்த்திக்கு அஞ்சன் கூட நடக்கிற இருக்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான் .இவங்க காதல் விவகாரம் கல்யாணத்துக்கு பிறகு அஞ்சனுக்கு தெரிஞ்சா கீர்த்தியோட நிலைமை என்ன ஆகும்ன்னு யோசிக்கவே மாட்டானா
கீர்த்தியோட நிலைமை ரொம்ப பாவம் தான்
அஞ்சன் கீர்த்தியை பார்க்க வரான் என்ன நடக்க போகுதோ ..
நாலும் நாலு திசையில் நிக்குது இதில் அஞ்சாவது வரதும் எப்படி இருக்க போகுதுன்னு அஞ்சனுக்கு கவலை
உனக்கு கவலையே வேண்டாம் அவளும் அஞ்சாவதா ஒரு திசையை பார்த்து நிப்பாள்