அருமையான பதிவு மிலா.கதிர்வேலன் மனதை புரிந்து கொண்டு திருமணத்தை செய்யும் முப்பாத்தா,சாம்பவியின் குணம் தெரிந்து திருமணத்துக்கு பின் இந்திராவை அங்கு அனுப்பாததுடன் வளைகாப்பு,பிரசவத்தையும் அவரே பார்த்துக் கொள்வது அருமை.
வெற்றி ஊரை விட்டு போனதுக்கும் கௌசி குடுப்பத்துக்கும் என்ன சம்மந்தம்.அம்மா சொன்னதும் தாலி கட்டியதும் கௌசியை விட்டுட்டு போன சக்திக்கு,ஆறு வருசம் கழிச்சு கௌசி மேல புதுசா பாசம் வந்ததிருப்பதும்,பொண்டாட்டின்னு சொல்றதும் ஏன்.
கௌசியை பிடிக்கவே பிடிக்காதுன்னு சொன்ன சக்தி அவளை மனைவியாக பார்க்க ஆரம்பிச்சு இருப்பது, கௌசி வேற கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதாலா.
மகன் வாழ்க்கைய பத்தி அக்கறை இல்லாமல் தான் சொன்னது நடக்கனும்னு ஆட்டம் போடற சாம்பவியை ரெண்டு அறை விடாம கபிலர் இவ்வளவு பொறுமையா பேசறாரே.
சக்தி,கௌசிட்ட காபி கேட்கவும்கௌசி அதிர்ச்சியாக,நான் கொடுக்கறப்போ வேணாம்னு சொல்லிட்டு அவட்ட கேட்கிறானே என சாம்பவி முகத்துல கடுகு போட்டா வெடிக்கும்
போல இருக்கு.
அட ராமா
படிச்சிக்கிட்டு இருந்த பிள்ளைகளுக்கு எதுக்கு சாசாசாசாம்பவி கல்யாணம் செஞ்சு வைத்தாள்?
எப்போ பார்த்தாலும் திட்டித் திட்டி தூஷித்து கொண்டிருந்த பிடிக்கவே பிடிக்காத இந்திராவின் மகளைத் தேடிப் போய் மகனுக்கு சாம்பவி மணமுடிக்க வேண்டிய அவசியமென்ன?
காரணமில்லாமல் ரேட்டு டிரஸ்ஸுடன் போகாதே
கல்யாணமானப்புறம் எந்த சாத்தான் பேய் வந்து சாம்பவி மண்டையிலே குடியேறி மணமக்களைப் பிரித்தது?
அதே சமயம் ஆறு வருஷம் கழித்து பொண்டாட்டி வேணும்ன்னு எந்த போதி மரத்தடியில் திருவாளர் ஷக்திக்கு ஞானம் பிறந்தது?
"ஏய் நீ ரொம்ப அல்காயிருக்கே நான் மயங்கிட்டேன்னு பயமாயிருக்கு ஸகி ஷகியே"-ன்னு ஷக்தி பாடத் தொடங்கிட்டானோ?
அம்மாவின் காபி கசந்து மனைவியின் கைக் காபிக்கு ஷக்தியின் மனம் ஏங்குதோ?
சாசாசசாசாசாசாம்பவி கொடுத்த காபிக்கு மகனின் கை பொத்து விட்டதா? இல்லையா?
அதை முதலில் சொல்லுங்கப்பா