மிகவும் அருமையான பதிவு மிலா."அங்க எப்படி போறது".மஞ்சரி டீச்சர்க்கு டாய்லெட் போறது எப்படின்னு பாடம் எடுக்க வேண்டிய நிலை .
அதீ கருப்பட்டி அப்பம் சாப்பிட,ஸ்டீவ் எலும்பு மலையே எழுப்பிட்டான்.இங்கே மாமனார் வீட்டில் மாப்பிள்ளை விருந்து யாருக்கு நடக்குதுன்னு தெரியலை.
அதீ இன்னொரு பொண்ண பேபிம்மான்னு கூப்பிட்டு பேசவும்,மஞ்சரி கோபத்துல பொங்கறா
பேபிம்மா கிட்ட பேசறதா நெனச்சு,மாமியார் கிட்ட பேசி மாட்டிக்கிட்டியே மஞ்சு.அதீ,வாகை, மங்கை எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டு விழிய,சந்தோஷ்க்கு கட்டிவச்சாங்களா.
அதீ ஊரில் சாப்பிடுவது,உடை அணிவது என அவர்கள் பழக்கம் எதுவும் தெரியாமல் முழிக்க.ஸ்டீவ் எல்லாவற்றையும் சாதாரணமாக செய்வது,பேச்சியம்மா வீசிய இரும்பு தடியை அசால்டா பிடிச்சு சுத்தறது எல்லாம் பார்க்கறப்போ யார் ஹீரோன்னு சந்தேகம் வந்துருச்சு.