உங்களை குழப்பாம இருக்க என்னால முடியலைன்னு சொல்லும் போதே உஷாரா இருந்து இருக்கனும்,கோதை அவங்க பொண்ணு இல்லையான்னு தேவையில்லாம லூசு போல கேட்டு பல்பு வாங்கிட்டோம்.
சி.எம் பிரச்சனை பண்ணுவார்னு தெரிஞ்சு அருள் கல்யாணத்தை பதிவு செய்வது அருமை. இது தான் கடைசி சான்ஸ்,ஓடுறதுனா இப்போவே ஓடிறலாம்.ஆனாலும் இவ பண்ற சேட்டை.ஊமைன்னு நெனச்சு இப்படி வந்து மாட்டிக்கிட்டியே கிருஷ்.
ரெண்டாவது பொண்டாட்டி பசங்கன்னு எல்லார் கேலிக்கும் ஆளாகி இருந்தவ கிட்ட,அவ வாயை அடைக்க என அபரஞ்சிதா அப்போது பொய் சொல்லியிருந்தாலும்,வேலு நாயக் இறந்த பிறகாவது உண்மை சொல்லியிருக்க வேண்டும் என கோதை சொல்வது சரி தான்.
என்னது...அத்தையா,அம்மா அவ்வளவு அழகு,அம்மா கையால சாப்பிடனும்,அம்மா மடியில தூங்கனும்னு கிருஷ், கோதை கிட்ட எப்போ சொன்னான்.இது என்ன புதுகதை
வந்ததும் அத்தைய கவுத்துட்டா.மகன் கல்யாணத்தை பற்றி கேள்விப்பட்டு கோபமாக வரும் சி.எம் கிட்ட கோதை மாட்டிட்டு முழிக்க போறாளா,கிருஷை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பாளா....
கோதை வந்ததும் செம பிட்டுப் போட்டு மாமியாரைக் கவுத்திட்டா...ஏன்பா கிருஷ்ணா இவளையா ஊமைன்னு நெனைச்ச
சி எம் வரப் போறாரு அவரையும் பேசியே சரிக்கட்டிருவா கோதை.....