அருமை தேவி மா.
ஒவ்வொரு பதிவையும் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்.
அவ்வளவு அழகான, நிறைவான கதை.
சஹானா...... எங்களுக்கு எல்லாம் மிகவும் பிடித்த கேரக்டர்.
நீங்க எவ்ளோ stories எழுதுனாலும் மிண்டா பிராணி, கொன்னு களையும்,இப்படி சஹானா பேசும் wordings எல்லாம் இந்த கதைக்கே உரிய ஸ்பெஷல்.
ரொம்ப ரசிச்சு, அனுபவிச்சு படித்தோம் ஒவ்வொரு பகுதியையும். சுப்பம்மா.......மாறவே விரும்பாத ஒரு பிரகஸ்பதி. அந்த கேரக்டரையும் கதையின் போக்கிலே எங்களை ஏத்துக்க வச்சுட்டிங்க.
சத்யா...... என்ன சொல்ல?? ஏது சொல்ல??
உங்க cricketer, businessman எல்லோரையும் தூக்கி சாப்பிட்டார் இந்த சத்யா......
ஒவ்வொரு epis லிலும் பதற்றமுடன் தலையை கோதி கொள்ளும் அழகும்,அதிகம் பேசாமல் அன்பாலே பேசும், குறும்பு சிரிப்பும் சஹானாவை விட எங்களை அள்ளி கொண்டு விட்ட கேரக்டர்.
இந்த அன்பின் ஆலாபனை எங்கள் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் இடம் பிடித்து இருக்கும். வாழ்த்துக்கள் டியர்.