அருமையான கதை. மாறுபட்ட சூழலில் வளர்ந்த, எதிரான இயல்பு கொண்ட சத்யாவும், முக்கியமாக சம்யுக்தா, ஒருவர் அடுத்தவர் மீது கொண்ட அன்பினால் எப்படி அவர்களின் இயல்புக்கு பொருந்தாத மாற்றங்களை ஏற்றுக்கொண்டார்கள், மனைவி பேசு பேசு என்றபோது பேசாத சத்யா மகள் என்று வரும்பொழுது நிறைய பேசுவது, மாமியாராக சுப்புலட்சுமியின் மோசமான மாற்றம் என கதை மாந்தர்கள் இயல்பை அருமையாக அழகு நடையில் எழுதி இருந்தீர்கள்.