Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-9
கல்யாணத்திற்கு ஒரு மாதமே
இருந்ததால் கல்யாண வேலையை
இரு வீட்டாரும் விரைவாக செய்ய
ஆரம்பித்தனர். பத்திரிகைத் தயாராகி
வர இருவீட்டாரும் உறவுகளுக்குக்
கொடுக்க ஆரம்பிக்க எல்லாம்
பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது..
கார்த்திக் வீட்டில் வேலுமணி-ஜானகி
தம்பதியர் பத்திரிகை தர, மது வீட்டில்
சுந்தரமூர்த்தியும் உமாவும் தர
ஆரம்பித்தனர். திருமுருகன் மண்டபம்,
கல்யாண வேலைகளுக்கு ஆள்
பிடிப்பது எனப் பார்க்க எல்லா
வேலைகளும் சுறுசுறுப்பாக நிற்க
நேரம் இல்லாமல் சுழன்று கொண்டு இருந்தது.
மது தான் தன் சிந்தனைகளிலேயே
இருந்தாள். எட்டு வருடங்களுக்கு
முன்னால் அவனிடம் காதல்
வயப்பட்டது எல்லாம் அடிமனதில்
இருந்து மறுபடியும் எழுந்து
மின்னலாய் உள்ளே பரவின. அன்று
அவனின் மேல் வைத்த காதல்
மனதிற்குள் எழுதி வைத்த சித்திரமாய்
இருப்பதை உணர்ந்தவள்
கார்த்திக்கின் நினைவுகளிலேயே
உழன்று கொண்டு இருந்தாள். அவன்
அன்று மறுத்ததும் இன்று அவனே
தன்னைச் சம்மதிக்க வைத்ததும் என
அனைத்தையும் நினைத்து தன்னை
அறியாமல் பல நாட்களுக்குப் பிறகு
சிரித்தாள்.
மேலும் ஒரு வாரம் செல்ல அடுத்து
வந்த ஞாயிறு அன்று, கொஞ்சம்
தாமதமாக எழுந்த மது பல் துலக்கி
முகத்தை கழுவிக் கொண்டு டீ
குடிக்கப் படி இறங்கினாள். படி பாதி
இறங்கிய மது ஹாலில் கார்த்திக்
அமர்ந்து இருப்பதைப் பார்த்து
அப்படியே நின்று விட்டாள். இவன்
என்ன இங்கே? என்று நினைத்தவள்
அப்போதுதான் தான் இரவு உடையில்
இருப்பதை உணர்ந்து அப்படியே
திரும்பி ஓடி அறைக்குள்
புகுந்துவிட்டாள். திடீரென யாரோ
ஓடும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன்
சத்தம் கேட்ட திசையைப் பார்க்க.. மது
மறைவது மட்டும் தான் அவனுக்குத்
தெரிந்தது. 'இவள் ஏன்
இப்படி ஓடுகிறாள்' என்று மனதிற்குள்
நினைத்துச் சிரிக்க, அதற்குள்
அவனை வரவேற்று விட்டு உள்ளே
சென்ற உமா.. சுந்தரமூர்த்தியையும்
திருமுருகனையும் அழைத்து வந்தார்.
"வாங்க மாப்பிள்ளை" என்றபடி
இருவரும் வந்து சோபாவில்
அமர்ந்தனர்.
"என்ன சாப்பட்றீங்க?" என உமாக்
கேட்டார்.
"இல்லை அத்தை. எதுவும் வேண்டாம்.
இப்போது தான் சாப்பிட்டு விட்டு
வந்தேன்" என்றான் கார்த்திக்.
"அப்போ ஒரு ஜூஸ் ஆவது குடிங்க"
என்று வற்புறுத்தி திருமுருகன்
சொல்ல சரியென்று தலை ஆட்டினான்
கார்த்திக். பின் வருணும் வந்து
சேர்ந்தான்.
பொதுவாக கல்யாண வேலையைப்
பற்றி பேசிக் கொண்டிருக்க, உமா
பழச்சாறை கொண்டு வந்து தந்தார்.
"கல்யாணத்திற்கு ஏதோ நம்
முறைப்படி மதுவிற்கு நகை வாங்க
வேண்டும் என்று அம்மா
சொன்னாங்க.. மதுமிதாவை கூட்டிச்
சென்று அவளுக்கு பிடித்த மாதிரி
வாங்கித் தரச் சொன்னார்கள்.
அதனால் உங்களிடம் கேட்டு மதுவை
கோவை வரை அழைத்துச்
செல்லலாம் என்று வந்தேன்" என்று
ஜூஸ் டம்ளரை கையில் வைத்தபடியே
பேசினான்.
முதலில் அனைவரும் ஒருவரை
ஒருவர் பார்க்க அவர்களின் நிலையும்
அவனுக்குப் புரிந்தது. "வந்து நம்ம
வழக்கப்படி இது பழக்கமில்லை தான்
மாமா.. ஆனால் மதுமிதாவைக் கூட்டிப்
போனால் அவளிற்குப் பிடித்த மாதிரி
வாங்கி விடலாம். ஈவ்னிங்குள்ள வந்து
விட்டுவிடுவேன்" என்று கார்த்திக்
சொல்ல பெரியவர்களால் மறுக்க
முடியவில்லை.
அனைவரும் சரி என்றுத் தலையாட்ட
"ஜூஸ் எடுத்து குடிங்க. நான் மதுவை
கிளம்பி வரச் சொல்கிறேன்" என்று
உமா மதுவின் அறைக்குச் சென்றார்.
சரி குளித்துவிட்டுக் கீழே செல்லலாம்
என்று குளித்து முடித்து ஒரு பழைய
சுடிதார் செட்டை அணிந்தவள் தன்
அன்னை வந்ததைக் கவனித்து
"என்னமா?" என்று வினவினாள்
மதுமிதா..
"மாப்பிள்ளை வந்து இருக்கிறார்..
ஏதோ முறைப்படி நகை வாங்க
வேண்டுமாம்.. அதான் உன்னைக்
கோவை வரை கூட்டிப் போக
வந்திருக்கிறார்" என்றார் உமா
மகளிடம்.
"அப்பா என்ன சொன்னார்?" என்று
யோசனையாகக் கேட்டாள் மது.
கீழே நடந்த உரையாடலை உமா
மகளிடம் தெரிவிக்க 'பரவாயில்லை
வருங்கால மாமனார் மாமியாரைக்
கூட பேச்சில் கையாலும் சாமர்த்தியம்
இருக்கு.. அதாவது நயமாகப்
பேசிகிறான்' என்று நினைத்தாள் மது.
"சரி துணி மாத்தீட்டு வரேன்" என்று
அன்னையை அனுப்பி விட்டு ஒரு ப்ளூ
ஜீன்ஸ் மற்றும் அதற்கு பொருத்தமான
ஒரு வெந்தய நிறக் குர்தா டாப்பை
அணிந்து கீழே வந்தாள். மது
சாப்பிடவில்லை என்று தெரிந்து
அவளை சாப்பிட்டு வரச் சொன்ன
கார்த்திக், சுந்தரமூர்த்தி திருமுருகன்
மற்றும் வெளியே சென்றுவிட்டு வந்த
சண்முகம்-ஈஸ்வரி தம்பதியரோடு
பேசிக்கொண்டிருந்தான்.
மது சாப்பிட்டு விட்டு வர "சரி நாங்க
கிளம்பறோம்" என்று எழுந்தவன்
அனைவரிடமும் விடைபெற்று விட்டு
முன்னால் நடந்து சென்றான். மதுவும்
அவன் பின்னால் வந்து ஏறிக்கொள்ள
காரை எடுத்தான் கார்த்திக்.
இருவருமே கொஞ்ச நேரம் எதுவும்
பேசவில்லை. கார்த்திக் தான் முதலில்
பேச்சை எடுத்தான் "உன் காதுல
அத்தை என்ன மதுமிதா
சொன்னாங்க" என்று கேட்டான்.
இவன் முன்னே கார் எடுக்க
சென்றபோது அம்மா சொன்னது
இவனுக்கு எப்படித் தெரியும் என்று
நினைத்தவள், "வந்து... ஒரு சுடிதார்
அல்லது சாரி அணிந்து செல்ல
வேண்டியதுதானே-ன்னு
சொன்னாங்க" என்று கை நகத்தைப்
பார்த்தபடிக் கூறினாள்.
"ஏன் இதுவே உனக்கு நல்லாதானே
இருக்கு" என்று சொன்னான்
கார்த்திக் இயல்பாக. மது ஒரு
புன்னகை மட்டும் சிந்தினாளே தவிர
எதுவும் பேசவில்லை.
நகைக்கடையை அடைந்தவுடன் "மது
எந்த நகைப் பிடிக்குதோ அதையே
எடுத்துக்கோ" என்றான் கார்த்திக்.
காரை பார்க் செய்து விட்டு இருவரும்
உள்ளே சென்றனர். மது ரொம்பவும்
சிறிதும் இல்லாமல் பெரிதும்
இல்லாமல் ஒரு நடுத்தர சைஸ் செட்
நகைகளையேப் பார்த்தாள்.
அவளுக்கும் இந்த மாதிரி வந்து
பார்த்துப் பழக்கம் இல்லை.. சிறிய
வயதில் எப்போதோ அம்மா
சித்தியுடன் வந்து பார்த்த நினைவு..
அதுவும் 'எனக்கு அங்க வந்தால் போர்
அடிக்கும்.. நான் வரல.. நீங்களே
ஏதாவது வாங்கிட்டு வாங்க' என்று
அடுத்த தடவை அழைத்த போது
சொன்னது நினைவு வந்தது
மதுவிற்கு. அப்போதே வந்து
இதெல்லாம் பழகி இருக்க வேண்டும்
என்று தன்னையே திட்டினாள்.
"இதில் எது நல்லா இருக்கு?" என்று
கஷ்டப்பட்டு இரண்டு செட்டைத்
தேர்ந்து எடுத்துக் கார்த்திக்கிடம்
காண்பித்துக் கேட்டாள்.
"இப்படிப் பார்த்தால் எப்படித்
தெரியும்?" என்றவன் எழுந்து அவள்
பின்னால் நின்று அந்த செட்டுகளை
வாங்கி அவள் கழுத்தில் வைத்து,
இருவரின் முன்னால் இருந்த
ஆளுயரக் கண்ணாடியைச்
சாதரணமாகப் பார்த்தான் கார்த்திக்.
அவன் தங்கை கல்யாணத்தின் போது
அம்மாவும் தங்கையும் இப்படிப் பார்த்த
நியாபகம், அதுதான் சாதாரணமாக
மதுவிடம் அப்படி வைத்துப் பார்த்தான்.
மதுதான் அவ்வளவு அருகில் அவன்
நின்றதில் மூச்சடைத்துப் போனாள்.
இவனால் எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது
என்று எண்ணினாள்.
"இந்த லோட்டஸ் டிசைன் நல்லா
இருக்கு மது" என்று நகையைத்
தேர்ந்து எடுத்தான்.
"சரி இதையே பில் போட்ருங்க" என்று
கடை ஊழியரிடம் தந்து பில்போட்டு
வாங்கி வெளியே வந்தனர்.
அவர்கள் இருவரும் கார்
பார்க்கிங்கிற்கு வர கார்த்திக்கிற்கு
ஒரு போன் கால் வந்தது. அவளைக்
காரில் உட்காரச் சொல்லிவிட்டுப்
போனை எடுத்துப் பேசிக் கொண்டு
இருந்தான்.
காரின் வலது பக்கமாக இருந்த
பில்லரின் மீது சாய்ந்தபடி நின்று
பேசிக் கொண்டு இருந்தான்
கார்த்திக்கை கவனித்தாள் மது..
காற்றில் ஆடிக் கொண்டிருந்த
அவனது அடத்தியான கேசமும்,
சுறுசுறுப்பான விழிகளும், கம்பீரமான
ஆளுமைத்தனத்துடன் ஒரு கையை
பான்ட் பாக்கெட்டில் விட்டபடி
யாருடனோ பேசிக் கொண்டு
இருந்தவனைக் காணத்
தெவிட்டவில்லை மதுவிற்கு.
மதுவின் பார்வையைக் கண்டவன்
புருவத்தைச் சுருக்க மது டக்கென்று
பார்வையைத் திருப்பி விட்டாள்.
மனம் மறைத்தாலும்
என் செயல் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை..
உன் பார்வையைக்
காணும் போதெல்லாம்
ஆனந்த யாழாய்
மாறுகிறது
என் இதயத்துடிப்பு!
என்று மதுவின் மனம் கவிதை
பாடியது.
போனை வைத்துவிட்டு வந்தவன்
"மதுமிதா.. ஒரு சின்ன வேலை.. இங்க
பக்கத்தில் தானே ஒரு மால் இருக்கு..
அங்க போயிட்டு ஒரு பத்து நிமிடத்தில்
கிளம்பி விடலாம்" என்று காரை
ஸ்டார்ட் செய்த படியே சொன்னான்.
"ம்ம்" என்று தலையை ஆட்டினாள் மது.
கார் பார்க்கிங்கில் காரை
நிறுத்திவிட்டு லிப்டில் ஏறினர்
இருவரும்.. முதல் தளம் வர கூட்டம்
கொஞ்சம் சேர்ந்தது.. இரண்டாம்
தளத்தில் இன்னும் மூன்று பேர்
சேர்ந்தனர். கூட்டம் கொஞ்சம் நெருக்க
மது தன்னை அறியாமல்
கார்த்திக்கிடம் நெருங்கி அவன்
கையைப் பற்றியபடி நின்றாள்.
மது தன் கையைப் பிடித்தவடன்
கார்த்திக்கிற்கு ஏனோ
வித்தியாசமான.. மென்மையான
உணர்வு.. கார்த்திக்கும் மதுவின்
கைகளை மென்மையாக அவளுக்கு
வலிக்காதவாறு அழுத்திப் பிடித்தான்.
அவளின் முகத்தைக் கீழ்க்கண்ணால்
அவள் என்ன ரியாக்ட் செய்கிறாள்
என்று பார்த்தான். மதுவோ இந்தக்
கூட்டம் எப்போது செல்லும் என்றபடி
முகத்தை வைத்துக் கொண்டு நேராகப்
பார்த்து நின்று கொண்டு இருந்தாள்.
"இதை எல்லாம் வைத்துக் கொண்டு
கஷ்டம் தான்.. கடவுளே.." என்று
முணுமுணுத்து மௌனமாகச்
சிரித்தபடி பெருமூச்சை விட்டான்.
பிறகு நான்காவது தளத்தில் இவர்கள்
லிப்டை விட்டு வெளியே வர மதுவிற்கு
அப்போது தான் 'அப்பாடா' என்று
இருந்தது.
இருவரும் சென்று ஒரு காஃபி
ஷாப்பில் அமர, ஒரு நாற்பது வயது
மதிக்கத்தக்க ஒருவர் வந்து அவர்கள்
இருவரின் எதிரில் அமர்ந்தார்.
"ஹலோ கார்த்திக் சார்" என்றார் அவர்
அமர்ந்தபடி.
"ஹலோ மூர்த்தி அங்கிள்.." என்றவன்
"டாக்குமென்ட் ரெடி தானே" என்று
வினவினான்.
"ரெடி தம்பி.. இந்தாங்க ஒரு தடவை
சரி பார்த்துக்கோங்க" என்று ஒரு
பைலைக் கார்த்திக்கிடம் தந்தார்.
அதை வாங்கிச் சிறிது நேரம் சரி
பார்த்தவன்.. "ஓகே பக்கா.. எல்லாம்
சரியாக இருக்கு.. நாளைக்கு ஆன
சீக்கரமே வந்து விடுங்க.. டைப் செய்து
மெயில் அனுப்பி விடலாம்" என்றான்
கார்த்திக். குரலில் கடினம் இல்லை
என்றாலும் அவனது குரல்
கட்டளையிட்டது போலத் தான்
உணர்ந்தாள் மது.
"மூர்த்தி சார் இதுதான் என் fiancee
மதுமிதா.." என்றவன் மதுவிடம்
திரும்பி "மதுமிதா இது மூர்த்தி
அங்கிள்.. என் பி.ஏ .. அப்பா
காலத்தில் இருந்து நம் ஆபிசில்
வேலையில் இருக்கிறார்" என்று
இருவருக்கும் இருவரையும் அறிமுகம்
செய்து வைத்தான்.
பின் அவரும் எழுந்து கிளம்ப
கார்த்திக்கும் மதுவும் எழுந்து
கிளம்பினர். கீழே வரும் போது
escalator இல் வந்தனர்.. இரண்டாவது
தளத்திற்கு வந்த போது தான் மது
மிதுனாவைப் பார்த்தது. தோழியைக்
கண்டவளுக்கு மிகவும் குஷியாகிப்
போனது.
கல்யாணத்திற்கு ஒரு மாதமே
இருந்ததால் கல்யாண வேலையை
இரு வீட்டாரும் விரைவாக செய்ய
ஆரம்பித்தனர். பத்திரிகைத் தயாராகி
வர இருவீட்டாரும் உறவுகளுக்குக்
கொடுக்க ஆரம்பிக்க எல்லாம்
பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது..
கார்த்திக் வீட்டில் வேலுமணி-ஜானகி
தம்பதியர் பத்திரிகை தர, மது வீட்டில்
சுந்தரமூர்த்தியும் உமாவும் தர
ஆரம்பித்தனர். திருமுருகன் மண்டபம்,
கல்யாண வேலைகளுக்கு ஆள்
பிடிப்பது எனப் பார்க்க எல்லா
வேலைகளும் சுறுசுறுப்பாக நிற்க
நேரம் இல்லாமல் சுழன்று கொண்டு இருந்தது.
மது தான் தன் சிந்தனைகளிலேயே
இருந்தாள். எட்டு வருடங்களுக்கு
முன்னால் அவனிடம் காதல்
வயப்பட்டது எல்லாம் அடிமனதில்
இருந்து மறுபடியும் எழுந்து
மின்னலாய் உள்ளே பரவின. அன்று
அவனின் மேல் வைத்த காதல்
மனதிற்குள் எழுதி வைத்த சித்திரமாய்
இருப்பதை உணர்ந்தவள்
கார்த்திக்கின் நினைவுகளிலேயே
உழன்று கொண்டு இருந்தாள். அவன்
அன்று மறுத்ததும் இன்று அவனே
தன்னைச் சம்மதிக்க வைத்ததும் என
அனைத்தையும் நினைத்து தன்னை
அறியாமல் பல நாட்களுக்குப் பிறகு
சிரித்தாள்.
மேலும் ஒரு வாரம் செல்ல அடுத்து
வந்த ஞாயிறு அன்று, கொஞ்சம்
தாமதமாக எழுந்த மது பல் துலக்கி
முகத்தை கழுவிக் கொண்டு டீ
குடிக்கப் படி இறங்கினாள். படி பாதி
இறங்கிய மது ஹாலில் கார்த்திக்
அமர்ந்து இருப்பதைப் பார்த்து
அப்படியே நின்று விட்டாள். இவன்
என்ன இங்கே? என்று நினைத்தவள்
அப்போதுதான் தான் இரவு உடையில்
இருப்பதை உணர்ந்து அப்படியே
திரும்பி ஓடி அறைக்குள்
புகுந்துவிட்டாள். திடீரென யாரோ
ஓடும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன்
சத்தம் கேட்ட திசையைப் பார்க்க.. மது
மறைவது மட்டும் தான் அவனுக்குத்
தெரிந்தது. 'இவள் ஏன்
இப்படி ஓடுகிறாள்' என்று மனதிற்குள்
நினைத்துச் சிரிக்க, அதற்குள்
அவனை வரவேற்று விட்டு உள்ளே
சென்ற உமா.. சுந்தரமூர்த்தியையும்
திருமுருகனையும் அழைத்து வந்தார்.
"வாங்க மாப்பிள்ளை" என்றபடி
இருவரும் வந்து சோபாவில்
அமர்ந்தனர்.
"என்ன சாப்பட்றீங்க?" என உமாக்
கேட்டார்.
"இல்லை அத்தை. எதுவும் வேண்டாம்.
இப்போது தான் சாப்பிட்டு விட்டு
வந்தேன்" என்றான் கார்த்திக்.
"அப்போ ஒரு ஜூஸ் ஆவது குடிங்க"
என்று வற்புறுத்தி திருமுருகன்
சொல்ல சரியென்று தலை ஆட்டினான்
கார்த்திக். பின் வருணும் வந்து
சேர்ந்தான்.
பொதுவாக கல்யாண வேலையைப்
பற்றி பேசிக் கொண்டிருக்க, உமா
பழச்சாறை கொண்டு வந்து தந்தார்.
"கல்யாணத்திற்கு ஏதோ நம்
முறைப்படி மதுவிற்கு நகை வாங்க
வேண்டும் என்று அம்மா
சொன்னாங்க.. மதுமிதாவை கூட்டிச்
சென்று அவளுக்கு பிடித்த மாதிரி
வாங்கித் தரச் சொன்னார்கள்.
அதனால் உங்களிடம் கேட்டு மதுவை
கோவை வரை அழைத்துச்
செல்லலாம் என்று வந்தேன்" என்று
ஜூஸ் டம்ளரை கையில் வைத்தபடியே
பேசினான்.
முதலில் அனைவரும் ஒருவரை
ஒருவர் பார்க்க அவர்களின் நிலையும்
அவனுக்குப் புரிந்தது. "வந்து நம்ம
வழக்கப்படி இது பழக்கமில்லை தான்
மாமா.. ஆனால் மதுமிதாவைக் கூட்டிப்
போனால் அவளிற்குப் பிடித்த மாதிரி
வாங்கி விடலாம். ஈவ்னிங்குள்ள வந்து
விட்டுவிடுவேன்" என்று கார்த்திக்
சொல்ல பெரியவர்களால் மறுக்க
முடியவில்லை.
அனைவரும் சரி என்றுத் தலையாட்ட
"ஜூஸ் எடுத்து குடிங்க. நான் மதுவை
கிளம்பி வரச் சொல்கிறேன்" என்று
உமா மதுவின் அறைக்குச் சென்றார்.
சரி குளித்துவிட்டுக் கீழே செல்லலாம்
என்று குளித்து முடித்து ஒரு பழைய
சுடிதார் செட்டை அணிந்தவள் தன்
அன்னை வந்ததைக் கவனித்து
"என்னமா?" என்று வினவினாள்
மதுமிதா..
"மாப்பிள்ளை வந்து இருக்கிறார்..
ஏதோ முறைப்படி நகை வாங்க
வேண்டுமாம்.. அதான் உன்னைக்
கோவை வரை கூட்டிப் போக
வந்திருக்கிறார்" என்றார் உமா
மகளிடம்.
"அப்பா என்ன சொன்னார்?" என்று
யோசனையாகக் கேட்டாள் மது.
கீழே நடந்த உரையாடலை உமா
மகளிடம் தெரிவிக்க 'பரவாயில்லை
வருங்கால மாமனார் மாமியாரைக்
கூட பேச்சில் கையாலும் சாமர்த்தியம்
இருக்கு.. அதாவது நயமாகப்
பேசிகிறான்' என்று நினைத்தாள் மது.
"சரி துணி மாத்தீட்டு வரேன்" என்று
அன்னையை அனுப்பி விட்டு ஒரு ப்ளூ
ஜீன்ஸ் மற்றும் அதற்கு பொருத்தமான
ஒரு வெந்தய நிறக் குர்தா டாப்பை
அணிந்து கீழே வந்தாள். மது
சாப்பிடவில்லை என்று தெரிந்து
அவளை சாப்பிட்டு வரச் சொன்ன
கார்த்திக், சுந்தரமூர்த்தி திருமுருகன்
மற்றும் வெளியே சென்றுவிட்டு வந்த
சண்முகம்-ஈஸ்வரி தம்பதியரோடு
பேசிக்கொண்டிருந்தான்.
மது சாப்பிட்டு விட்டு வர "சரி நாங்க
கிளம்பறோம்" என்று எழுந்தவன்
அனைவரிடமும் விடைபெற்று விட்டு
முன்னால் நடந்து சென்றான். மதுவும்
அவன் பின்னால் வந்து ஏறிக்கொள்ள
காரை எடுத்தான் கார்த்திக்.
இருவருமே கொஞ்ச நேரம் எதுவும்
பேசவில்லை. கார்த்திக் தான் முதலில்
பேச்சை எடுத்தான் "உன் காதுல
அத்தை என்ன மதுமிதா
சொன்னாங்க" என்று கேட்டான்.
இவன் முன்னே கார் எடுக்க
சென்றபோது அம்மா சொன்னது
இவனுக்கு எப்படித் தெரியும் என்று
நினைத்தவள், "வந்து... ஒரு சுடிதார்
அல்லது சாரி அணிந்து செல்ல
வேண்டியதுதானே-ன்னு
சொன்னாங்க" என்று கை நகத்தைப்
பார்த்தபடிக் கூறினாள்.
"ஏன் இதுவே உனக்கு நல்லாதானே
இருக்கு" என்று சொன்னான்
கார்த்திக் இயல்பாக. மது ஒரு
புன்னகை மட்டும் சிந்தினாளே தவிர
எதுவும் பேசவில்லை.
நகைக்கடையை அடைந்தவுடன் "மது
எந்த நகைப் பிடிக்குதோ அதையே
எடுத்துக்கோ" என்றான் கார்த்திக்.
காரை பார்க் செய்து விட்டு இருவரும்
உள்ளே சென்றனர். மது ரொம்பவும்
சிறிதும் இல்லாமல் பெரிதும்
இல்லாமல் ஒரு நடுத்தர சைஸ் செட்
நகைகளையேப் பார்த்தாள்.
அவளுக்கும் இந்த மாதிரி வந்து
பார்த்துப் பழக்கம் இல்லை.. சிறிய
வயதில் எப்போதோ அம்மா
சித்தியுடன் வந்து பார்த்த நினைவு..
அதுவும் 'எனக்கு அங்க வந்தால் போர்
அடிக்கும்.. நான் வரல.. நீங்களே
ஏதாவது வாங்கிட்டு வாங்க' என்று
அடுத்த தடவை அழைத்த போது
சொன்னது நினைவு வந்தது
மதுவிற்கு. அப்போதே வந்து
இதெல்லாம் பழகி இருக்க வேண்டும்
என்று தன்னையே திட்டினாள்.
"இதில் எது நல்லா இருக்கு?" என்று
கஷ்டப்பட்டு இரண்டு செட்டைத்
தேர்ந்து எடுத்துக் கார்த்திக்கிடம்
காண்பித்துக் கேட்டாள்.
"இப்படிப் பார்த்தால் எப்படித்
தெரியும்?" என்றவன் எழுந்து அவள்
பின்னால் நின்று அந்த செட்டுகளை
வாங்கி அவள் கழுத்தில் வைத்து,
இருவரின் முன்னால் இருந்த
ஆளுயரக் கண்ணாடியைச்
சாதரணமாகப் பார்த்தான் கார்த்திக்.
அவன் தங்கை கல்யாணத்தின் போது
அம்மாவும் தங்கையும் இப்படிப் பார்த்த
நியாபகம், அதுதான் சாதாரணமாக
மதுவிடம் அப்படி வைத்துப் பார்த்தான்.
மதுதான் அவ்வளவு அருகில் அவன்
நின்றதில் மூச்சடைத்துப் போனாள்.
இவனால் எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது
என்று எண்ணினாள்.
"இந்த லோட்டஸ் டிசைன் நல்லா
இருக்கு மது" என்று நகையைத்
தேர்ந்து எடுத்தான்.
"சரி இதையே பில் போட்ருங்க" என்று
கடை ஊழியரிடம் தந்து பில்போட்டு
வாங்கி வெளியே வந்தனர்.
அவர்கள் இருவரும் கார்
பார்க்கிங்கிற்கு வர கார்த்திக்கிற்கு
ஒரு போன் கால் வந்தது. அவளைக்
காரில் உட்காரச் சொல்லிவிட்டுப்
போனை எடுத்துப் பேசிக் கொண்டு
இருந்தான்.
காரின் வலது பக்கமாக இருந்த
பில்லரின் மீது சாய்ந்தபடி நின்று
பேசிக் கொண்டு இருந்தான்
கார்த்திக்கை கவனித்தாள் மது..
காற்றில் ஆடிக் கொண்டிருந்த
அவனது அடத்தியான கேசமும்,
சுறுசுறுப்பான விழிகளும், கம்பீரமான
ஆளுமைத்தனத்துடன் ஒரு கையை
பான்ட் பாக்கெட்டில் விட்டபடி
யாருடனோ பேசிக் கொண்டு
இருந்தவனைக் காணத்
தெவிட்டவில்லை மதுவிற்கு.
மதுவின் பார்வையைக் கண்டவன்
புருவத்தைச் சுருக்க மது டக்கென்று
பார்வையைத் திருப்பி விட்டாள்.
மனம் மறைத்தாலும்
என் செயல் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை..
உன் பார்வையைக்
காணும் போதெல்லாம்
ஆனந்த யாழாய்
மாறுகிறது
என் இதயத்துடிப்பு!
என்று மதுவின் மனம் கவிதை
பாடியது.
போனை வைத்துவிட்டு வந்தவன்
"மதுமிதா.. ஒரு சின்ன வேலை.. இங்க
பக்கத்தில் தானே ஒரு மால் இருக்கு..
அங்க போயிட்டு ஒரு பத்து நிமிடத்தில்
கிளம்பி விடலாம்" என்று காரை
ஸ்டார்ட் செய்த படியே சொன்னான்.
"ம்ம்" என்று தலையை ஆட்டினாள் மது.
கார் பார்க்கிங்கில் காரை
நிறுத்திவிட்டு லிப்டில் ஏறினர்
இருவரும்.. முதல் தளம் வர கூட்டம்
கொஞ்சம் சேர்ந்தது.. இரண்டாம்
தளத்தில் இன்னும் மூன்று பேர்
சேர்ந்தனர். கூட்டம் கொஞ்சம் நெருக்க
மது தன்னை அறியாமல்
கார்த்திக்கிடம் நெருங்கி அவன்
கையைப் பற்றியபடி நின்றாள்.
மது தன் கையைப் பிடித்தவடன்
கார்த்திக்கிற்கு ஏனோ
வித்தியாசமான.. மென்மையான
உணர்வு.. கார்த்திக்கும் மதுவின்
கைகளை மென்மையாக அவளுக்கு
வலிக்காதவாறு அழுத்திப் பிடித்தான்.
அவளின் முகத்தைக் கீழ்க்கண்ணால்
அவள் என்ன ரியாக்ட் செய்கிறாள்
என்று பார்த்தான். மதுவோ இந்தக்
கூட்டம் எப்போது செல்லும் என்றபடி
முகத்தை வைத்துக் கொண்டு நேராகப்
பார்த்து நின்று கொண்டு இருந்தாள்.
"இதை எல்லாம் வைத்துக் கொண்டு
கஷ்டம் தான்.. கடவுளே.." என்று
முணுமுணுத்து மௌனமாகச்
சிரித்தபடி பெருமூச்சை விட்டான்.
பிறகு நான்காவது தளத்தில் இவர்கள்
லிப்டை விட்டு வெளியே வர மதுவிற்கு
அப்போது தான் 'அப்பாடா' என்று
இருந்தது.
இருவரும் சென்று ஒரு காஃபி
ஷாப்பில் அமர, ஒரு நாற்பது வயது
மதிக்கத்தக்க ஒருவர் வந்து அவர்கள்
இருவரின் எதிரில் அமர்ந்தார்.
"ஹலோ கார்த்திக் சார்" என்றார் அவர்
அமர்ந்தபடி.
"ஹலோ மூர்த்தி அங்கிள்.." என்றவன்
"டாக்குமென்ட் ரெடி தானே" என்று
வினவினான்.
"ரெடி தம்பி.. இந்தாங்க ஒரு தடவை
சரி பார்த்துக்கோங்க" என்று ஒரு
பைலைக் கார்த்திக்கிடம் தந்தார்.
அதை வாங்கிச் சிறிது நேரம் சரி
பார்த்தவன்.. "ஓகே பக்கா.. எல்லாம்
சரியாக இருக்கு.. நாளைக்கு ஆன
சீக்கரமே வந்து விடுங்க.. டைப் செய்து
மெயில் அனுப்பி விடலாம்" என்றான்
கார்த்திக். குரலில் கடினம் இல்லை
என்றாலும் அவனது குரல்
கட்டளையிட்டது போலத் தான்
உணர்ந்தாள் மது.
"மூர்த்தி சார் இதுதான் என் fiancee
மதுமிதா.." என்றவன் மதுவிடம்
திரும்பி "மதுமிதா இது மூர்த்தி
அங்கிள்.. என் பி.ஏ .. அப்பா
காலத்தில் இருந்து நம் ஆபிசில்
வேலையில் இருக்கிறார்" என்று
இருவருக்கும் இருவரையும் அறிமுகம்
செய்து வைத்தான்.
பின் அவரும் எழுந்து கிளம்ப
கார்த்திக்கும் மதுவும் எழுந்து
கிளம்பினர். கீழே வரும் போது
escalator இல் வந்தனர்.. இரண்டாவது
தளத்திற்கு வந்த போது தான் மது
மிதுனாவைப் பார்த்தது. தோழியைக்
கண்டவளுக்கு மிகவும் குஷியாகிப்
போனது.