Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-8
அத்தனை நேரம் இருவருமே அவரவர்
கற்பனையில் மூழ்கி இருந்தனர். ஒரு
முடிவு செய்த கார்த்திக் கோயம்பத்தூர்
மெரைன் கல்லூரி கடந்தவுடன் காரை
ஒரு ஓரமாக நல்ல மரங்கள் நிறைந்த
சாலையில் நிறுத்தினான்.
கார் நின்றதை உணர்ந்த மது
கார்த்திக்கை யோசனையோடுப்
பார்த்தாள். அவளை ஒரு கணம் ரியர்
வ்யூ மிரர் வழியாகப் பார்த்தவன்
காரை விட்டு இறங்கி கதவைச்
சாத்திவிட்டு, கீழே குனிந்து "உன்னிடம்
பேச வேண்டும் மதுமிதா. கீழே
இறங்கு" என்ற கட்டளைக் குரலில்
சொல்லிவிட்டு காரை முன்புறமாகச்
சுற்றி வந்து முன்னால் இருந்த
கதவின் மேல் சாய்ந்தபடி நின்றான்.
சுற்றி வரும் போது தான் அவனை
முழுதாகப் பார்த்தாள் மதுமிதா.
நான்கு வருடங்களுக்கு முன்னால்
பார்த்தவனுக்கும் இப்போது
இருப்பவனுக்கும் நிறைய
வித்தியாசங்கள். அன்று கொஞ்சம்
மெலிதாகவே காணப்பட்டவன் இன்று
கம்பீரமான தோற்றத்துடன் அவன்
தொழிலுக்கே உண்டான நிமிர்வுடன்
இருப்பதைப் பார்த்தவளுக்கு மனம்
ரசிக்கவில்லை என்று சொன்னால்
அவளே நம்ப மாட்டாள்.
"ஏய் சைட் அடிக்கிற நேரமா இது?"
என்று தன் மூளை எச்சரிக்கை செய்ய
சுயநினைவு திரும்பியவள் கார்
கதவைத் திறந்தாள்.
என்ன சொல்லப்போறானோ என்று
நினைத்தபடியே காரை விட்டு கீழே
இறங்கிய மது சற்றுத் தள்ளி, அவன்
முகம் காண சக்தி இல்லாமல் தலை
குனிந்து அவன் புறம் திரும்பி
நின்றிருந்தாள்.
"என்ன இன்னும் லவ் பண்றையா
மதுமிதா?" என்று நேரிடையாகக்
கேட்டு அவளை அதிர வைத்தான்
கார்த்திக்.
திட்டப்போகிறான் அல்லது இந்த
எண்ணத்தை விட்டுவிடு என்று
சொல்லுவான் என அதிகாரக் குரலை
எதிர்ப்பார்த்த மதுவிற்கு இது அதிர்ச்சி
தான். என்ன சொல்லுவது என்று
மதுவிற்கு புரியவில்லை.
"நான் கேட்டால் எனக்கு பதில் வர
வேண்டும் மதுமிதா" என்றான்
அதிகாரக்குரலில் இப்போது.
"ஆமாம்" என்று தலை அசைத்தாள் மது.
காதலித்தாலும் அவள் கல்யாணம்
என்ற ஒன்றே தனக்கு வேண்டாம்
என்று தானே நினைத்தாள்.
"ஆனால்...." என்று மது ஆரம்பிக்க..
அவளது பேச்சைக் கண்டு கொள்ளாது
அவன் தன் பேச்சை ஆரம்பித்தான்.
"அப்போ நான்கு வருடங்களுக்கு
முன்னால் நான் சொன்னது எதையும்
நீ உன் மண்டையில்
ஏற்றிக்கொள்ளவில்லை.
அப்படித்தானே? "என்றான் குத்தலாக.
மதுவிற்கு அவன் குத்தலாகப் பேசியது
புரியாமல் இல்லை. அவன் பேச்சு
கொஞ்சம் கோபத்தையும் கிளப்பியது.
"என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் உங்களை கல்யாணம் செய்ய
நான் நினைக்கவில்லை" என்று
எங்கோ பார்த்தபடி தன் மனதில்
உள்ளதைச் சொல்லிவிட்டாள் மது.
"அப்படி இருக்க ஏன் எல்லாரிடமும்
சொன்னாய்" என மேலும் குத்தினான்.
"நான்...." என்று நிமிர்ந்து அவன்
முகத்தைப் பார்த்தவள் அவன்
பார்வையைத் தாங்காது தன்
விழிகளை அவன் விழிகளில் இருந்து
பிரித்து எங்கோ பார்த்தபடி, அன்று
அவன் அன்னை வந்த போது நடந்த
அனைத்தையும் கூறினாள்.
மேலும் "என்னால் மனதில் ஒருவரை
வைத்துக் கொண்டு
இன்னொருவனுக்கு துரோகம் செய்ய
முடியாது. அதான் உண்மையைச்
சொல்லிவிட்டேன். விஷயம்
தெரிந்தால் என்னை யாரையும்
கல்யாணம் செய்து கொள்ளச்
சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
உங்களைக் கல்யாணம் செய்ய
எண்ணி நான் அதை சொல்லவில்லை.
ஏதோ எல்லோரும் குடுத்த பிரஷரில்
சொல்லிவிட்டேன். என்னை மன்னித்து
விடுங்கள்.. சாரி" என்றாள் மது.
அப்போதும் அவனது நிலை வீட்டில்
என்னவோ என்று மனதில் யோசிக்கத்
தவறவில்லை.
"அப்போ நீ என்னைக் கல்யாணம்
செய்ய எண்ணி எல்லாரின்
முன்னிலையில் என்னைக்
காதலிப்பதாகச் சொல்லவில்லை..
அப்படித்தானே?" எனக் கேட்டான்.
"ஆமாம்" என்று தலையை ஆட்டினாள்
மது.
"சரி. நான் இல்லை என்றாலும்.. உன்
வீட்டில் உனக்கு வேறு யாருடனாவது
கட்டாயக் கல்யாணம் செய்து
வைத்தால்?" என அடுத்தக் கார்த்திக்
கேட்டு அவளது உள்ளத்தை நடுங்க
வைத்தான்.
"அப்படி என் கை கால்களைக் கட்டி
மணமேடையில் யாராலும் உட்கார
வைக்க முடியாது" எனத் தெளிவானக்
குரலில் மதுவிடம் பதில் வந்தது.
இப்போ எதுக்கு இந்தக் கேள்வி
எல்லாம் கேட்கிறான் என்று மது
நினைக்கவில்லை.
"நம்ம ஊர்ல இந்த எமோஷனல் ப்ளாக்
மெயில்னு ஒன்னு இருக்கு அத
யோசிச்சுப் பாத்தையா?" என்று
கைகளை மார்பிற்கு குறுக்காகக்
கட்டியபடிக் கேட்டான்.
"அப்படி யாரும் என் வீட்டில் என்னைப்
புரிந்து கொள்ளாமல் நடக்க
மாட்டார்கள்.. என்னை
கஷ்டப்படுத்தவும் மாட்டார்கள்"
என்று திடமானக் குரலில் கூறிய
மதுவை அவன் கண்கள் இடுங்கப்
பார்த்ததை அவள் அறியவில்லை.
"அப்போ உன் வீட்டினரை நீ புரிந்து
கொள்ளாமல் நடக்கப் போகிறாய்..
அதாவது அவர்களை கஷ்டப்படுத்தப்
போகிறாய்.. அப்படித்தானே" எனக்
கேட்டான்.
"நானா? நீங்க சொல்றது எனக்குப்
புரியவில்லை" என்றாள் அவனை
நேராகப் பார்த்து.
"அதாவது கல்யாணம் பண்ணிக்
கொள்ளாமல் இருந்து உன்
குடும்பத்தினரை கஷ்டப் படுத்தப்
போகிறாய்.. அப்படித்தானே?" என
மதுவிடன் தன் கேள்வியை வைத்து
குழப்பினான்.
மதுவிற்கு அவன் என்ன சொல்ல
வருகிறான் என்பது புரிந்துவிட்டது..
"அதற்காக இஷ்டம் இல்லாத
கல்யாணத்தைச் செய்து கொண்டு
என்னால் நோக முடியாது. அது
எனக்கு மட்டும் இல்லாமல்
அடுத்தவருக்கும் பாதிப்பே.." என்றாள்
மது.
"அப்போது உன் குடும்பத்தினரைப்
பற்றி உனக்குக் கவலை இல்லையா?"
என்று கேட்டான்.
"நீங்க என்னைக் கேள்வி கேட்டே
குழப்பறீங்க" என்றாள் மது
வெடுக்கென.
"நீ ஒன்னும் கன்ப்யூஸ் ஆக வேண்டாம்
மதுமிதா. நேரடியாகவே சொல்றேன்
கேள்.. இப்போ நீ உன் கஷ்டத்தப் பத்தி
மட்டும் யோசிக்கற.. ஆனா நீன்னா நீ
மட்டும் இல்லை. உன்ன சுத்தி
இருக்கவங்க சந்தோஷம் தான் உன்
சந்தோஷம்.. உன் சந்தோஷம் தான்
அவங்க சந்தோஷம்.. சரி உன்
சந்தோஷத்துக்காக அவங்க உன்ன
அப்படியே உன் இஷ்டப்படி
விட்டுவிடுகிறார்கள் என்றே வைத்துக்
கொள்வோம். ஆனால் நமது சமதாயம்
என்று ஒன்று இருக்கிறதே.. அது
நியாபகம் இருக்கிறதா உனக்கு.. உன்
முன்னால் பேசவில்லை என்றாலும் நீ
இல்லாத போது உன்னை ஏசுவார்கள்..
நீ இவ்வளவு நாள் டாக்டர் படிச்சது..
லண்டன்ல படிச்சது எல்லாமே மறந்து
போய் இந்த கல்யாண விஷயத்தைப்
போட்டு அலசிவிடுவார்கள். நீ மட்டும்
இதில் பாதிக்கப்படப் போவதில்லை..
உன் குடும்பமும் உன் குடும்ப
கவுரவமும் தான்" என்று தெளிவாக
மதுவிற்கு விளக்கினான்.
எல்லாவற்றையும் கேட்ட மதுவிற்கு
தலை வலி வராதக் குறைதான்.
"இப்போது நான் என்ன செய்ய
வேண்டும் என்று சொல்ல வரீங்க"
என்று ஒரு பக்கமாகத் தலையைத்
தேய்த்து விட்டுபடிக் கேட்டாள்.
"வேறு வழி இல்லை மதுமிதா.
எனக்கும் உனக்கும் தான் திருமணம்
நடக்கப்போகிறது" என்றான்
அமைதியான குரலில்.
மது அவன் சொன்னதைக் கேட்டு
அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.
"எ.. என்ன சொல்றீங்க நீங்க?"
என்றாள்.
"ஆமாம்" என்றான் கூலாக.
"நீங்க சொல்றது எனக்கு புரியல?"
என்று விழித்தாள் மது.
"கல்யாணம் வேண்டாம் என்று
சொன்ன நீயும், உங்கள் வீட்டில் என்
அம்மாவின் முன்னால் என்னைக்
காதலிப்பதாக, அதுவும் எட்டு
வருடங்களாக காதலிக்கிறேன் என்று
கூறிவிட்டாய், அதான் சான்ஸ் என்று
கல்யாணத்தைத் தள்ளி போட்டுக்
கொண்டிருந்த என்னிடம், என் அம்மா
இப்போது விடாப்பிடியாக நிற்கிறார்.
நானே இது விஷயமாக உன்னிடம்
பேச வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். ஆனால் தானாக
நடந்த இந்த சந்திப்பு சாதகமாகிப்
போனது பார். இன்னும்
யோசித்துப்பார் உன்னை
என்னைவிட்டுக் கூட்டி வரச் சொல்லி இருக்கிறார்கள். உன் வீட்டிலும் சரி
என் வீட்டிலும் சரி இந்தக் கல்யாணம்
அனைவருக்கும் சம்மதமே. நான்
இரண்டு நாட்களில் சொல்கிறேன்
என்று என் அம்மாவிடம் சொன்னதால்
தான் என் அம்மா உன் வீட்டில்
இன்னும் பேசவில்லை.. நானும் என்
அம்மா கிட்ட என் முடிவ
சொல்லிடறேன் " என்று தன் செய்த
முடிவுகளைச் சொன்னான்.
"உங்க அம்மா கிட்ட என்ன சொல்லப்
போறிங்க?" என மது கேட்டாள்.
"என் அம்மா என்னை விடமாட்டார்.
அதுவும் இல்லாமல் மறுப்பதற்கும்
காரணம் இருப்பதாகத்
தெரியவில்லை" என்று தோளைக்
குலுக்கியபடி பதில் அளித்தான்.
"ஆனால் என்னால் உங்களுக்கு நல்ல
மனைவியாக இருக்க முடியும் என்று
தோன்றவில்லை" என்று மேல்
உதட்டைக் கடித்தபடி மது சொல்ல
இப்போது அதிர்ச்சி அடைந்தது
கார்த்திக் தான்.
"ஏனோ?" என்றான் கார்த்திக்.
"அது.. என் வாழ்க்கையில் நடந்த சில
சம்பவங்கள் காரணம் ஆயிருச்சு..
அதனால் தான் சொல்கிறேன்.."
என்றாள் மது. தொண்டை வறண்டது
போல உணர்ந்தாள் மது. 'அது மட்டும்
நடக்காமல் இருந்திருந்தால்
இப்போது..' என்று மதுவின் மனம்
நினைத்து ஏங்கியது.
"என்ன நடந்தது மதுமிதா.. நான் தான்
கல்யாணத்தில் பிரச்சினையாக
இருப்பேன் என்று நினைத்தேன்..
ஆனால் இப்போது நீயே வேண்டாம்
என்கிறாய். நீ கல்யாணமே வேண்டாம்
என்று சொல்லும் அளவிற்கு என்ன
ஆயிற்று.. நான் உன்னை பர்ஸ்ட்
வேண்டாம்-ன்னு சொன்ன கோபமா? "
என வினவினான்.
"அதெல்லாம் இல்லை.." என்று கதவை
இடமும் வலமும் ஆட்டியவள் "இல்லை
வேண்டாம்.. கிளம்பலாம்.. காரை
எடுங்க" என்று மது கார் கதவைத்
திறக்க.. கதவைப் பிடித்து கார்த்திக்
சாத்தினான் கார்த்திக்.
"நீ சொல்லாமல் காரை எடுக்க
மாட்டேன் மதுமிதா.. என்ன என்று
சொல்லு.. அப்படித் தீர்க்க முடியாத
பிரச்சினை என்று எதுவும் இல்லை..
உன்னைக் கட்டாயப் படுத்துகிறேன்
என்று நினைக்காதே.. நீ இன்று
வாயைத் திறந்து சொன்னால் தான்
இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல
முடியும்" என்று அழுத்தமானக் குரலில்
கூறினான்.
"......"
"நீ அமைதியா இருந்தா நான்
கிளம்பலாம்ன்னு சொல்லிடுவேன்னு
மட்டும் நினைக்காதே" என்று விடாமல் இடும்புப் பிடியின் உறுதியோடு
நின்றவனிடம் மதுவால் இனியும்
முடியாது என்று தோன்றியது.
"அ..அது " என்று தயங்கியவள் பின்பு
அந்த ஸ்போக்கன் இங்லீஷ் க்ளாஸில்
நடந்ததைக் கூறினாள். சொல்லி
முடிக்கும் போதுதான் மது கண்களில்
கண்ணீர் உருண்டு ஓடியதை
உணர்ந்தாள். ஒரு வித நடுக்கத்துடன்
சொல்லி முடித்தவள் நிமிர்ந்து
அவனைப் பார்க்க அவன் முகம் இறுகி
இருந்தது.
"எதுவும் நடக்கலனாலும் அந்த
விஷயம் எனக்கு அருவெருப்பு
தந்திருச்சு. எத்தனையோ நாள் அது
கனவில் வந்து தூக்கம் இல்லாமல்
தவித்திருக்கிறேன். இப்போதும் அது
சில நாள் தொடர்கிறது. அதனால
தான் சொல்றேன் புரிஞ்சுக்கோங்க.
எனக்கு பயமாவும் இருக்கு" என்று
தவிப்புடன் கூறினாள் மது.
"புரிகிறது. ஆனால் இப்படி தவிக்கும்
அளவிற்கு ஒன்றும் இல்லை என்று
நான் சொல்ல வரவில்லை. உன்
இடத்தில் இருந்து பார்த்தால் தான்
தெரியும். ஆனால் அதை மறந்து விடு
மதுமிதா. ஒரு வாழ்க்கை இருக்குல
எல்லாருக்கும். அதை நீ வாழ
வேண்டாமா?" என்று புரிய வைக்கும்
எண்ணத்துடன் பேசினான் கார்த்திக்.
"எனக்கு என்று ஒரு வாழ்க்கை
இருக்கு தான். நான் இல்லை என்று
சொல்லவில்லை.. ஆனால் என்னால்
நார்மல் கப்பில்ஸ் மாதிரி இருக்க
முடியும்னு தோனலை" என்று
அவனிடம் கூறினாள்.
"மதுமிதா ஒரு விஷயத்தைப்
புரிஞ்சிக்கோ. நான் உன்ன அந்தக்
கடந்த கால விஷயத்தில்
பாராட்டத்தான் செய்வேன்.. நீ தப்பிச்சு
வந்ததும் இல்லாம அவனை
அடிச்சுட்டுதான் வந்திருக்க.. எனக்கு
புரியுது நீ என்ன மாதிரியான
கஷ்டத்தை அனுபவிச்சிருக்கன்னு..
என்ன பொருத்த வரைக்கும் இஷ்டம்
இல்லைனா மனைவியா இருந்தாக்
கூடத் தொடக்கூடாது என்று தான்
நினைப்பேன்.. எனக்குத் தெரிந்து உன்
பதினாறு பதினேழு வயதில் அந்த
சம்பவம் நடந்திருக்கு என்று
நினைக்கிறேன்.. முழுதாக விவரம்
தெரியாத வயதிலேயே தப்பித்து
வந்திருக்கிறாய்.. இது எல்லாப்
பெண்களுக்கு நடக்கும்.. ஆனா அது
எல்லாம் பப்ளிக் ப்ளேஸ்ல.. பட்
உனக்கு வேற மாதிரி.. நீ ஒரு டாக்டர்..
நீயே இந்த மாதிரி விஷயங்களுக்கு
இப்படி குறுகி உட்காரலாமா? இந்த
மாதிரி நாய்கள் எல்லாப்
பக்கங்களிலும் இருக்கானுக.. அந்த
மாதிரி நாய்களை" என்று பல்லைக்
கடித்தவன்.. பின் கோபத்தை அடக்கி
"அந்தச் சம்பவத்தை மறந்துவிடு
மதுமிதா.." என்றான் அமைதியான
குரலில்.
"தயவு செய்து நான் சொல்ல
வருவதைப் புரிஞ்சுக்கோங்க.
என்னால உ..உங்க கூட...ஒரு ஆணின்
எதிர்பார்ப்புக்கு இருக்க முடியுமானு
தெரியல. என்னால ஓப்பனா சொல்ல
முடியல" என்றாள் மது சங்கடமானக்
குரலில்.
"ஒரு தம்பதி என்றால் தாம்பத்தியம்
என்று மட்டும் இல்லை மதுமிதா..
அதையும் தாண்டி நிறைய உள்ளது.."
என்றான் கார்த்திக்.
"அது எனக்கும் தெரியும்.. ஆனால்
அத்தனைகளில் ஒன்று இல்லை
என்றால் கூட நமது இரண்டு பேரின்
வாழ்க்கையும் முழுமை அடையாது.
அதுவும் இல்லாமல் என்னால் நீங்கள்
அதில் கஷ்டப்பட நேரிடும். எல்லோரும்
சாதாரண மனிதன் தானே. என்
சுயநலத்திற்காக என் குடும்ப
சந்தோஷத்திற்காக நான் ஏன்
உங்களைச் சிரமப்பட வைக்க
வேண்டும் சொல்லுங்க" என்று
அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
அத்தனை நேரம் இருவருமே அவரவர்
கற்பனையில் மூழ்கி இருந்தனர். ஒரு
முடிவு செய்த கார்த்திக் கோயம்பத்தூர்
மெரைன் கல்லூரி கடந்தவுடன் காரை
ஒரு ஓரமாக நல்ல மரங்கள் நிறைந்த
சாலையில் நிறுத்தினான்.
கார் நின்றதை உணர்ந்த மது
கார்த்திக்கை யோசனையோடுப்
பார்த்தாள். அவளை ஒரு கணம் ரியர்
வ்யூ மிரர் வழியாகப் பார்த்தவன்
காரை விட்டு இறங்கி கதவைச்
சாத்திவிட்டு, கீழே குனிந்து "உன்னிடம்
பேச வேண்டும் மதுமிதா. கீழே
இறங்கு" என்ற கட்டளைக் குரலில்
சொல்லிவிட்டு காரை முன்புறமாகச்
சுற்றி வந்து முன்னால் இருந்த
கதவின் மேல் சாய்ந்தபடி நின்றான்.
சுற்றி வரும் போது தான் அவனை
முழுதாகப் பார்த்தாள் மதுமிதா.
நான்கு வருடங்களுக்கு முன்னால்
பார்த்தவனுக்கும் இப்போது
இருப்பவனுக்கும் நிறைய
வித்தியாசங்கள். அன்று கொஞ்சம்
மெலிதாகவே காணப்பட்டவன் இன்று
கம்பீரமான தோற்றத்துடன் அவன்
தொழிலுக்கே உண்டான நிமிர்வுடன்
இருப்பதைப் பார்த்தவளுக்கு மனம்
ரசிக்கவில்லை என்று சொன்னால்
அவளே நம்ப மாட்டாள்.
"ஏய் சைட் அடிக்கிற நேரமா இது?"
என்று தன் மூளை எச்சரிக்கை செய்ய
சுயநினைவு திரும்பியவள் கார்
கதவைத் திறந்தாள்.
என்ன சொல்லப்போறானோ என்று
நினைத்தபடியே காரை விட்டு கீழே
இறங்கிய மது சற்றுத் தள்ளி, அவன்
முகம் காண சக்தி இல்லாமல் தலை
குனிந்து அவன் புறம் திரும்பி
நின்றிருந்தாள்.
"என்ன இன்னும் லவ் பண்றையா
மதுமிதா?" என்று நேரிடையாகக்
கேட்டு அவளை அதிர வைத்தான்
கார்த்திக்.
திட்டப்போகிறான் அல்லது இந்த
எண்ணத்தை விட்டுவிடு என்று
சொல்லுவான் என அதிகாரக் குரலை
எதிர்ப்பார்த்த மதுவிற்கு இது அதிர்ச்சி
தான். என்ன சொல்லுவது என்று
மதுவிற்கு புரியவில்லை.
"நான் கேட்டால் எனக்கு பதில் வர
வேண்டும் மதுமிதா" என்றான்
அதிகாரக்குரலில் இப்போது.
"ஆமாம்" என்று தலை அசைத்தாள் மது.
காதலித்தாலும் அவள் கல்யாணம்
என்ற ஒன்றே தனக்கு வேண்டாம்
என்று தானே நினைத்தாள்.
"ஆனால்...." என்று மது ஆரம்பிக்க..
அவளது பேச்சைக் கண்டு கொள்ளாது
அவன் தன் பேச்சை ஆரம்பித்தான்.
"அப்போ நான்கு வருடங்களுக்கு
முன்னால் நான் சொன்னது எதையும்
நீ உன் மண்டையில்
ஏற்றிக்கொள்ளவில்லை.
அப்படித்தானே? "என்றான் குத்தலாக.
மதுவிற்கு அவன் குத்தலாகப் பேசியது
புரியாமல் இல்லை. அவன் பேச்சு
கொஞ்சம் கோபத்தையும் கிளப்பியது.
"என்னால் மறக்க முடியவில்லை. ஆனால் உங்களை கல்யாணம் செய்ய
நான் நினைக்கவில்லை" என்று
எங்கோ பார்த்தபடி தன் மனதில்
உள்ளதைச் சொல்லிவிட்டாள் மது.
"அப்படி இருக்க ஏன் எல்லாரிடமும்
சொன்னாய்" என மேலும் குத்தினான்.
"நான்...." என்று நிமிர்ந்து அவன்
முகத்தைப் பார்த்தவள் அவன்
பார்வையைத் தாங்காது தன்
விழிகளை அவன் விழிகளில் இருந்து
பிரித்து எங்கோ பார்த்தபடி, அன்று
அவன் அன்னை வந்த போது நடந்த
அனைத்தையும் கூறினாள்.
மேலும் "என்னால் மனதில் ஒருவரை
வைத்துக் கொண்டு
இன்னொருவனுக்கு துரோகம் செய்ய
முடியாது. அதான் உண்மையைச்
சொல்லிவிட்டேன். விஷயம்
தெரிந்தால் என்னை யாரையும்
கல்யாணம் செய்து கொள்ளச்
சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
உங்களைக் கல்யாணம் செய்ய
எண்ணி நான் அதை சொல்லவில்லை.
ஏதோ எல்லோரும் குடுத்த பிரஷரில்
சொல்லிவிட்டேன். என்னை மன்னித்து
விடுங்கள்.. சாரி" என்றாள் மது.
அப்போதும் அவனது நிலை வீட்டில்
என்னவோ என்று மனதில் யோசிக்கத்
தவறவில்லை.
"அப்போ நீ என்னைக் கல்யாணம்
செய்ய எண்ணி எல்லாரின்
முன்னிலையில் என்னைக்
காதலிப்பதாகச் சொல்லவில்லை..
அப்படித்தானே?" எனக் கேட்டான்.
"ஆமாம்" என்று தலையை ஆட்டினாள்
மது.
"சரி. நான் இல்லை என்றாலும்.. உன்
வீட்டில் உனக்கு வேறு யாருடனாவது
கட்டாயக் கல்யாணம் செய்து
வைத்தால்?" என அடுத்தக் கார்த்திக்
கேட்டு அவளது உள்ளத்தை நடுங்க
வைத்தான்.
"அப்படி என் கை கால்களைக் கட்டி
மணமேடையில் யாராலும் உட்கார
வைக்க முடியாது" எனத் தெளிவானக்
குரலில் மதுவிடம் பதில் வந்தது.
இப்போ எதுக்கு இந்தக் கேள்வி
எல்லாம் கேட்கிறான் என்று மது
நினைக்கவில்லை.
"நம்ம ஊர்ல இந்த எமோஷனல் ப்ளாக்
மெயில்னு ஒன்னு இருக்கு அத
யோசிச்சுப் பாத்தையா?" என்று
கைகளை மார்பிற்கு குறுக்காகக்
கட்டியபடிக் கேட்டான்.
"அப்படி யாரும் என் வீட்டில் என்னைப்
புரிந்து கொள்ளாமல் நடக்க
மாட்டார்கள்.. என்னை
கஷ்டப்படுத்தவும் மாட்டார்கள்"
என்று திடமானக் குரலில் கூறிய
மதுவை அவன் கண்கள் இடுங்கப்
பார்த்ததை அவள் அறியவில்லை.
"அப்போ உன் வீட்டினரை நீ புரிந்து
கொள்ளாமல் நடக்கப் போகிறாய்..
அதாவது அவர்களை கஷ்டப்படுத்தப்
போகிறாய்.. அப்படித்தானே" எனக்
கேட்டான்.
"நானா? நீங்க சொல்றது எனக்குப்
புரியவில்லை" என்றாள் அவனை
நேராகப் பார்த்து.
"அதாவது கல்யாணம் பண்ணிக்
கொள்ளாமல் இருந்து உன்
குடும்பத்தினரை கஷ்டப் படுத்தப்
போகிறாய்.. அப்படித்தானே?" என
மதுவிடன் தன் கேள்வியை வைத்து
குழப்பினான்.
மதுவிற்கு அவன் என்ன சொல்ல
வருகிறான் என்பது புரிந்துவிட்டது..
"அதற்காக இஷ்டம் இல்லாத
கல்யாணத்தைச் செய்து கொண்டு
என்னால் நோக முடியாது. அது
எனக்கு மட்டும் இல்லாமல்
அடுத்தவருக்கும் பாதிப்பே.." என்றாள்
மது.
"அப்போது உன் குடும்பத்தினரைப்
பற்றி உனக்குக் கவலை இல்லையா?"
என்று கேட்டான்.
"நீங்க என்னைக் கேள்வி கேட்டே
குழப்பறீங்க" என்றாள் மது
வெடுக்கென.
"நீ ஒன்னும் கன்ப்யூஸ் ஆக வேண்டாம்
மதுமிதா. நேரடியாகவே சொல்றேன்
கேள்.. இப்போ நீ உன் கஷ்டத்தப் பத்தி
மட்டும் யோசிக்கற.. ஆனா நீன்னா நீ
மட்டும் இல்லை. உன்ன சுத்தி
இருக்கவங்க சந்தோஷம் தான் உன்
சந்தோஷம்.. உன் சந்தோஷம் தான்
அவங்க சந்தோஷம்.. சரி உன்
சந்தோஷத்துக்காக அவங்க உன்ன
அப்படியே உன் இஷ்டப்படி
விட்டுவிடுகிறார்கள் என்றே வைத்துக்
கொள்வோம். ஆனால் நமது சமதாயம்
என்று ஒன்று இருக்கிறதே.. அது
நியாபகம் இருக்கிறதா உனக்கு.. உன்
முன்னால் பேசவில்லை என்றாலும் நீ
இல்லாத போது உன்னை ஏசுவார்கள்..
நீ இவ்வளவு நாள் டாக்டர் படிச்சது..
லண்டன்ல படிச்சது எல்லாமே மறந்து
போய் இந்த கல்யாண விஷயத்தைப்
போட்டு அலசிவிடுவார்கள். நீ மட்டும்
இதில் பாதிக்கப்படப் போவதில்லை..
உன் குடும்பமும் உன் குடும்ப
கவுரவமும் தான்" என்று தெளிவாக
மதுவிற்கு விளக்கினான்.
எல்லாவற்றையும் கேட்ட மதுவிற்கு
தலை வலி வராதக் குறைதான்.
"இப்போது நான் என்ன செய்ய
வேண்டும் என்று சொல்ல வரீங்க"
என்று ஒரு பக்கமாகத் தலையைத்
தேய்த்து விட்டுபடிக் கேட்டாள்.
"வேறு வழி இல்லை மதுமிதா.
எனக்கும் உனக்கும் தான் திருமணம்
நடக்கப்போகிறது" என்றான்
அமைதியான குரலில்.
மது அவன் சொன்னதைக் கேட்டு
அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.
"எ.. என்ன சொல்றீங்க நீங்க?"
என்றாள்.
"ஆமாம்" என்றான் கூலாக.
"நீங்க சொல்றது எனக்கு புரியல?"
என்று விழித்தாள் மது.
"கல்யாணம் வேண்டாம் என்று
சொன்ன நீயும், உங்கள் வீட்டில் என்
அம்மாவின் முன்னால் என்னைக்
காதலிப்பதாக, அதுவும் எட்டு
வருடங்களாக காதலிக்கிறேன் என்று
கூறிவிட்டாய், அதான் சான்ஸ் என்று
கல்யாணத்தைத் தள்ளி போட்டுக்
கொண்டிருந்த என்னிடம், என் அம்மா
இப்போது விடாப்பிடியாக நிற்கிறார்.
நானே இது விஷயமாக உன்னிடம்
பேச வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். ஆனால் தானாக
நடந்த இந்த சந்திப்பு சாதகமாகிப்
போனது பார். இன்னும்
யோசித்துப்பார் உன்னை
என்னைவிட்டுக் கூட்டி வரச் சொல்லி இருக்கிறார்கள். உன் வீட்டிலும் சரி
என் வீட்டிலும் சரி இந்தக் கல்யாணம்
அனைவருக்கும் சம்மதமே. நான்
இரண்டு நாட்களில் சொல்கிறேன்
என்று என் அம்மாவிடம் சொன்னதால்
தான் என் அம்மா உன் வீட்டில்
இன்னும் பேசவில்லை.. நானும் என்
அம்மா கிட்ட என் முடிவ
சொல்லிடறேன் " என்று தன் செய்த
முடிவுகளைச் சொன்னான்.
"உங்க அம்மா கிட்ட என்ன சொல்லப்
போறிங்க?" என மது கேட்டாள்.
"என் அம்மா என்னை விடமாட்டார்.
அதுவும் இல்லாமல் மறுப்பதற்கும்
காரணம் இருப்பதாகத்
தெரியவில்லை" என்று தோளைக்
குலுக்கியபடி பதில் அளித்தான்.
"ஆனால் என்னால் உங்களுக்கு நல்ல
மனைவியாக இருக்க முடியும் என்று
தோன்றவில்லை" என்று மேல்
உதட்டைக் கடித்தபடி மது சொல்ல
இப்போது அதிர்ச்சி அடைந்தது
கார்த்திக் தான்.
"ஏனோ?" என்றான் கார்த்திக்.
"அது.. என் வாழ்க்கையில் நடந்த சில
சம்பவங்கள் காரணம் ஆயிருச்சு..
அதனால் தான் சொல்கிறேன்.."
என்றாள் மது. தொண்டை வறண்டது
போல உணர்ந்தாள் மது. 'அது மட்டும்
நடக்காமல் இருந்திருந்தால்
இப்போது..' என்று மதுவின் மனம்
நினைத்து ஏங்கியது.
"என்ன நடந்தது மதுமிதா.. நான் தான்
கல்யாணத்தில் பிரச்சினையாக
இருப்பேன் என்று நினைத்தேன்..
ஆனால் இப்போது நீயே வேண்டாம்
என்கிறாய். நீ கல்யாணமே வேண்டாம்
என்று சொல்லும் அளவிற்கு என்ன
ஆயிற்று.. நான் உன்னை பர்ஸ்ட்
வேண்டாம்-ன்னு சொன்ன கோபமா? "
என வினவினான்.
"அதெல்லாம் இல்லை.." என்று கதவை
இடமும் வலமும் ஆட்டியவள் "இல்லை
வேண்டாம்.. கிளம்பலாம்.. காரை
எடுங்க" என்று மது கார் கதவைத்
திறக்க.. கதவைப் பிடித்து கார்த்திக்
சாத்தினான் கார்த்திக்.
"நீ சொல்லாமல் காரை எடுக்க
மாட்டேன் மதுமிதா.. என்ன என்று
சொல்லு.. அப்படித் தீர்க்க முடியாத
பிரச்சினை என்று எதுவும் இல்லை..
உன்னைக் கட்டாயப் படுத்துகிறேன்
என்று நினைக்காதே.. நீ இன்று
வாயைத் திறந்து சொன்னால் தான்
இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல
முடியும்" என்று அழுத்தமானக் குரலில்
கூறினான்.
"......"
"நீ அமைதியா இருந்தா நான்
கிளம்பலாம்ன்னு சொல்லிடுவேன்னு
மட்டும் நினைக்காதே" என்று விடாமல் இடும்புப் பிடியின் உறுதியோடு
நின்றவனிடம் மதுவால் இனியும்
முடியாது என்று தோன்றியது.
"அ..அது " என்று தயங்கியவள் பின்பு
அந்த ஸ்போக்கன் இங்லீஷ் க்ளாஸில்
நடந்ததைக் கூறினாள். சொல்லி
முடிக்கும் போதுதான் மது கண்களில்
கண்ணீர் உருண்டு ஓடியதை
உணர்ந்தாள். ஒரு வித நடுக்கத்துடன்
சொல்லி முடித்தவள் நிமிர்ந்து
அவனைப் பார்க்க அவன் முகம் இறுகி
இருந்தது.
"எதுவும் நடக்கலனாலும் அந்த
விஷயம் எனக்கு அருவெருப்பு
தந்திருச்சு. எத்தனையோ நாள் அது
கனவில் வந்து தூக்கம் இல்லாமல்
தவித்திருக்கிறேன். இப்போதும் அது
சில நாள் தொடர்கிறது. அதனால
தான் சொல்றேன் புரிஞ்சுக்கோங்க.
எனக்கு பயமாவும் இருக்கு" என்று
தவிப்புடன் கூறினாள் மது.
"புரிகிறது. ஆனால் இப்படி தவிக்கும்
அளவிற்கு ஒன்றும் இல்லை என்று
நான் சொல்ல வரவில்லை. உன்
இடத்தில் இருந்து பார்த்தால் தான்
தெரியும். ஆனால் அதை மறந்து விடு
மதுமிதா. ஒரு வாழ்க்கை இருக்குல
எல்லாருக்கும். அதை நீ வாழ
வேண்டாமா?" என்று புரிய வைக்கும்
எண்ணத்துடன் பேசினான் கார்த்திக்.
"எனக்கு என்று ஒரு வாழ்க்கை
இருக்கு தான். நான் இல்லை என்று
சொல்லவில்லை.. ஆனால் என்னால்
நார்மல் கப்பில்ஸ் மாதிரி இருக்க
முடியும்னு தோனலை" என்று
அவனிடம் கூறினாள்.
"மதுமிதா ஒரு விஷயத்தைப்
புரிஞ்சிக்கோ. நான் உன்ன அந்தக்
கடந்த கால விஷயத்தில்
பாராட்டத்தான் செய்வேன்.. நீ தப்பிச்சு
வந்ததும் இல்லாம அவனை
அடிச்சுட்டுதான் வந்திருக்க.. எனக்கு
புரியுது நீ என்ன மாதிரியான
கஷ்டத்தை அனுபவிச்சிருக்கன்னு..
என்ன பொருத்த வரைக்கும் இஷ்டம்
இல்லைனா மனைவியா இருந்தாக்
கூடத் தொடக்கூடாது என்று தான்
நினைப்பேன்.. எனக்குத் தெரிந்து உன்
பதினாறு பதினேழு வயதில் அந்த
சம்பவம் நடந்திருக்கு என்று
நினைக்கிறேன்.. முழுதாக விவரம்
தெரியாத வயதிலேயே தப்பித்து
வந்திருக்கிறாய்.. இது எல்லாப்
பெண்களுக்கு நடக்கும்.. ஆனா அது
எல்லாம் பப்ளிக் ப்ளேஸ்ல.. பட்
உனக்கு வேற மாதிரி.. நீ ஒரு டாக்டர்..
நீயே இந்த மாதிரி விஷயங்களுக்கு
இப்படி குறுகி உட்காரலாமா? இந்த
மாதிரி நாய்கள் எல்லாப்
பக்கங்களிலும் இருக்கானுக.. அந்த
மாதிரி நாய்களை" என்று பல்லைக்
கடித்தவன்.. பின் கோபத்தை அடக்கி
"அந்தச் சம்பவத்தை மறந்துவிடு
மதுமிதா.." என்றான் அமைதியான
குரலில்.
"தயவு செய்து நான் சொல்ல
வருவதைப் புரிஞ்சுக்கோங்க.
என்னால உ..உங்க கூட...ஒரு ஆணின்
எதிர்பார்ப்புக்கு இருக்க முடியுமானு
தெரியல. என்னால ஓப்பனா சொல்ல
முடியல" என்றாள் மது சங்கடமானக்
குரலில்.
"ஒரு தம்பதி என்றால் தாம்பத்தியம்
என்று மட்டும் இல்லை மதுமிதா..
அதையும் தாண்டி நிறைய உள்ளது.."
என்றான் கார்த்திக்.
"அது எனக்கும் தெரியும்.. ஆனால்
அத்தனைகளில் ஒன்று இல்லை
என்றால் கூட நமது இரண்டு பேரின்
வாழ்க்கையும் முழுமை அடையாது.
அதுவும் இல்லாமல் என்னால் நீங்கள்
அதில் கஷ்டப்பட நேரிடும். எல்லோரும்
சாதாரண மனிதன் தானே. என்
சுயநலத்திற்காக என் குடும்ப
சந்தோஷத்திற்காக நான் ஏன்
உங்களைச் சிரமப்பட வைக்க
வேண்டும் சொல்லுங்க" என்று
அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.