Yaazhini madhumitha
Well-Known Member
அத்தியாயம்-6
வீடு வந்த ஜானகி உடையைக் கூட
மாற்ற மனமில்லாமல் தனது கணவர்
வேலுமணியிடம் அனைத்தையும்
கூறினார். அனைத்தையுமே கேட்ட
அவருக்குமே அதிர்ச்சி தான். மதுமிதா
நல்ல பெண் தான் என்று அவர்
மனதில் எழுந்ததை அவரால் அடக்க
முடியவில்லை. இருந்தாலும் அதை
முகத்தில் காட்டாமல் தன்
மனைவியின் எண்ணம் என்ன
என்பதை அறிய அவரிடம் பேசினார்
வேலுமணி.
"நீ என்ன சொன்னாய் அவர்களிடம்"
என்று மனைவியைக் கேட்டார்
வேலுமணி.
"நான் என்னத்தைச் சொல்ல
முடியும்.. இவன் எதுவும் வாயே திறக்க
மாட்டேன் என்கிறான் கல்யாண
விஷயத்தில்.." என்றார் குறையாக.
அவர்களின் செல்வபுத்திரன்
கல்யாண விஷயம் பற்றி பேசினாலே
ஏதாவது சொல்லி பேச்சை மாற்றிக்
கொண்டு இருந்தான்.
"நீ என்ன நினைக்கிறாய் ஜானகி?"
என்ற கேள்வியை மனைவியிடம்
வைத்தார்.
"கார்த்திக்கிற்கு சம்மதம் என்றால்
மதுவையே பேசிவிடலாம்.. ஆனால்
அவன் ஒத்துக்கொள்ள
வேண்டுமேங்க.. அந்தப் பெண் வேறு
இவனை எட்டு வருடமாக
காதலிக்கிறாள் என்று சொல்லுகிறாள்.
சொல்லும் போதே சரம் சரமாகக்
கண்ணீர் வேறு. மதுவை நான் இது
வரை மருமகள் ஸ்தானத்தில்
வைத்தது இல்லைதான்.. ஆனால்
இன்றைய நிகழ்விற்குப் பிறகு அவளே
நம் வீட்டிறகு வந்தால் நன்றாக
இருக்கும் என்று தோன்றுகிறது"
என்று முடிக்க வேலுமணிக்கு
மனைவியின் மனம் தெரிந்தது.
அவருக்கும் அதுவே சரி என்று பட்டது.
ஆனால் மனைவியிடத்தில் மகனின்
முடிவு தெரியாமல் தன் விருப்பத்தைத்
தெரிவிக்க அவர் விரும்பவில்லை..
தான் ஏதாவது சொல்லி மனைவி
அதைப் பிடித்துக் கொண்டு மகனிடம்
பேசினால் அவனின் கோபம் தன்
பக்கம் திரும்பும் என்பதை உணர்ந்தார்.
"சரி கார்த்திக் வந்த பிறகு அவனிடம்
பேசுவோம்" என்ற வேலுமணி டி.வி
யில் மூழ்கினார். இவரால் மட்டும்
எப்படி இப்படி ஜாலியாக இருக்க
முடிகிறதோ என்று சமையல்
வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்
ஜானகி.
ஜானகி சமையலைச் சீக்கிரமே
முடித்துவிட்டுக் காத்திருக்க தன்
அன்னையை ஏமாற்றாமல் சீக்கிரமே
வந்து சேர்ந்தான் நம் மதுமிதாவின்
மனம் கவர்ந்த கள்வன். காரை
நிறுத்திவிட்டு கார் சாவியை தனது
பாண்ட் பாக்கெட்டில் வைத்தபடி தனது
துறைக்கே உண்டான தேஜஸோடு
வந்த மகனைக் கண்ட ஜானகிக்கு
மதுவின் மனம் தன் மகனிடம் இந்த
கம்பீரத்தில் தான் விழுந்ததோ என்று
கர்வமாக இருந்தது.
"அம்மா... அப்பா எங்கே?" என்றபடி
உள்ளே நுழைந்தவன் தன் அன்னை
தன்னை கூர்ந்து கவனிப்பதைக்
கவனித்துவிட்டு
"என்னமா.. உங்க மகனை இப்போ
தான் பாக்கற மாதிரி பாக்கறீங்க?"
என்று கார்த்திக் கேட்கும் போதே
வேலுமணி வந்துவிட்டார் அங்கே.
"அப்பா... அந்த ப்ராஜெக்ட் பத்தி
டீடெயில்ஸ் கிடச்சிருச்சு.. கொடேஷன்
மட்டும் நம்ம கரெக்டா போட்டு
அனுப்பீட்டா ப்ராஜெக்ட் ஓகே ஆயிரும்"
என்றவன் "கொடேஷன் பத்தி
பேசலாமா ப்பா?" என்று கார்த்திக்
கேட்க
"இல்லப்பா வேண்டாம்.. நீயே பாத்தா
போதும்" என்றார் வேலுமணி.
அவரைப் பொருத்த வரை மகன்
தொழிலில் கெட்டிக்காரன். அதனால்
அவர் தலையிடத் தேவை இல்லை.
கார்த்திக் சென்று குளித்துவிட்டு வர
வர அவனுக்குச் சாப்பாட்டை
பரிமாறினார் ஜானகி.. பின் சாப்பிட்டு
முடித்த கார்த்திக் தந்தையிடம் ஏதோ
தொழில் ரீதியாகப் பேசிக் கொண்டு
இருந்தான். பின் அந்தப் பேச்சு முடிய
ஜானகி கார்த்திக்கிடம் மது வீட்டில்
நடந்ததைக் கூறினார். ஜானகி
சொல்லச் சொல்ல மகனின்
முகத்தைக் கவனித்த வேலுமணியால்
எதையும் கணிக்க முடியவில்லை.
அவன் அவ்வளவு எளிதில் எதையும்
வெளிக்காட்டுபவன் அல்ல.
எதுவும் பேசாமல்
அமர்ந்திருந்தவனிடம் "பார் கார்த்திக்
மது ரொம்ப நல்லப் பெண்" என்றார்
ஜானகி மகனிடம்.
"எனக்கு இப்போது கல்யாணம்
வேண்டாம் அம்மா. கொஞ்ச நாள்
போகட்டும் என்று அன்றே
சொன்னேனே" என்று சோபாவில்
நன்றாக சாய்ந்தபடி சொன்னான்
கார்த்திக்.
"யாரையாவது விரும்பறியா?" எனக்
கேட்டார் ஜானகி.
"இல்லை" என்றான் ஒற்றை
வார்த்தையாக.
"மதுவைப் பிடிக்கவில்லையா" என
மேலும் கேட்டார் ஜானகி.
"அப்படி எதுவும் இல்லை" என்றவன்
"என்னமா நீங்கள் இப்படிக்
கேட்குறீர்கள்" என்று சலித்தான்.
"பாரு கார்த்திக் யாரையும்
காதலிக்கவில்லை என்கிறாய்.
மதுவை மறுக்கவும் காரணம்
இருப்பதாகத் தெரியவில்லை. வேறு
என்னதான் உன் பிரச்சனை" எனக்
கேட்டார் ஜானகி.
"நிலா இருக்கும் வரையில் அவள்
கல்யாணம் முடியட்டும் என்றாய்.
இப்போது என்ன?" என்ற
வேலுமணியை கண்களைக்
கூர்மையாக்கி சிறிய சிரிப்புடன்
பார்த்தான் கார்த்திக்.
"இரண்டு பேரும் முடிவு செய்து விட்டு
தான் என்னிடம் கேக்கறீங்க போல"
என்று கார்த்திக் நக்கலாகக் கேட்டான்.
"அப்படி தான் என்றும் வைத்துக்
கொள்ளேன். உனக்கும் 28
முடியப்போது" என்ற ஜானகியை
இடைமறித்தான் கார்த்திக்.
"அம்மா போதும். நீங்க சொல்றதுலயே
எனக்கு வயசு ஆன மாதிரி இருக்கு.
எதுவா இருந்தாலும் ஒரு வாரம்
கழித்துச் சொல்கிறேன்" என்றபடி
எழுந்து தன் அறைக்குச் செல்ல
மாடிப்படி ஏறினான்.
"உன்னை மது விரும்பியது முன்பே
உனக்குத் தெரியுமா கார்த்திக்?" என
மனதில் தோன்றிய உறுத்தலைக்
கேட்டார் வேலுமணி.
ஒரு நிமிடம் திரும்பித் தந்தையைப்
பார்த்தவன் "நீங்கள் முதலில்
அவர்களைப் பற்றி வீட்டில்
பேசும்போது கேள்விபட்டது அப்பா"
என்றுவிட்டு அவன் செல்ல,
மகனையே பார்த்தபடி நின்றிருந்தார்
வேலுமணி.
கார்த்திக் 28 வயது நிரம்பிய
இளையன். ஆறடி உயரம்.
கூர்மையான கண்கள். பார்த்தவுடன்
ஒருவரை கனித்துவிடுவான். புத்திக்
கூர்மையும் அதிகம். படிப்பில்
ஆவரேஜ் ஸ்டூடண்ட் என்றாலும்
தொழிலில் கெட்டிக்காரன்.ஆர்கிடெக்ட்
(architect) முடித்து விட்டு தன் அப்பா
கோவையில் தொடங்கிய "கோவை
ஆர்கிடெக்ட் அன் இன்டீரியர் டிசைன்"
ஐ ஏற்று நடத்தினான். மகன்
தொழிலைச் சிறப்பாக நடத்தவே
அப்பப்போ மேற்பார்வை மட்டும்
பார்த்து விட்டு இருந்தார் வேலுமணி.
தந்தையை விடத் தொழிலை
நன்றாகப் பெருக்கி மேலும் தொழிலை
விரிவடையச் செய்திருந்தான். மாதம்
ஒரு முறை வார இறுதியில்,
வால்பாறை சென்று எஸ்டேட்டையும்
பார்த்து வருவான் கார்த்திக். எதையும்
வெளிக்காட்டிக் கொள்ளும் விதமும்
இல்லை. தனக்குள்ளேயே வைத்து
காயை நகர்த்தும் சாமார்த்தியமும்
திறமையும் அதிகம்.
ஆனால் கல்யாண விஷயத்தில் மகன்
இப்படி இருப்பது அவர்களுக்குத்
திருப்தி இல்லாமல் இருந்தது. தங்கை
கல்யாணம் முடியட்டும் என்று
சொல்லிக் கொண்டு இருந்தவன்
நிலாவின் திருமணம் முடிந்தும்
சாக்குபோக்கு சொல்லி வந்தான்.
ஆனால் இன்று அதற்கும் வழி
கிடைத்தது போல உணர்ந்தார் ஜானகி.
மது சொன்னபோது அதிர்ச்சியாகத்
தான் இருந்தது ஜானகிக்கு. சிறிது
கோபம் கூட எட்டிப் பார்த்தது. ஆனால்
மது அழுதுவிட்டு ஓடியது அவருக்குமே
ஒரு மாதிரி ஆகிவிட்டது.. அதுவும்
இல்லாமல் தன் மகனை நினைத்து
இன்னொருவனை மணக்க அவள்
விரும்பவில்லை என்பதும் அவருக்கு
ஒரு கர்வமாகவே இருந்தது. மதுவின்
குடும்பம் வசதி என்றாலும்,
அவர்களை விடவே சற்று வசதிதான்
இவர்கள். ஆனால் அதை ஒரு
பொருட்டாக எண்ணவில்லை ஜானகி..
அதனால் தான் மகனிடம் இன்றே
பேசிவிட வேண்டும் என்று எண்ணி
எதுவும் பேசாமல் மதுவின் வீட்டில்
இருந்து கிளம்பிவிட்டார். அவர்கள்
மாதிரி நல்ல குடும்பம் அமைவது
கஷ்டம் என்பதால் கார்த்திக்கிடம்
இன்று பேசியும் விட்டார். மகன் நல்ல
பதிலைச் சொல்ல வேண்டும் என்று
வேண்டிக் கொண்டது அந்த தாயின்
உள்ளம்.
அறைக்கு வந்த கார்த்திக்
பால்கனியில் நின்று சிகரெட் ஒன்றை
புகைத்துக் கொண்டு இருந்தான்.
மதுவிடம் நான்கு வருடங்களுக்கு
முன்னால் பேசியது நினைவு வந்தது.
அவளது குரல் இன்றும் காதில்
எதிரொலித்தது. இல்லை அழுகை.
ஒரு முடிவு எடுத்தவனாக சிகரெட்டை
அணைத்து வீசிவிட்டு வந்து
படுக்கையில் சாய்ந்தான்.
அதேநேரம் சாப்பிட்டு விட்டு வந்து
பால்கனியில் நின்ற மதுவிற்கு
மறுபடியும் கடந்த காலம் நினைவு
வந்தது.
ஒரு நாள் வீட்டிற்கு வந்த ஜானகி
அம்மா "இந்தா மது. இன்று லட்டுப்
பிடித்தேன். உனக்குப் பிடிக்கும் என்று
நிலா சொன்னாள்" என்று மதுவின்
கையில் ஒரு சம்படத்தைத் தந்தார்.
"எப்ப எம்.பி.பி.எஸ் கௌன்ஸிலிங்
மது?" எனக் கேட்டார் ஜானகி.
"இன்னும் ஒரு வாரம் இருக்கு ஆன்ட்டி"
என்றாள் மது. மேலும் ஒரு மணி நேரம்
இருந்து வீட்டுப் பெண்களிடம்
பேசிவிட்டுப் போனார்.
மதுவிற்கு மனம் உறுத்தியது.
இவ்வளவு பாசமாக உள்ளவர், நான்
கார்த்திக்கை நேசிப்பது தெரிந்தால்
என்னை எவ்வாறு நினைப்பார். நிலா
தன்னை எவ்வாறு எண்ணுவாள். ஒரு
நிமிடம் உடல் கூசியது மதுவிற்கு.
மதுவின் மனம் மேலும் பலவற்றை
யோசித்து அவளைப் போட்டுக்
குழப்பியது.
"இரு குடும்பமும் நல்ல உறவில்
உள்ளது. தன்னால் விரிசல் ஏற்பட
வேண்டுமா? மேலும் வசதி வேறு
இடித்தது.. என்னதான் வசதி
இருந்தாலும் அவர்கள் அளவு இல்லை
என்று எண்ணினாள். மேலும் வசதி
உள்ள பையன் அதனால்
பிடித்துவிட்டாயா? என்று ஜானகி
அம்மாள் கேட்டுவிட்டால். அப்படிப்
பட்டவர்கள் இல்லை என்றாலும் தன்
மகன் என்று வரும் போது எப்படி
பேசுவாரோ என்று இருந்தது. கடவுளே
எவ்வளவு பெரிய அவமானம் என்று
எண்ணிக் கலங்கினாள் மது. மேலும்
தன்னால் பிரச்சினை நேர வேண்டுமா?
என்று எண்ணி கார்த்திக்கை மறக்க
முயற்சி செய்தாள். முயற்சி செய்து
முயற்சி செய்து அவளால் சரியாகத்
தூங்க சாப்பிட முடியவில்லை.
அப்போது தான் 'அவனை இவ்வளவு
நேசித்து விட்டோமா' என்றிருந்தது
மதுவிற்கு.
"முகம் பார்க்கும் கண்ணாடி முன்
நின்று என்னைப் பார்த்து என்
அழகையே ரசிக்க வைத்தாய்.
கற்பனைத் தேரில் பறந்தேன், என்
உடன் உன் முகத்தைக் கண்ணாடியில்
பார்த்தபோது.
கண்மூடித் திறக்க எல்லாம் மறையவும்
கண்ணாடி முன் நான் மட்டும்
நிற்க, ரசிக்க மனமில்லை
நீயில்லாது என் பக்கத்தில்!
என்று நினைத்து கட்டுப் படுத்த
முடியாமல் அவளையும் மீறி அழுதாள்.
முக்கியமாக வீட்டில் முகத்தை
மறைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.
சரியாக ஒரு வாரம் சென்றது.
எப்போதும் போல ஸ்போக்கன்
இங்லிஷ் க்ளாஸ் முடிந்து எல்லாரும்
செல்ல மது தனது சித்தாப்பாவிற்காக
காத்திருந்தாள். அந்த க்ளாஸ் ஒரு
மெயின் ரோட்டில் உள்ள
காம்ப்ளக்ஸில் இரண்டாவது மாடியில்
இருந்ததால் வேடிக்கை பார்த்தபடி
நின்றிருந்தாள். அன்று அவர் வரத்
தாமதம் ஆனதால் க்ளாசின்
முன்னேயே நின்றிருந்தாள் மது.
அவள் நின்றிருந்ததைப் பார்த்த
ஆசிரியர் உள்ளே வந்து அமரச்
சொல்ல அவளும் உள்ளே
சென்றமர்ந்தாள். அவள் அமர்ந்ததும்
வெளியே சென்றவர் ஷட்டரை கீழே
இழுத்து விட்டு உள்ளே வந்தார்.
மதுவிற்கு ஏதோ நெருடலாக உணர
எழுந்து "சித்தப்பா வந்து விடுவார்.
நான் வருகிறேன் ஸார்" என்று நகர
முயன்றவளை அவர் கரம் பற்றியதை
உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினாள்.
"எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான்
விட முடியாது மதுமிதா" என்று
அசிங்கமாய்ச் சிரித்தான் அவன். ஒரு
நிமிடம் நடுங்கினாலும் பின்
சுதாரித்தாள்.
"கையை எடுடா" என்று மது கத்த
அதைப் பொருட்படுத்தாமல் அவன்
மதுவை நெருங்கினான். கையில்
இருந்த நோட்டை அவன் மேல் வீசிய
மது, அந்த அறைக்குள் அவனிடம்
சிக்காமல் ஓடினாள். இருந்தும் வந்து
அவன் மதுவைப் பிடித்து விட மதுமிதா
வெலவெலத்துப் போனாள். ஒரு
நிமிடம் கண் முன் கார்த்திக் முகம்
வந்து சென்றது இன்றும் அவளால்
மறுக்க முடியாத உண்மை.
அவன் பிடித்தவுடன் மது கத்த,
மதுவைச் சுவற்றில் வேகமாகத் தள்ளி
மதுவின் வாயில் அவன் கை வைத்து
சத்தம் வெளியே கேட்காதவாறு
பொத்தினான். அவன் மதுவைச்
சுவற்றில் தள்ளிய வேகத்தில் மதுவின்
தலை சுவற்றில் நன்கு மோதியது.
மதுவிற்கு ஒரு நிமிடம் வலி மற்றும்
தலை 'கிர்ர்ர்' என்று சுற்றி விட்டது.
அவன் மது மயக்க நிலையை
அடைந்ததை உணர்ந்து அவளிடம்
எல்லை மீறினான். ஆனால் கடவுள்
புண்ணியத்தில் எதுவும் நடக்கும்
முன்னால் சுயநினைவிற்கு வந்த மது
பயமும் கோபமும் ஒன்று சேர அவனை
ஓங்கி அடிவயிற்றிற்கு கீழ் உதைத்து
கீழே தள்ளி விட்டாள்..
அவன் அலறியபடி கீழே விழ மது
தப்பித்தோம் பிழைத்தோம் என்று
ஷட்டரை மேலே இழுத்து வெளியே
வந்து கால் போன போக்கில் ஓட
ஆரம்பித்தாள். அந்த கனமான
ஷட்டரை எப்படித் தனியாக திறந்தாள்
என்று அவளுக்கே வியப்பு. ஷட்டரை
திறந்ததும் வெளியே வந்தவள்
கண்மண் தெரியாமல் பயத்தில் கீழே
ஓடினாள். கீழே சென்றவள் அதே
வேகத்தில் ரோட்டை கடக்க அந்தச்
சமயம் வந்த கார் ஒன்று அவள் மேல்
மோதியது. கார் மோதியதில் மது
நாலடி தள்ளிப் போய் விழுந்தாள். விழுந்ததில் அங்கு இருந்த மைல்
கல்லில் தலை அடித்துவிட்டது ரத்தம்
கசிய கூட்டம் கூட நின்று அவளை
வேடிக்கைப் பார்த்தது.
ட்ராபிக்கில் மாட்டிக் கொண்ட
திருமுருகன் அங்கு வரும் போது
கூட்டமாக இருக்க கூட்டத்தை
விலக்கிப் பார்த்தார். மதுவை பார்த்த
அவர் திகைத்து அலறிவிட்டார். ரத்தம்
வழிய ரோட்டில் விழுந்து கிடந்த
மகளைப் பார்க்க அவரின் உடல்
நடுங்கியது.
காரை அங்கேயே பூட்டிவிட்டு ஓடியவர்
தன் மகள் தான் என்று கூறி தானும்
ஆம்புலன்ஸில் ஏறிவிட்டார். தலையில்
அடிபட்டு ரத்தம் வழிந்தது. கை காலில்
நன்றாக சிராய்ப்பும் இருந்தது.
ப்ரைவேட் ஹாஸ்பிடலேயே மதுவை
அட்மிட் செய்துவிட்டு வீட்டிற்கு தகவல்
தெரிவித்துவிட்டார் திருமுருகன்.
விஷயம் அறிந்து எல்லோரும்
அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர்.
"என்னாச்சு? என் மகள் எங்கே?" என்று
கேட்டபடி அழுக ஆரம்பித்து விட்டார்
உமா.
"அண்ணி அழாதீங்க.. தலையில்
கொஞ்சம் அடி... டாக்டர் பார்த்துட்டு
இருக்கார்" என்று தவித்தபடியே
திருமுருகன் கூற, டாக்டர் வெளியே
வந்தார்.
"தலையில் அடி. தையல்
போட்டிருக்கிறோம். இருந்தாலும்
ஒரு வாரம் அப்சர்வேசன் ல வச்சு தான்
அனுப்ப முடியும். மற்றபடி பயப்படத்
தேவையில்லை" என்று கூறிவிட்டு
கடமையுள்ள டாக்டராகச் சென்றார்.
டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லை
என்று சொன்ன பின்தான்
அவர்களால் மூச்சு விட முடிந்தது.
ஆனால் அவள் இப்படி அடிபட்டுக்
கிடப்பது அவர்களால் பார்த்து சகிக்க
முடியவில்லை.
அடுத்த நாள் மதுவிற்கு மருத்தவப்
படிப்பிற்கான கௌன்சலிங் இருந்தது.
அன்று மாலை கிளம்ப இருந்த
சுந்தரமூர்த்தி, மது துணிகளைத் தான்
உமா விபத்து செய்தி அறியும் முன்
பாக் செய்து கொண்டு இருந்தார்.
"என் மகள் ஆசையாக இதில்
இருந்தாலே. இப்படி ஆகிவிட்டதே"
என்று தலையில் கை வைத்தபடி
உட்கார்ந்தார் சுந்தரமூர்த்தி.
"இந்த வருடம் இல்லை என்றால்
அடுத்த வருடம். ஆனால் நாம் தான்
அவளைத் தேற்ற வேண்டும்" என்றார்
சண்முகம்.
இரவு ஒருவர் தான் கூட இருக்க
வேண்டும் என்று டாக்டர் சொல்ல
அன்று இரவு சுந்தரமூர்த்தி
இருந்துவிட்டார். மதுவின் தலையில்
ஐந்து தையல் போட்டிருந்தனர்.
மகளைப் பார்த்த படியே
உட்கார்ந்திருந்த சுந்தரமூர்த்தி
விடியற்காலையிலேயே உறங்கினார்.
எல்லோரும் வீட்டிற்கு சென்று விட்டு
அடுத்த நாள் காலை வந்தனர். மது
மயக்கத்தில் இருந்து விழிக்க
அன்றைய மதியம் தாண்டிவிட்டது.
அவள் விழித்தவுடன் அருகில் சென்ற
உமா "மதுமா" என்றபடி அருகில்
சென்று கையைப் பிடித்தார்.
"அம்மா" என்ற மதுவின் கண்களில்
கண்ணீர் வழிந்தது. அன்று முழுவதும்
அரைமயக்கத்திலேயே இருந்தாள்.
மருந்தின் காரணத்தினால் மது
அயர்ந்தே மூன்று நாட்கள் இருந்தாள்.
"எப்படி மது ஆக்ஸிடென்ட் ஆச்சு?"
என்று மூன்று நாட்களுக்குப் பிறகு
கொஞ்சம் பேச ஆரம்பித்த மதுவிடம்
கேட்டார் திருமுருகன்.
"என் ப்ரண்ட் ரோட்டிற்கு அந்தப் பக்கம்
செல்வது போல் இருந்தது சித்தப்பா.
ரோட்டைப் பாக்காமல் க்ராஸ்
செஞ்சிட்டேன்" என்று கூறினாள் தன்
கைகளை வெறித்தபடி.
"பார்த்துக் க்ராஸ் பண்ண மாட்டாயா"
என்று உமா குமுற "விடுங்கள்
அண்ணி தெரியாமல் சென்று
விட்டாள். நானும் முன்பே
சென்றிருந்தாள் இந்தத் தவறு
நடந்திருத்காது" என்று திருமுருகன்
உமாவைச் சமாதானம் செய்தார்.
ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருந்து
விட்டு வீடு திரும்பினாள் மது.
ஜானகியும் நிலாவும் வந்து பார்த்து
விட்டுச் சென்றனர். வீடு வந்ததில்
இருந்து சோர்ந்தே காணப்பட்டாள் மது.
"இந்த வருடம் விட்டுவிடு மதுமா. உன்
மார்க்கிற்கு அடுத்த வருடம் கூட
கிடைக்கும்" என்று எல்லோரும்
அவளைத் தேற்றினர். ஆனால் அவள்
மனதில் இருந்ததை யாரும் அறியவும்
இல்லை.. இவளும் யாரிடமும் வாய்
விட்டுச் சொல்லவில்லை.
வீடு வந்த ஜானகி உடையைக் கூட
மாற்ற மனமில்லாமல் தனது கணவர்
வேலுமணியிடம் அனைத்தையும்
கூறினார். அனைத்தையுமே கேட்ட
அவருக்குமே அதிர்ச்சி தான். மதுமிதா
நல்ல பெண் தான் என்று அவர்
மனதில் எழுந்ததை அவரால் அடக்க
முடியவில்லை. இருந்தாலும் அதை
முகத்தில் காட்டாமல் தன்
மனைவியின் எண்ணம் என்ன
என்பதை அறிய அவரிடம் பேசினார்
வேலுமணி.
"நீ என்ன சொன்னாய் அவர்களிடம்"
என்று மனைவியைக் கேட்டார்
வேலுமணி.
"நான் என்னத்தைச் சொல்ல
முடியும்.. இவன் எதுவும் வாயே திறக்க
மாட்டேன் என்கிறான் கல்யாண
விஷயத்தில்.." என்றார் குறையாக.
அவர்களின் செல்வபுத்திரன்
கல்யாண விஷயம் பற்றி பேசினாலே
ஏதாவது சொல்லி பேச்சை மாற்றிக்
கொண்டு இருந்தான்.
"நீ என்ன நினைக்கிறாய் ஜானகி?"
என்ற கேள்வியை மனைவியிடம்
வைத்தார்.
"கார்த்திக்கிற்கு சம்மதம் என்றால்
மதுவையே பேசிவிடலாம்.. ஆனால்
அவன் ஒத்துக்கொள்ள
வேண்டுமேங்க.. அந்தப் பெண் வேறு
இவனை எட்டு வருடமாக
காதலிக்கிறாள் என்று சொல்லுகிறாள்.
சொல்லும் போதே சரம் சரமாகக்
கண்ணீர் வேறு. மதுவை நான் இது
வரை மருமகள் ஸ்தானத்தில்
வைத்தது இல்லைதான்.. ஆனால்
இன்றைய நிகழ்விற்குப் பிறகு அவளே
நம் வீட்டிறகு வந்தால் நன்றாக
இருக்கும் என்று தோன்றுகிறது"
என்று முடிக்க வேலுமணிக்கு
மனைவியின் மனம் தெரிந்தது.
அவருக்கும் அதுவே சரி என்று பட்டது.
ஆனால் மனைவியிடத்தில் மகனின்
முடிவு தெரியாமல் தன் விருப்பத்தைத்
தெரிவிக்க அவர் விரும்பவில்லை..
தான் ஏதாவது சொல்லி மனைவி
அதைப் பிடித்துக் கொண்டு மகனிடம்
பேசினால் அவனின் கோபம் தன்
பக்கம் திரும்பும் என்பதை உணர்ந்தார்.
"சரி கார்த்திக் வந்த பிறகு அவனிடம்
பேசுவோம்" என்ற வேலுமணி டி.வி
யில் மூழ்கினார். இவரால் மட்டும்
எப்படி இப்படி ஜாலியாக இருக்க
முடிகிறதோ என்று சமையல்
வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்
ஜானகி.
ஜானகி சமையலைச் சீக்கிரமே
முடித்துவிட்டுக் காத்திருக்க தன்
அன்னையை ஏமாற்றாமல் சீக்கிரமே
வந்து சேர்ந்தான் நம் மதுமிதாவின்
மனம் கவர்ந்த கள்வன். காரை
நிறுத்திவிட்டு கார் சாவியை தனது
பாண்ட் பாக்கெட்டில் வைத்தபடி தனது
துறைக்கே உண்டான தேஜஸோடு
வந்த மகனைக் கண்ட ஜானகிக்கு
மதுவின் மனம் தன் மகனிடம் இந்த
கம்பீரத்தில் தான் விழுந்ததோ என்று
கர்வமாக இருந்தது.
"அம்மா... அப்பா எங்கே?" என்றபடி
உள்ளே நுழைந்தவன் தன் அன்னை
தன்னை கூர்ந்து கவனிப்பதைக்
கவனித்துவிட்டு
"என்னமா.. உங்க மகனை இப்போ
தான் பாக்கற மாதிரி பாக்கறீங்க?"
என்று கார்த்திக் கேட்கும் போதே
வேலுமணி வந்துவிட்டார் அங்கே.
"அப்பா... அந்த ப்ராஜெக்ட் பத்தி
டீடெயில்ஸ் கிடச்சிருச்சு.. கொடேஷன்
மட்டும் நம்ம கரெக்டா போட்டு
அனுப்பீட்டா ப்ராஜெக்ட் ஓகே ஆயிரும்"
என்றவன் "கொடேஷன் பத்தி
பேசலாமா ப்பா?" என்று கார்த்திக்
கேட்க
"இல்லப்பா வேண்டாம்.. நீயே பாத்தா
போதும்" என்றார் வேலுமணி.
அவரைப் பொருத்த வரை மகன்
தொழிலில் கெட்டிக்காரன். அதனால்
அவர் தலையிடத் தேவை இல்லை.
கார்த்திக் சென்று குளித்துவிட்டு வர
வர அவனுக்குச் சாப்பாட்டை
பரிமாறினார் ஜானகி.. பின் சாப்பிட்டு
முடித்த கார்த்திக் தந்தையிடம் ஏதோ
தொழில் ரீதியாகப் பேசிக் கொண்டு
இருந்தான். பின் அந்தப் பேச்சு முடிய
ஜானகி கார்த்திக்கிடம் மது வீட்டில்
நடந்ததைக் கூறினார். ஜானகி
சொல்லச் சொல்ல மகனின்
முகத்தைக் கவனித்த வேலுமணியால்
எதையும் கணிக்க முடியவில்லை.
அவன் அவ்வளவு எளிதில் எதையும்
வெளிக்காட்டுபவன் அல்ல.
எதுவும் பேசாமல்
அமர்ந்திருந்தவனிடம் "பார் கார்த்திக்
மது ரொம்ப நல்லப் பெண்" என்றார்
ஜானகி மகனிடம்.
"எனக்கு இப்போது கல்யாணம்
வேண்டாம் அம்மா. கொஞ்ச நாள்
போகட்டும் என்று அன்றே
சொன்னேனே" என்று சோபாவில்
நன்றாக சாய்ந்தபடி சொன்னான்
கார்த்திக்.
"யாரையாவது விரும்பறியா?" எனக்
கேட்டார் ஜானகி.
"இல்லை" என்றான் ஒற்றை
வார்த்தையாக.
"மதுவைப் பிடிக்கவில்லையா" என
மேலும் கேட்டார் ஜானகி.
"அப்படி எதுவும் இல்லை" என்றவன்
"என்னமா நீங்கள் இப்படிக்
கேட்குறீர்கள்" என்று சலித்தான்.
"பாரு கார்த்திக் யாரையும்
காதலிக்கவில்லை என்கிறாய்.
மதுவை மறுக்கவும் காரணம்
இருப்பதாகத் தெரியவில்லை. வேறு
என்னதான் உன் பிரச்சனை" எனக்
கேட்டார் ஜானகி.
"நிலா இருக்கும் வரையில் அவள்
கல்யாணம் முடியட்டும் என்றாய்.
இப்போது என்ன?" என்ற
வேலுமணியை கண்களைக்
கூர்மையாக்கி சிறிய சிரிப்புடன்
பார்த்தான் கார்த்திக்.
"இரண்டு பேரும் முடிவு செய்து விட்டு
தான் என்னிடம் கேக்கறீங்க போல"
என்று கார்த்திக் நக்கலாகக் கேட்டான்.
"அப்படி தான் என்றும் வைத்துக்
கொள்ளேன். உனக்கும் 28
முடியப்போது" என்ற ஜானகியை
இடைமறித்தான் கார்த்திக்.
"அம்மா போதும். நீங்க சொல்றதுலயே
எனக்கு வயசு ஆன மாதிரி இருக்கு.
எதுவா இருந்தாலும் ஒரு வாரம்
கழித்துச் சொல்கிறேன்" என்றபடி
எழுந்து தன் அறைக்குச் செல்ல
மாடிப்படி ஏறினான்.
"உன்னை மது விரும்பியது முன்பே
உனக்குத் தெரியுமா கார்த்திக்?" என
மனதில் தோன்றிய உறுத்தலைக்
கேட்டார் வேலுமணி.
ஒரு நிமிடம் திரும்பித் தந்தையைப்
பார்த்தவன் "நீங்கள் முதலில்
அவர்களைப் பற்றி வீட்டில்
பேசும்போது கேள்விபட்டது அப்பா"
என்றுவிட்டு அவன் செல்ல,
மகனையே பார்த்தபடி நின்றிருந்தார்
வேலுமணி.
கார்த்திக் 28 வயது நிரம்பிய
இளையன். ஆறடி உயரம்.
கூர்மையான கண்கள். பார்த்தவுடன்
ஒருவரை கனித்துவிடுவான். புத்திக்
கூர்மையும் அதிகம். படிப்பில்
ஆவரேஜ் ஸ்டூடண்ட் என்றாலும்
தொழிலில் கெட்டிக்காரன்.ஆர்கிடெக்ட்
(architect) முடித்து விட்டு தன் அப்பா
கோவையில் தொடங்கிய "கோவை
ஆர்கிடெக்ட் அன் இன்டீரியர் டிசைன்"
ஐ ஏற்று நடத்தினான். மகன்
தொழிலைச் சிறப்பாக நடத்தவே
அப்பப்போ மேற்பார்வை மட்டும்
பார்த்து விட்டு இருந்தார் வேலுமணி.
தந்தையை விடத் தொழிலை
நன்றாகப் பெருக்கி மேலும் தொழிலை
விரிவடையச் செய்திருந்தான். மாதம்
ஒரு முறை வார இறுதியில்,
வால்பாறை சென்று எஸ்டேட்டையும்
பார்த்து வருவான் கார்த்திக். எதையும்
வெளிக்காட்டிக் கொள்ளும் விதமும்
இல்லை. தனக்குள்ளேயே வைத்து
காயை நகர்த்தும் சாமார்த்தியமும்
திறமையும் அதிகம்.
ஆனால் கல்யாண விஷயத்தில் மகன்
இப்படி இருப்பது அவர்களுக்குத்
திருப்தி இல்லாமல் இருந்தது. தங்கை
கல்யாணம் முடியட்டும் என்று
சொல்லிக் கொண்டு இருந்தவன்
நிலாவின் திருமணம் முடிந்தும்
சாக்குபோக்கு சொல்லி வந்தான்.
ஆனால் இன்று அதற்கும் வழி
கிடைத்தது போல உணர்ந்தார் ஜானகி.
மது சொன்னபோது அதிர்ச்சியாகத்
தான் இருந்தது ஜானகிக்கு. சிறிது
கோபம் கூட எட்டிப் பார்த்தது. ஆனால்
மது அழுதுவிட்டு ஓடியது அவருக்குமே
ஒரு மாதிரி ஆகிவிட்டது.. அதுவும்
இல்லாமல் தன் மகனை நினைத்து
இன்னொருவனை மணக்க அவள்
விரும்பவில்லை என்பதும் அவருக்கு
ஒரு கர்வமாகவே இருந்தது. மதுவின்
குடும்பம் வசதி என்றாலும்,
அவர்களை விடவே சற்று வசதிதான்
இவர்கள். ஆனால் அதை ஒரு
பொருட்டாக எண்ணவில்லை ஜானகி..
அதனால் தான் மகனிடம் இன்றே
பேசிவிட வேண்டும் என்று எண்ணி
எதுவும் பேசாமல் மதுவின் வீட்டில்
இருந்து கிளம்பிவிட்டார். அவர்கள்
மாதிரி நல்ல குடும்பம் அமைவது
கஷ்டம் என்பதால் கார்த்திக்கிடம்
இன்று பேசியும் விட்டார். மகன் நல்ல
பதிலைச் சொல்ல வேண்டும் என்று
வேண்டிக் கொண்டது அந்த தாயின்
உள்ளம்.
அறைக்கு வந்த கார்த்திக்
பால்கனியில் நின்று சிகரெட் ஒன்றை
புகைத்துக் கொண்டு இருந்தான்.
மதுவிடம் நான்கு வருடங்களுக்கு
முன்னால் பேசியது நினைவு வந்தது.
அவளது குரல் இன்றும் காதில்
எதிரொலித்தது. இல்லை அழுகை.
ஒரு முடிவு எடுத்தவனாக சிகரெட்டை
அணைத்து வீசிவிட்டு வந்து
படுக்கையில் சாய்ந்தான்.
அதேநேரம் சாப்பிட்டு விட்டு வந்து
பால்கனியில் நின்ற மதுவிற்கு
மறுபடியும் கடந்த காலம் நினைவு
வந்தது.
ஒரு நாள் வீட்டிற்கு வந்த ஜானகி
அம்மா "இந்தா மது. இன்று லட்டுப்
பிடித்தேன். உனக்குப் பிடிக்கும் என்று
நிலா சொன்னாள்" என்று மதுவின்
கையில் ஒரு சம்படத்தைத் தந்தார்.
"எப்ப எம்.பி.பி.எஸ் கௌன்ஸிலிங்
மது?" எனக் கேட்டார் ஜானகி.
"இன்னும் ஒரு வாரம் இருக்கு ஆன்ட்டி"
என்றாள் மது. மேலும் ஒரு மணி நேரம்
இருந்து வீட்டுப் பெண்களிடம்
பேசிவிட்டுப் போனார்.
மதுவிற்கு மனம் உறுத்தியது.
இவ்வளவு பாசமாக உள்ளவர், நான்
கார்த்திக்கை நேசிப்பது தெரிந்தால்
என்னை எவ்வாறு நினைப்பார். நிலா
தன்னை எவ்வாறு எண்ணுவாள். ஒரு
நிமிடம் உடல் கூசியது மதுவிற்கு.
மதுவின் மனம் மேலும் பலவற்றை
யோசித்து அவளைப் போட்டுக்
குழப்பியது.
"இரு குடும்பமும் நல்ல உறவில்
உள்ளது. தன்னால் விரிசல் ஏற்பட
வேண்டுமா? மேலும் வசதி வேறு
இடித்தது.. என்னதான் வசதி
இருந்தாலும் அவர்கள் அளவு இல்லை
என்று எண்ணினாள். மேலும் வசதி
உள்ள பையன் அதனால்
பிடித்துவிட்டாயா? என்று ஜானகி
அம்மாள் கேட்டுவிட்டால். அப்படிப்
பட்டவர்கள் இல்லை என்றாலும் தன்
மகன் என்று வரும் போது எப்படி
பேசுவாரோ என்று இருந்தது. கடவுளே
எவ்வளவு பெரிய அவமானம் என்று
எண்ணிக் கலங்கினாள் மது. மேலும்
தன்னால் பிரச்சினை நேர வேண்டுமா?
என்று எண்ணி கார்த்திக்கை மறக்க
முயற்சி செய்தாள். முயற்சி செய்து
முயற்சி செய்து அவளால் சரியாகத்
தூங்க சாப்பிட முடியவில்லை.
அப்போது தான் 'அவனை இவ்வளவு
நேசித்து விட்டோமா' என்றிருந்தது
மதுவிற்கு.
"முகம் பார்க்கும் கண்ணாடி முன்
நின்று என்னைப் பார்த்து என்
அழகையே ரசிக்க வைத்தாய்.
கற்பனைத் தேரில் பறந்தேன், என்
உடன் உன் முகத்தைக் கண்ணாடியில்
பார்த்தபோது.
கண்மூடித் திறக்க எல்லாம் மறையவும்
கண்ணாடி முன் நான் மட்டும்
நிற்க, ரசிக்க மனமில்லை
நீயில்லாது என் பக்கத்தில்!
என்று நினைத்து கட்டுப் படுத்த
முடியாமல் அவளையும் மீறி அழுதாள்.
முக்கியமாக வீட்டில் முகத்தை
மறைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.
சரியாக ஒரு வாரம் சென்றது.
எப்போதும் போல ஸ்போக்கன்
இங்லிஷ் க்ளாஸ் முடிந்து எல்லாரும்
செல்ல மது தனது சித்தாப்பாவிற்காக
காத்திருந்தாள். அந்த க்ளாஸ் ஒரு
மெயின் ரோட்டில் உள்ள
காம்ப்ளக்ஸில் இரண்டாவது மாடியில்
இருந்ததால் வேடிக்கை பார்த்தபடி
நின்றிருந்தாள். அன்று அவர் வரத்
தாமதம் ஆனதால் க்ளாசின்
முன்னேயே நின்றிருந்தாள் மது.
அவள் நின்றிருந்ததைப் பார்த்த
ஆசிரியர் உள்ளே வந்து அமரச்
சொல்ல அவளும் உள்ளே
சென்றமர்ந்தாள். அவள் அமர்ந்ததும்
வெளியே சென்றவர் ஷட்டரை கீழே
இழுத்து விட்டு உள்ளே வந்தார்.
மதுவிற்கு ஏதோ நெருடலாக உணர
எழுந்து "சித்தப்பா வந்து விடுவார்.
நான் வருகிறேன் ஸார்" என்று நகர
முயன்றவளை அவர் கரம் பற்றியதை
உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினாள்.
"எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான்
விட முடியாது மதுமிதா" என்று
அசிங்கமாய்ச் சிரித்தான் அவன். ஒரு
நிமிடம் நடுங்கினாலும் பின்
சுதாரித்தாள்.
"கையை எடுடா" என்று மது கத்த
அதைப் பொருட்படுத்தாமல் அவன்
மதுவை நெருங்கினான். கையில்
இருந்த நோட்டை அவன் மேல் வீசிய
மது, அந்த அறைக்குள் அவனிடம்
சிக்காமல் ஓடினாள். இருந்தும் வந்து
அவன் மதுவைப் பிடித்து விட மதுமிதா
வெலவெலத்துப் போனாள். ஒரு
நிமிடம் கண் முன் கார்த்திக் முகம்
வந்து சென்றது இன்றும் அவளால்
மறுக்க முடியாத உண்மை.
அவன் பிடித்தவுடன் மது கத்த,
மதுவைச் சுவற்றில் வேகமாகத் தள்ளி
மதுவின் வாயில் அவன் கை வைத்து
சத்தம் வெளியே கேட்காதவாறு
பொத்தினான். அவன் மதுவைச்
சுவற்றில் தள்ளிய வேகத்தில் மதுவின்
தலை சுவற்றில் நன்கு மோதியது.
மதுவிற்கு ஒரு நிமிடம் வலி மற்றும்
தலை 'கிர்ர்ர்' என்று சுற்றி விட்டது.
அவன் மது மயக்க நிலையை
அடைந்ததை உணர்ந்து அவளிடம்
எல்லை மீறினான். ஆனால் கடவுள்
புண்ணியத்தில் எதுவும் நடக்கும்
முன்னால் சுயநினைவிற்கு வந்த மது
பயமும் கோபமும் ஒன்று சேர அவனை
ஓங்கி அடிவயிற்றிற்கு கீழ் உதைத்து
கீழே தள்ளி விட்டாள்..
அவன் அலறியபடி கீழே விழ மது
தப்பித்தோம் பிழைத்தோம் என்று
ஷட்டரை மேலே இழுத்து வெளியே
வந்து கால் போன போக்கில் ஓட
ஆரம்பித்தாள். அந்த கனமான
ஷட்டரை எப்படித் தனியாக திறந்தாள்
என்று அவளுக்கே வியப்பு. ஷட்டரை
திறந்ததும் வெளியே வந்தவள்
கண்மண் தெரியாமல் பயத்தில் கீழே
ஓடினாள். கீழே சென்றவள் அதே
வேகத்தில் ரோட்டை கடக்க அந்தச்
சமயம் வந்த கார் ஒன்று அவள் மேல்
மோதியது. கார் மோதியதில் மது
நாலடி தள்ளிப் போய் விழுந்தாள். விழுந்ததில் அங்கு இருந்த மைல்
கல்லில் தலை அடித்துவிட்டது ரத்தம்
கசிய கூட்டம் கூட நின்று அவளை
வேடிக்கைப் பார்த்தது.
ட்ராபிக்கில் மாட்டிக் கொண்ட
திருமுருகன் அங்கு வரும் போது
கூட்டமாக இருக்க கூட்டத்தை
விலக்கிப் பார்த்தார். மதுவை பார்த்த
அவர் திகைத்து அலறிவிட்டார். ரத்தம்
வழிய ரோட்டில் விழுந்து கிடந்த
மகளைப் பார்க்க அவரின் உடல்
நடுங்கியது.
காரை அங்கேயே பூட்டிவிட்டு ஓடியவர்
தன் மகள் தான் என்று கூறி தானும்
ஆம்புலன்ஸில் ஏறிவிட்டார். தலையில்
அடிபட்டு ரத்தம் வழிந்தது. கை காலில்
நன்றாக சிராய்ப்பும் இருந்தது.
ப்ரைவேட் ஹாஸ்பிடலேயே மதுவை
அட்மிட் செய்துவிட்டு வீட்டிற்கு தகவல்
தெரிவித்துவிட்டார் திருமுருகன்.
விஷயம் அறிந்து எல்லோரும்
அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர்.
"என்னாச்சு? என் மகள் எங்கே?" என்று
கேட்டபடி அழுக ஆரம்பித்து விட்டார்
உமா.
"அண்ணி அழாதீங்க.. தலையில்
கொஞ்சம் அடி... டாக்டர் பார்த்துட்டு
இருக்கார்" என்று தவித்தபடியே
திருமுருகன் கூற, டாக்டர் வெளியே
வந்தார்.
"தலையில் அடி. தையல்
போட்டிருக்கிறோம். இருந்தாலும்
ஒரு வாரம் அப்சர்வேசன் ல வச்சு தான்
அனுப்ப முடியும். மற்றபடி பயப்படத்
தேவையில்லை" என்று கூறிவிட்டு
கடமையுள்ள டாக்டராகச் சென்றார்.
டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லை
என்று சொன்ன பின்தான்
அவர்களால் மூச்சு விட முடிந்தது.
ஆனால் அவள் இப்படி அடிபட்டுக்
கிடப்பது அவர்களால் பார்த்து சகிக்க
முடியவில்லை.
அடுத்த நாள் மதுவிற்கு மருத்தவப்
படிப்பிற்கான கௌன்சலிங் இருந்தது.
அன்று மாலை கிளம்ப இருந்த
சுந்தரமூர்த்தி, மது துணிகளைத் தான்
உமா விபத்து செய்தி அறியும் முன்
பாக் செய்து கொண்டு இருந்தார்.
"என் மகள் ஆசையாக இதில்
இருந்தாலே. இப்படி ஆகிவிட்டதே"
என்று தலையில் கை வைத்தபடி
உட்கார்ந்தார் சுந்தரமூர்த்தி.
"இந்த வருடம் இல்லை என்றால்
அடுத்த வருடம். ஆனால் நாம் தான்
அவளைத் தேற்ற வேண்டும்" என்றார்
சண்முகம்.
இரவு ஒருவர் தான் கூட இருக்க
வேண்டும் என்று டாக்டர் சொல்ல
அன்று இரவு சுந்தரமூர்த்தி
இருந்துவிட்டார். மதுவின் தலையில்
ஐந்து தையல் போட்டிருந்தனர்.
மகளைப் பார்த்த படியே
உட்கார்ந்திருந்த சுந்தரமூர்த்தி
விடியற்காலையிலேயே உறங்கினார்.
எல்லோரும் வீட்டிற்கு சென்று விட்டு
அடுத்த நாள் காலை வந்தனர். மது
மயக்கத்தில் இருந்து விழிக்க
அன்றைய மதியம் தாண்டிவிட்டது.
அவள் விழித்தவுடன் அருகில் சென்ற
உமா "மதுமா" என்றபடி அருகில்
சென்று கையைப் பிடித்தார்.
"அம்மா" என்ற மதுவின் கண்களில்
கண்ணீர் வழிந்தது. அன்று முழுவதும்
அரைமயக்கத்திலேயே இருந்தாள்.
மருந்தின் காரணத்தினால் மது
அயர்ந்தே மூன்று நாட்கள் இருந்தாள்.
"எப்படி மது ஆக்ஸிடென்ட் ஆச்சு?"
என்று மூன்று நாட்களுக்குப் பிறகு
கொஞ்சம் பேச ஆரம்பித்த மதுவிடம்
கேட்டார் திருமுருகன்.
"என் ப்ரண்ட் ரோட்டிற்கு அந்தப் பக்கம்
செல்வது போல் இருந்தது சித்தப்பா.
ரோட்டைப் பாக்காமல் க்ராஸ்
செஞ்சிட்டேன்" என்று கூறினாள் தன்
கைகளை வெறித்தபடி.
"பார்த்துக் க்ராஸ் பண்ண மாட்டாயா"
என்று உமா குமுற "விடுங்கள்
அண்ணி தெரியாமல் சென்று
விட்டாள். நானும் முன்பே
சென்றிருந்தாள் இந்தத் தவறு
நடந்திருத்காது" என்று திருமுருகன்
உமாவைச் சமாதானம் செய்தார்.
ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருந்து
விட்டு வீடு திரும்பினாள் மது.
ஜானகியும் நிலாவும் வந்து பார்த்து
விட்டுச் சென்றனர். வீடு வந்ததில்
இருந்து சோர்ந்தே காணப்பட்டாள் மது.
"இந்த வருடம் விட்டுவிடு மதுமா. உன்
மார்க்கிற்கு அடுத்த வருடம் கூட
கிடைக்கும்" என்று எல்லோரும்
அவளைத் தேற்றினர். ஆனால் அவள்
மனதில் இருந்ததை யாரும் அறியவும்
இல்லை.. இவளும் யாரிடமும் வாய்
விட்டுச் சொல்லவில்லை.