Meghna suresh
Well-Known Member
கத கதப்பான கூட்டிலிருந்து மெல்ல தலை எட்டிப் பார்க்கும் புதிதாய் பிறந்த நத்தையை போல நகர்கிறது என் வாழ்வு. பிடித்த இதய பகுதியில் பணி. என் பனியின் திறன் அறிந்து மதிக்கும் மருத்துவர்கள். புதிய நட்பாய் கரம் கோர்த்த உடன் பணியாற்றும் செவிலிகள்.
தினம் மூன்று மணி நேர பயணத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் வாழ்க்கை தெளிந்த நீரோடை தான். ஏதோ ஒரு வகையில் எனக்கு கம்போர்ட் சோன். ‘உங்கள் கம்போர்ட் சோனை உடைத்து வெளிவரும் ஒவ்வொரு முறையும் தான் நீங்கள் வாழ்கையின் அடுத்த நிலை நோக்கி நகர்கிறீர்கள்.’ என்று எங்கேயோ வாசித்த நினைவு.
அப்படியான கம்போர்ட் சோனை உடைத்துவிட்டு முதுநிலை செவிலியம் படிக்க, முன்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் அங்கமாயிருந்த இந்நாளின் கடலூர் அரசு செவிலிய கல்லூரியில் இணைந்து இருக்கிறேன்.
என்னுடைய துறை மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை செவிலியம். சிறுமி என்றால் வீட்டின் அருகில் பள்ளி, கல்லூரி என்றால் பேருந்தில் போய் மாலை வீடு திரும்பும் தொலைவில் ஒரு கல்லூரி. பணி என்றால் பெயருக்கு வெளியூர் விடுதியில் தங்க வைப்பவர்கள், திருமணத்திற்கு பின்பான நாட்களில், ‘கணவன் குழந்தை’ என்ற சிறிய வட்டத்திற்குள் பெண்ணை அடைத்து விடுகிறார்கள். வெளியே தலை நீட்டி எட்டிப் பார்க்கும் நத்தையின் வாழ்வு கூட அவர்களுக்கு வாய்ப்பதில்லை
அந்த கதகதப்பான அன்பின் கூடு அனுபவிக்கையில் சுகமாய் தான் இருக்கும் என்றாலும், சிறிய முயற்சி என்றாலும் தனித்து சில நாட்கள் இயங்குதல் என்பது இப்பெருவாழ்வின் மீதான புதியதொரு பரிணாம பார்வையை தோற்றுவிக்கிறது.
“பிள்ளைகளை விட்டுட்டு போய் படிக்கனுமா...?” “இந்த வயசுக்கு மேல என்ன காலேஜு...” “சும்மா ஊர் ஊரா சுத்திகிட்டு...” இப்படி பல விதமான வார்த்தை அம்புகளை எதிர் கொண்ட போதும், செவிலியத்தின் மீதான காதலும், என் குடும்பத்தின் ஒத்துழைப்பும் என்னை இந்த புள்ளி நோக்கி நகர்த்தி இருக்கிறது.
சமூகத்திற்கு மேலும் சிறப்பான சேவை வழங்க என் புத்தியை கூர் தீட்டப் போகிறேன். ஆக இந்த இரண்டு வருடமும் எழுத்தென்ற ஓடம் கரை ஒதுங்கி நிற்க போகிறது. இரண்டு ஆண்டுகள் கழிந்து காலம் அனுமதித்தால் எழுத்துலக கடல் தேடி அந்த சிறிய ஓடம் வரும்... வாசகர்கள் எண்ண அலைகளில் நான் மீதமிருந்தால்.
கண்டிப்பாக பாங்கியர் பந்தத்தை நிறைவு செய்து விடுவேன்.
பிரிவோம்... சந்திப்போம்.
அன்புடன்...
மீனு @ மேக்னா சுரேஷ்.
Pantham 16 1
Pantham 16 2
தினம் மூன்று மணி நேர பயணத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் வாழ்க்கை தெளிந்த நீரோடை தான். ஏதோ ஒரு வகையில் எனக்கு கம்போர்ட் சோன். ‘உங்கள் கம்போர்ட் சோனை உடைத்து வெளிவரும் ஒவ்வொரு முறையும் தான் நீங்கள் வாழ்கையின் அடுத்த நிலை நோக்கி நகர்கிறீர்கள்.’ என்று எங்கேயோ வாசித்த நினைவு.
அப்படியான கம்போர்ட் சோனை உடைத்துவிட்டு முதுநிலை செவிலியம் படிக்க, முன்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் அங்கமாயிருந்த இந்நாளின் கடலூர் அரசு செவிலிய கல்லூரியில் இணைந்து இருக்கிறேன்.
என்னுடைய துறை மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை செவிலியம். சிறுமி என்றால் வீட்டின் அருகில் பள்ளி, கல்லூரி என்றால் பேருந்தில் போய் மாலை வீடு திரும்பும் தொலைவில் ஒரு கல்லூரி. பணி என்றால் பெயருக்கு வெளியூர் விடுதியில் தங்க வைப்பவர்கள், திருமணத்திற்கு பின்பான நாட்களில், ‘கணவன் குழந்தை’ என்ற சிறிய வட்டத்திற்குள் பெண்ணை அடைத்து விடுகிறார்கள். வெளியே தலை நீட்டி எட்டிப் பார்க்கும் நத்தையின் வாழ்வு கூட அவர்களுக்கு வாய்ப்பதில்லை
அந்த கதகதப்பான அன்பின் கூடு அனுபவிக்கையில் சுகமாய் தான் இருக்கும் என்றாலும், சிறிய முயற்சி என்றாலும் தனித்து சில நாட்கள் இயங்குதல் என்பது இப்பெருவாழ்வின் மீதான புதியதொரு பரிணாம பார்வையை தோற்றுவிக்கிறது.
“பிள்ளைகளை விட்டுட்டு போய் படிக்கனுமா...?” “இந்த வயசுக்கு மேல என்ன காலேஜு...” “சும்மா ஊர் ஊரா சுத்திகிட்டு...” இப்படி பல விதமான வார்த்தை அம்புகளை எதிர் கொண்ட போதும், செவிலியத்தின் மீதான காதலும், என் குடும்பத்தின் ஒத்துழைப்பும் என்னை இந்த புள்ளி நோக்கி நகர்த்தி இருக்கிறது.
சமூகத்திற்கு மேலும் சிறப்பான சேவை வழங்க என் புத்தியை கூர் தீட்டப் போகிறேன். ஆக இந்த இரண்டு வருடமும் எழுத்தென்ற ஓடம் கரை ஒதுங்கி நிற்க போகிறது. இரண்டு ஆண்டுகள் கழிந்து காலம் அனுமதித்தால் எழுத்துலக கடல் தேடி அந்த சிறிய ஓடம் வரும்... வாசகர்கள் எண்ண அலைகளில் நான் மீதமிருந்தால்.
கண்டிப்பாக பாங்கியர் பந்தத்தை நிறைவு செய்து விடுவேன்.
பிரிவோம்... சந்திப்போம்.
அன்புடன்...
மீனு @ மேக்னா சுரேஷ்.
Pantham 16 1
Pantham 16 2