அருமையான பதிவு மிலா.சொத்துக்காக கனகவேல் எதுவும் செய்வான் என தெரிந்து செல்வராஜ் மொத்த சொத்தும் வத்சலா பேருக்கு எழுதியதோடு,யார் பெயரிலும் எழுதக்கூடாது என சத்தியம் வாங்கியது சரிதான்.இல்லா விட்டால் கனகு அதையும் வாங்கியிருப்பான்.
வத்சலா உண்மை தெரிந்து கணவனை பிரிந்த பின்,பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை கொடுத்து
அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி,யாரையும் எதிர்பார்க்காமல் நிமிர்ந்து நின்றது அருமை.
நாலு பசங்களா.இவ பதினெட்டு வயசு கன்னி சிட்டு.பாட்டியும்,பேத்தியும் பண்ற அலப்பறை தாங்க முடியலை,கிருஷ் தேவையில்லாம வாய கொடுத்து வாங்கி கட்டிக்கறானே
"கூறு கெட்ட குப்ப". தேவையாடா கிருஷ்..
மதியானம் சமைச்ச சாப்பாட்டை சாப்பிட்டாலேபத்து நாளைக்கு எந்திரிக்க முடியாது.
இரவைக்கு மிஞ்சியத கொடுப்பீங்களா,புது மெனுவான்னு கேட்கறாளே.தாத்தாக்களையும், வத்சலாவையும் பேசியே கவிழ்த்தவ,அன்பழகிய வேலைக்காரின்னு சொல்ல காரணம் என்ன.
அடிப்பாவி...ரெண்டு வருசமா கிருஷ்ணாவோடு போன்ல பேசுனது இவ தானா.கோதை கிருஷை கல்யாணம் செய்து இங்கே வந்தது அன்பழகிக்காகவா.அன்பு கோதையின் தோழியா...