அவளுக்கு ரவி கிட்ட எப்படி பேசுறதுனு தெரியலை......
இவனுக்கு ஷர்மி கிட்ட எப்படி நடந்துக்குறதுனு தெரியலை.......
ஷர்மி வீட்டில் அம்மா ரவியா இருந்துட்டு இப்போ மாமியார் ரவியா இருக்கிறான்......
சில பிடித்தம் வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் பார்க்காது தான்....... ஆனால் சில நேரம் அதுவே நம்மளை விட்டா இவளுக்கு/இவனுக்கு வேற வழியே இல்லை னு ஒரு நிலமைல கொண்டுபோய் விடுது.......
ரவிக்கு ஷர்மி மேல பாசமோ அக்கறையோ இருந்தாலும் சரியா வெளிப்படுத்தலை.......
பேச தெரியலைனா செயலிலாவது காட்டலாம்.....
இவன் என்னை யாரும் புரிச்சுக்கலை லைனை விட்டு வெளியே வரவே இல்லை.......
இப்போ கூட பிரசவம் வரை வேணான்னு தான் இந்த டீல்ல இருக்கான்.......
இந்த ஷர்மி மனசுக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை ஓடுதே.......
ரவி இளுத்து பிடிப்பானா இல்லை எப்போவும் போல் கம்பெனி முக்கியம் னு கவனிக்காமல் விட்டுடுவானா???
சந்தோஷ் ரவியை நம்பி தான் கல்யாணத்துக்கு கேட்டிருக்கான்......
சும்மாவா மச்சான் கிட்ட கேட்டதும் எவ்ளோ fast-டா வேலை நடக்குது.......
மாமனார் என்ன வேணாம்னா சொல்லப்போறார்...... நாம வீட்டில் கிடைக்காத உறவு பந்தபாசம் அங்கே கிடைக்கும்னு ஓகே தான் சொல்லுவார்......
moreover லட்சுமி வழி சொந்தம்...... all in all மருமகன் தங்கை வேற......
இந்த வீட்டில் பிள்ளைகளுக்கு இனி ஒரு ஓட்டுதல் வரப்போறதில்லை..... போற இடத்தில கிடைத்தால் உண்டு......
ரவி கௌஷி convo அழகு
ஆக மொத்தம் மச்சினனும் ரவி பொறுப்பில் விட்டுட்டான்......
தங்கையும் அண்ணன் பொறுப்பில் விட்டுட்டா......
மாமனாரும் மருமகன் பொறுப்பில் விடப்போறார்......
பொண்டாட்டி வீட்டுக்காரன் நினைச்சா சாதிச்சிடுவான்னு இருக்கப்போறா.....
எல்லாம் சரினாலும் இந்த ஏழரை சீதா சும்மா இருப்பாங்களா???
இதுவரை வாங்கிக்கட்டிக்கிட்டதில் பையன் பார்த்துக்கட்டும்னு விட்டுடுவாங்களா???
இவ்ளோ நாள் ரவி கையில் இருந்த வீடு கௌஷி கைக்கு போனால் நல்லா தான் இருக்கும்.......
முக்கியமா நல்ல சாப்பாடு கிடைக்கும் சந்தோஷுக்கு
ரவி வீட்டில் கௌஷி கிளம்புனா ஷர்மி ரவிக்கு தனிமை கிடைக்கும் போல.......