E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Adhirith

Well-Known Member
MM-மே
பூரி சுடட்டும் பா அந்த நான்கு நாட்களுக்கு என்ன பூரி சுட்டு இருக்கங்கானு தெரியலை சோள பூரியா ஸ்டாப்புடு பூரியா சின்ன சின்ன பூரியா நீங்கஎல்லோரும் கொஞ்சம் மாவு பிசையுங்கன்னு மாவு பிசையவிட்டுடாங்க

பாணி பூரியா,பேல் பூரியா?????
அவற்றை ஏன் விட்டுட்டீங்க....


:p:D
 

Adhirith

Well-Known Member
நிறைய கேள்விகள் வருது......
1. சுந்தரியின் தோற்றம் ...... வடிவு பாட்டி லட்சணமா இருப்பதாக சொல்லறாங்க..... கலர் மட்டும் தான் கம்மி .......கண்ணன் பார்வையில் அவ குண்டு.... முகத்துல பரு...... எண்ணெய் வழியும் தலை ...... நாகரீக உடை இல்லை..... கருப்பு...... இவங்க ரெண்டு பேருல யாரு சொல்லறது நிஜம்...... சுந்தரி கருப்பு வகைல சேர்த்தி என்பது தவிர வேற இங்கே பெரிதாக குறை என்று இல்லை என்று என்னோட எண்ணம் ...... எதோ ஒரு படத்துல சுஹாசினி பட்டிக்காட்டு தோற்ற துலா வருவாங்க..... என்ன புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு......பாட்டு வரும்( ஒரு லைன் தான் தெரியும்) ...... பெஅஉட்டி பார்லர் கூட்டிட்டு போனா தீர்ந்து போற பிரச்சனை......

2. கணவன் மனைவி உறவு ......கண்ணன் எதோ ஒரு காரணதோடு தான் உறவு கொண்டதாக வருது........ அந்த நேரத்தில் அவள் மேல் ஏற்பட்ட ஒரு ஈர்ப்பு ....... அல்லது பெண்ணை முழுமையா தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வம் ......எதுவாக இருந்தாலும் அவளை அந்த நிமிடம் பிடித்ததனால் தானே நிகழ்ந்தது......குழந்தை உருவானதால் கேட்ட பேச்சுகள் தான் சுந்தரி வேண்டாம் என்ற எதிர்மறை எண்ணத்தை கொடுத்ததா வருது ...... அவன் மனஉறுதி இல்லாதவன்.... இப்படி பட்ட அழகில்லாத பெண்ணிடம் மயங்கி விட்டான் என்ற மாதிரி பேச்சுகளா அவை...... ஏன் இப்படி ஒரு சந்தேகம் எனக்கு என்றால்..... அவன் கவுன்சிலின் போது அவள் தன்னோடு வேறு ஊருக்கு வந்து விட்டால் விவாகரத்து வேண்டாம் என்று சொல்கிறான்..... சோ, மற்றவர்கள் பேசிய கேலி தான் அவன் முடிவுக்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது எனக்கு......


3.சுந்தரி...... கண்ணன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கோ ..... பார்த்த உடன் ஏன் அழுகை வரணும்.....அவனை வேண்டாம்னு சொன்னது கூட அவன் அவளை வேண்டாம் என்று சொன்னதால் தானோ..... அவளுக்கு தான் அழகில்லை என்ற தாழுணர்ச்சி எல்லாம் இல்லை......அவனை ரசிக்காமல் அவன் ஸ்டைல் மட்டும் பிடித்திருக்க முடியுமா ...... அனால் மகனுக்காக மட்டும் என்றால் அவள் கண்ணனை மறுத்து விடுவாள் உறுதியாக......

4.கண்ணன் ..... கிராமத்தில் பிறந்தவன்...... அப்பா ஒரு விவசாயி ...... அனால் வளர்ப்பு மட்டும் மேல் தட்டு முறைஎலா .......எதையும் கணிக்க முடியவில்லை..... தான் ஆடாவிட்டாலும் தான் சதை ஆடும் என்பது தான் மகன் விஷயத்தில் மட்டும் தானா ....... அப்படி இல்லை என்று எதோ ஒரு பட்சி சொல்லுது..... கண்ணனுக்கும் நிலத்தில் உழைத்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவனால் சுந்தரியை முழுமையாக புரிந்து கொள்ள முடியுமா......

கொஞ்சம் பெருசா போய்டுச்சு .....ஆனா நினைத்ததை எல்லாம் கொண்டுவர முடியலை ..... சாரி ......
Interesting episode
Thankyou very much. Mallika :D:D:D

அவனைப் பார்த்ததும் வரும் அழுகைக்கு,
ஈர்ப்பு தான் காரணமாக இருக்கணுமா....

இவன் தானே,தனது துன்பத்தின் காரணம் என்ற
வேதனையில் வந்த அழுகையாகவும் இருக்கலாம்.....
 

ThangaMalar

Well-Known Member
manamparkka maruppor mun padaithai kannaa
niram parthu veruppor mun koduthai kannaa
iNam parthu enai serkka marandhai kannaa
nalla idam parthu silaiyaaga amarndhai kannaa
poNNaana manam ondru thandhai kanna
adhil mul pondra ninaivondru vaithai kannaa....

Super, fathi...
உன் உதவிக்கு இது....


மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் முள்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
 

murugesanlaxmi

Well-Known Member
என் துறையில் பணிபுரியும் சகஊழியரின் சிறுசெய்தி:-பாத்ரூமில் பிளிசிங்பவுடர் பயன்படுத்ததீர்(கோப்பை,டைல்ஸ்) சிமெண்ட்தரையில் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.பாத்ரூமுக்கு tc(எ)tic tic என்ற கெமிக்கல் பயன்படுத்தவும் பினாயில் சோப்புஆயில் விற்கும் கடையில் கிடைக்கும்.விலை 5௦ரூ/-
 

ThangaMalar

Well-Known Member
தங்கமலர் சகோதரி,பார்த்தேன் ரசித்தேன் படம்தானே?

ஆம் சகோ...
உங்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறதே!!!!!

மணிமேகலை சகோதரி, இளையராஜாவால் நோட்டிஸ் அனுப்பமுடியாது. ஏனெனில் அதில் m.s.விஸ்வநாதன் சேர்ந்து பணியாறியப்படம்.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பின்ன அவள் பெண்மையையை உணரசெய்த்தவனின் வாசனை ஓட்டிட்டு தான் இருக்கும் உயிர் இருக்கும் வரை போகாது அந்த வாசனை அதுமட்டுமா அந்தவாசனையே இடுப்புல வச்சிக்கிட்டு சுத்தறா எப்படி மறக்கும்

ஹா ஹா ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க செம போங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top