Hi mam
இலகுவாக கூறுவிட்டீர்கள் பலமான நிராகரிப்பு என்று,உண்மைதான் ஆனால் உயிரும் உணர்வும் உள்ள பெண்ணை பொருளைப்பரிசோதித்து நிராகரிப்பதுபோன்று அச்சிறுபெண்ணையும் சில நாட்கள் பரிசோதித்து நிராகரித்துவிட்டார் கண்ணன்,விருப்பமில்லாத திருமணம் என்பதை சுந்தரிக்கு சொற்ப நாள் வாழ்ந்து காட்டித்தெரியப்படுத்தவேண்டிய அவசியமில்லை கண்ணனுக்கு,விருப்பமின்மையை திருமணத்திற்கு முன்பே காட்டி திருமணத்தை நிறுத்தியிருக்கவேண்டும் ,அல்லது தவிர்க்கமுடியாத காரணத்தால் திருமணம் நடந்தாலும் அவசரமாக முடிவெடுக்காமல் இப்போது யோசித்தது போன்று நிதானமாக யோசித்து அவருடன் பழகியிருந்தால் மனம்விட்டுப்பேசியிருந்தால் ,அவரின் பழக்கவழக்கம் பண்பு குணம் போன்ற செயல்களைப்பார்த்து,பழகப்பழக நாளடைவில் தோன்றும் பாசமானாது நாளாக நாளாக அதுகாதலாக மாறியிருக்கும்,தோற்றத்துக்கான முக்கியத்துவம் பின்னடைந்து சுந்தரிக்காகவே சுந்தரியை காதல்செய்திருப்பார்,ஆறஅமர இப்போது வந்து பார்த்து,பார்த்தவுடனே கொஞ்சமேனும் சுந்தரி மரியாதையாகவோ அல்லது பாசமாகவோ அல்லது குழந்தையை காட்ட வேண்டுமென்று நினைப்பதில் நியாயம் இல்லை,அது கண்ணனுக்கும் புரிந்துதான் இருக்கின்றது,எனக்கு என்னவோ வெறும் நன்று கூறிச்செல்வதற்காக வந்தமாதிரித் தெரியவில்லை,சின்ராசு மாதிரி ஆட்களை கொஞ்சம் கவனத்தில் வைக்கவேண்டும் சுந்தரி,தன்னுடைய ஏமாற்றுத்தனம் சுந்தரிக்கு தெரிந்துவிட்டது அதனால் இனி திருந்தவோம் என்று நினைக்காமல் அடக்கிவாசிப்போம் என்று நினைக்கின்றார்,ஆபத்தான மனிதர்போல,இவரால்தான் சுந்தரியின் வாழ்க்கையில் கண்ணன் மீண்டும் நுழைவார் என்று நினைக்கின்றேன் .சுந்தரிக்குள் கண்ணனைப்பற்றி ஏதோவொரு உணர்வு இருக்கின்றது ,அதற்கு அவருக்கு பெயர்தெரியவில்லை,ஏனெனில் இதுவரை அழாத பெண் அன்று அழுததும், இதுவரை கண்ணனைப்பற்றி பேசாதவர் இன்று பேசியது ,எதுவோ இருப்பதனால்தான் இச்செயல்கள் நடந்திருக்குது,பொறுத்திருந்துபார்ப்போம்.
நன்றி
Aravin22