வாவ் சூப்பர் சூப்பர்
ஸ்ருதியின் பர்த்டே செலிப்ரேஷன்
ஆரம்பம் என்னவோ நல்லாத்தான்
ஆரம்பிச்சது
ஆனால் முடிவுதான் சேடாயிடுச்சு
ஹா ஹா ஹா
ஸ்ருதி ஸ்ரீஜன் குட்டி இரண்டு பேரும்
மஞ்சள் கலர் டிரஸ் தனக்கு மட்டும்
மை ஊதா கலர் ஷர்ட்டுன்னு அஸ்வின்
பய புள்ள நொம்ப ஃபீலு பண்ணிச்சு
அப்போறம் மஞ்சாக் கலர் சட்டை
போட்டதும் அஸ்வின் மாப்பிள்ளைக்கு
ஹேப்பி ஆயிடுச்சு
ஹா ஹா ஹா
"மஞ்சக் காட்டு மைனா என்னைக்
கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்சக் காட்டுக்குள்ளே அவ காதல்
சொல்லிப் போனா
காதல் கலவரம் தாக்கும் அது இரவினில்
வெயிலும் பூக்கும்.........."
மீனாட்சியம்மன் கோயிலில் சாமி கும்பிடும் ஸீனும் சூப்பர்
ஹோட்டலில் குழந்தைக்கு அவள் உணவு
ஊட்ட ஸ்ருதிக்கு அஸ்வின் ஊட்டி விடும்
ஸீனும் சூப்பர்
கவிதையாக இருந்தது, மகேஷ் டியர்
உப்புமாவோ உப்பில்லாத மாவோ
ஹாஸ்டலில் எந்த உணவு போட்டாலும்
சாப்பிட்டு விடணும், ஸ்ருதி
இல்லாட்டி இப்படித்தான் பசியில்
மயக்கம் வரும்
இவங்க அந்த நகைக்கடைக்கு
போயே இருக்க வேண்டாம்
கூறு கெட்ட குப்பாயி ஸ்வேதா செஞ்ச வேலையாலே யார் யாரிடமோ பாவம்
அஸ்வின் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டியிருக்கு
எனக்கும் அதே சந்தேகம்தான்
அது எப்படி பால் குடி மாறாத பச்சைக்
குழந்தையைக் கூட விட்டுட்டு ஒரு
பெண்ணால் அடுத்தவனுடன் ஓடிப்
போக முடியுது?
இவளெல்லாம் ஒரு தாய்தானா?
முதலில் இந்த ஸ்வேதா பெண்தானான்னு சந்தேகமா இருக்கு
அந்த பையன்தானாச்சு ஒரு குழந்தையின் அம்மாவை எப்படி கூப்பிட்டுக் கொண்டு போனான்?
என்ன காதலோ? கண்ராவியோ?
அதான் கடவுளுக்கே பொறுக்காமல்
விபத்து நடந்ததோ?
எது எப்படியோ போனவள் போயிட்டாள்
இருக்கும் அஸ்வின்தான் எல்லோரின் வாயிலும் விழுந்து எழுறான்