"நல்லவர்கள் போல் பேசி ஏமாற்றும்
நயவஞ்சகர்களுக்கு மத்தியில்
நானாக நான் இருப்பதில் தவறில்லையே"
"பெண்ணிவள் இப்படியெல்லாம் இருக்ககூடாது என
புறம் பேசுபர்களுக்கு
உன்னை பெற்றவளும் பெண்தானே என்று
பதிலடி கொடுத்து
நானாக நான் இருப்பதில் தவறேதும் இல்லையே"
"தனியாக செல்லும் போது
தடியன் ஒருவன் தவறாக பேசினான்
அவனை தடியால் அடித்தேன்
நானாக நான் இருப்பதில் தவறேதும் இல்லையே"
"வைகையாய் நான் வளைந்து ஓடி
வளத்தை பெருக்க நினைத்தேன்
என்னை வாய்க்காலாய் இருக்க வேண்டும் என்று வம்பு பேசினர்
அவர்களின் வாயை உடைத்தேன்"
"இவள் திமிர் பிடித்தவள் என்று திட்டி தீர்த்தனர்
தெளிவாய் கூறினேன்"
"தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் உங்கள் கண்களுக்கு
என் செய்கைகள் அனைத்தும்
தவறாய் தான் தெரியும்"
"நான் திமிர் பிடித்தவள் தான்
உங்கள் தப்பை சுட்டி காட்டியதால்
எனக்கு நீங்கள் கொடுத்த பட்டம் இது"
"பட்டம் இதை மகிழ்வுடன் ஏற்கிறேன் நான்
உன் முன் கோழையாய் நிற்பதைவிட
நான் நானாக திமிர் பிடித்த பெண்ணாகவே நிற்கிறேன்'
"நான் நானாக இருப்பதில்
தவறேதும் இல்லை எனக்கு
அப்படி உனக்கேதும் இருந்தால்
என்னை விட்டி விலகு"
நயவஞ்சகர்களுக்கு மத்தியில்
நானாக நான் இருப்பதில் தவறில்லையே"
"பெண்ணிவள் இப்படியெல்லாம் இருக்ககூடாது என
புறம் பேசுபர்களுக்கு
உன்னை பெற்றவளும் பெண்தானே என்று
பதிலடி கொடுத்து
நானாக நான் இருப்பதில் தவறேதும் இல்லையே"
"தனியாக செல்லும் போது
தடியன் ஒருவன் தவறாக பேசினான்
அவனை தடியால் அடித்தேன்
நானாக நான் இருப்பதில் தவறேதும் இல்லையே"
"வைகையாய் நான் வளைந்து ஓடி
வளத்தை பெருக்க நினைத்தேன்
என்னை வாய்க்காலாய் இருக்க வேண்டும் என்று வம்பு பேசினர்
அவர்களின் வாயை உடைத்தேன்"
"இவள் திமிர் பிடித்தவள் என்று திட்டி தீர்த்தனர்
தெளிவாய் கூறினேன்"
"தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் உங்கள் கண்களுக்கு
என் செய்கைகள் அனைத்தும்
தவறாய் தான் தெரியும்"
"நான் திமிர் பிடித்தவள் தான்
உங்கள் தப்பை சுட்டி காட்டியதால்
எனக்கு நீங்கள் கொடுத்த பட்டம் இது"
"பட்டம் இதை மகிழ்வுடன் ஏற்கிறேன் நான்
உன் முன் கோழையாய் நிற்பதைவிட
நான் நானாக திமிர் பிடித்த பெண்ணாகவே நிற்கிறேன்'
"நான் நானாக இருப்பதில்
தவறேதும் இல்லை எனக்கு
அப்படி உனக்கேதும் இருந்தால்
என்னை விட்டி விலகு"
Last edited: