மழைக்காலை
தேகம் தீண்டும் தென்றல்
மேகம் மறைக்கும் கதிர்கள்
குளிரால் வந்த சிலிர்ப்பு
கண் முன்னே வானவில்
இன்னும் இன்னும்
இயற்கையை ரசித்திட
தூண்டுதே
கண்ட காட்சி எல்லாம்
மரத்தில்
மறைந்திருக்கும்
மழைத்துளியே
மண்ணில் விழும்
முன்
உன் மாயவலையில்
என்னைப்பிணைத்தாயே
கனியிவள்
இவள் மேல்
காதல் கொண்டாயோ?
“பூலோகத்தில்
பெண் குழந்தையின்
வருகை
பூந்தென்றலாய்”
“தத்தி நடைபயிலையிலே
நம்பி பிடித்துக்கொண்டாள்
நானிலத்தில் தான்
தோன்ற
காரணமாய் இருந்தவர்களின்
கரங்களை”
“பெண்ணின்
ஒவ்வொரு பருவத்திலும்
ஒளித்துக்கொண்டால்
தன்னுள்ளே
தனலாய் தகிக்கும்
வீரமதை
தானாய் வளர்த்துக்கொண்டாள்
தன்னை...
“இந்தியாவில்
எத்தனையோ
பிரச்சனை எந்நாளும்
வீற்றிருக்க
தீர்த்திட வழி இன்றி
திக்கி அரசு நிற்க
திக்கெங்கும் தோரணம்
அந்திய நாட்டின்
அதிபரை
ஆரவாரமாய் வரவேற்க”
“பாதுகாப்பிற்கு
பல கோடி
செலவு செய்து
பத்திரமாய்
பார்க்கும்
அவசியம்
அவர்க்கு என்ன
மனிதர்களுக்கு
நடுவே
மண்ணில் பிறந்த
ஓர்...
“பொன்னி உன் மேல்
பொங்கிடும் பாசத்தை
பொதித்தேன்
என் நெஞ்சில்”
“போகிற வழியிலே
பொன்னி
நீ
பார்க்கையிலே
போனதடி
என் உயிர்
உன் ஒற்றை
கண்ச்சிமிட்டலில்”
“அழகோவியமாய்
அகம் பறித்தவளே
நான்
ஆனந்தம் அடைந்திட
ஒரு முறை
அழைத்திடடி
மாமா என்று
உன் திருவாய்
மலர்ந்து”
“ஆயுள் முழுதும்...
“விற்புருவ
மத்தியிலே
ரத்தநிற பொட்டிட்டு
மீன் போன்ற
கண்ணிலே
மயக்கிட
மை இட்டு
காஞ்சியிலே
நெய்த பட்டில்
என் நெஞ்சைத்தைத்து
போனவளே
நேசம் கொண்ட
என் நெஞ்சை
பாசத்தோடு பற்றிக்கொள்ளடி”
“நிதம் கடக்கும்
நூறு நிலைகள்
நீங்காத நினைவலைகள்
சிறு சிறு சோம்பல்கள்
சில பல சிக்கல்கள்
தடையற்ற சிந்தனைகள்
தாங்கமுடியாத வேதனைகள்
முற்றுப்புள்ளி
இவற்றுக்கு வைத்திடத்தான்
இறைவன் தந்தான்
நித்திரை”
“கண்கள்
கூசிட
காலைகதிரவனின்
கதிர்கள்
சாளரத்தின்
வழியே
சன்னமாய்
என்னை தாக்க
சட்டென்று விழித்தேன்
சயனத்தில்
கண்ட அவள்
முகம்
சடுதியில் மறைய
இதயத்தின்
நுழைவு வாயிலில்
என் இனியவள்
நுழைந்திருந்தாள்
கனவில் கண்டவளை
இன்றைய தினம் கண்டு
காதலைச்சொல்லி
கரம்பிடிக்கும்
நாள் குறித்து...
“பெண்ணாய் பிறந்து
மண் பார்த்து
நடந்து
குணத்தில்
குன்றிலிட்ட விளக்காய்
மனத்தால்
கோபுர கலசமாய்
இளமையின்
பூரிப்பில்
பேரழகியாய் நிற்கும்
பெண்ணிற்கு
பெண் பார்க்கும்
படலம்”
“மஞ்சள்நிற
மங்கையிவள்
புடவை
சரசரக்க
பூமி பார்த்த
பார்வையில்
உறவுகள்
புடைசூழ
சபையினில்
வந்து நிற்க...
“ஓடிக்கொண்டிருக்கும்
நகர வாழ்வை
சற்றே நகர்த்தி
குளிர் பிரதேசத்திற்கு
ஓர் குடும்பச்சுற்றுலா”
“கொண்டைஊசி
வளைவுகள்
கொண்ட
கொடைக்கானல்
மழை அடிவாரம்
அடைந்தேன்”
“வளைவுகள் கொண்ட
சாலையிலே
வண்டி சென்றிட
வானம் பார்த்தேன்
ஜன்னல் வழியே
என் வசம் இழந்தேன்
கண்ட காட்சியில்”
“மலைகளின்...
“மரங்களின்
நடுவே தூறிடும்
மழைத்துளியில்
அன்று மலர்ந்த
பூவின் மேல்
விழுந்த
மழைத்துளியாய்
உன் இதழில்
புன்னகை
தவழ்ந்திட
மயக்கும் மாலையில்
தேநீரோடு
இளைப்பாறிடு
சிறு இடைவேளை
எடுத்து
மாலை வணக்கத்துடனும்
மாறாத பாசத்துடனனும்
கனி”
“அறிவியலே
உன் வளர்ச்சியில்
வஞ்சம் கொண்ட
வஞ்சி இவள் அல்ல
உன் அசுர வளர்ச்சியில்
ஆனந்தம் தொலைத்த
அவனியின் ஒரு அற்ப பெண் இவள்”
“உன் அறிய வகை
கண்டுபிடிப்புகளில்
அணுஅணுவாய்
தொலைகிறதே
எங்கள்
அழகிய வாழ்வு”
“பேஸ்புக்காய் நீ வந்தாய்
பரந்த உலகத்தை
பாங்காய் உள்ளடக்கினாய்
பதின்ம வயது...
“அறிவியலே
உன் வளர்ச்சியில்
வஞ்சம் கொண்ட
வஞ்சி இவள் அல்ல
உன் அசுர வளர்ச்சியில்
ஆனந்தம் தொலைத்த
அவனியின் ஒரு அற்ப பெண் இவள்”
“உன் அறிய வகை
கண்டுபிடிப்புகளில்
அணுஅணுவாய்
தொலைகிறதே
எங்கள்
அழகிய வாழ்வு”
“பேஸ்புக்காய் நீ வந்தாய்
பரந்த உலகத்தை
பாங்காய் உள்ளடக்கினாய்
பதின்ம வயது...
“படைத்த பிரம்மனுக்கும்
பிரம்மிப்பை தந்தவள்
அவள்
பேசாத பதுமை
அவள்”
“வாய் உதிர்க்காத
வார்த்தை
அவள்
கண்கள்
பேசிடும்
கருவிழி
அழகாய் அசைந்தாட”
“ஊமை
அவள் என
பட்டம்
கொடுத்தனர் பலர்
அவள்
உதிர்க்கும்
ஒரு சிரிப்பில்
உடைந்து போனது
பட்டங்கள் எல்லாம்”...
“உற்றத்துணை
என்
உயிர்த்தோழியுடன்
ஊடல்”
“செல்லக்கோபம்
சிலநேரம்
சின்னசண்டை
பலநேரம்
வாக்குவாதம்
வண்டிக்கணக்காய்
இருந்தும்
வருத்தம் தராது
எங்களுக்கு
எதுவும்”
பேசாமல்
அவளை பார்க்காமல்
சிறிய பொழுதுதான்
சென்றிருக்கும்
சிறு சிரிப்போடு
சேர்த்து வைப்பேன்
அவள்
தட்டில்
என் உணவை...
"உன்னை
கண்ட நொடி
முதலாய்
கலங்கியதே
என் நெஞ்சம்"
"கலங்கிய நெஞ்சமதில்
மஞ்சம் அமைத்து
மன்னன் போல்
நீ வீற்றிருக்கும்
விந்தை எதுவோ?"
"உன்னில்
தொலைந்தேனா
இல்லை
என்னை தொலைத்தேனா
தேடியும்
விடை கிடைக்காத
விந்தை எதுவோ?"
"நீ
உதிர்த்த
ஒரு சிரிப்பில்
உன்னிடத்தில்
என் இதயம்
வந்த...
“நேற்றைய
மழைத்துளியின் மிச்சம்
மண்ணில்
மறைந்திருக்க
மண்வாசத்தை
சுவாசித்து
முழித்து எழுந்தேன்
இன்றைய நாள்
என்னவெல்லாம்
கற்றுக்கொடுக்கப்போகிறது
என்ற
ஆர்வத்தோடு
காண்போம் இன்றையவிடியல்
எத்தகையது என
இன்பம் தந்தால்
நெஞ்சில் நினைவாய்
ஏற்போம்
துன்பம் தந்தால்
அந்த துக்கத்தை
அக்கணமே...
“காயம் பட்ட
நெஞ்சில்
களிம்பு
பூசிட வந்த
காதல்
கத்தியால்
கீறிவிட்டு சென்றது
என் இதயத்தை”
“என் வாய்வழி
உரைக்காத
காதல்
என் கவிவழி
உணர்ந்திருப்பாய் என
நான் கனவு காண
நீயோ
கைவிட்டு சென்றாய்
என்னை
காட்டாற்று வெள்ளத்தில்”
“சொல்லாத
என் காதல்
சோகம் தந்ததோ
எனக்கு”
“என்...
“குயிலின் குரலில்
துயில் கலைந்து
மயில் போல்
அசைந்தாடி
சிறிதாய் சோம்பல்
முறித்து
சிறகு விரிப்போம்
பரந்த உலகில்
நம் தடம்
பதித்திடத்தான்
கனியின்
கனிவான
காலை வணக்கம்”
"தும்பி
நீ செய்யும்
வம்பு தான்
தீரவில்லை
தினமும்"
"மழை
அறிகுறியாய்
நீ
மாநிலத்தில்
திரிகையில்
மகிழ்ச்சியாய்
இருக்கிறது"
"சாலையில்
செல்லும்
வாகனங்களின்
வேகத்தில்
உன் சிறகுகள்
செயலிக்கையில்
வேதனை தான்
விளைகிறது"
"புராணங்களில்
நீ
தூது சென்றாயே
மழை வரும்
செய்தியையாய்
தூதாய் எங்களுக்கு
தந்தாயோ"...
“பெண்ணே
உன் வாழ்வில்
சண்டைகள்
ஏராளம்
சஞ்சலங்கள்
ஏராளம்
சச்சரவுகள் இங்கு
தாராளம்
இருந்தும்
பெண்ணே
இமயமலையின்
மிடுக்கோடு
எழுந்து நில்
இப்புவியில்”
“பாசமும்
பரிவும் கொண்ட
பனித்துளி தான்
பெண்ணினம்
இருந்தும்
பனிப்புயல் வந்தால்
பரிதவிக்கும் பாரதம்”
“பிரச்சனை
பல்லாயிரம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.