Hi mam
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை,ஓ துளசி போய்விட்டார்,எல்லோரும் ஒன்றுமே இல்லாமல் வாழ வந்தவள் என்று இளக்காரமாக நினைக்கின்றனர்,ஆனால் இதோ துளசியுடன் அந்தவீட்டின் நிம்மதி சந்தோசம் அமைதி எல்லாமே வெளியே போகின்றதே,பணம் என்னும் செல்வத்துடன் வராவிட்டாலும்கூட வாழ்க்கைக்கு தேவையான அமைதியான வாழ்க்கையை அந்த வீட்டினருக்கு துளசி அள்ளி அள்ளி கொடுத்தாரே,இப்போ அந்த வீட்டிலிருப்பவர்கள்தான் ஒன்றுமே இல்லாதவர்கள்,தன்னுணர்வை ஒரு பெண் காட்டியது தப்பா ,அதை திருவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே,திருமணமான புதியதிலிருந்த மாதிரி இன்று வரை ஒரேமாதிரி இருக்க முடியுமா,மனித மனம் மாற்றத்திற்கு உட்படுவது இயல்புதானே,அதையே திரு துளசியிடம் கடைசிவரை எதிர்பார்த்தால் திருவைப்போல ஒரு முட்டாள் யாருமே கிடையாது,அதை எதிர்பார்க்க துளசி ஒன்றும் இயந்திர மனிதன் கிடையாது,உணர்வுள்ள பெண்,மற்றவர்களிடம் தன் பெண்டாட்டியை விட்டுக்கொடுத்து பேசாதது பெரிய விடயமில்லை,அந்தப்பெண்டாட்டியை சந்தோசத்துடனும் மன நிம்மதியுடனும் வைத்திருப்பதுதான் பெரியவிடயம்,இதிலிருந்த திரு தவறிவிட்டார்,திரு என்ன சரியான காரணம் சொன்னாலும் சரி இனிவரும் வாழ்க்கையில் எவ்வளவு சந்தோசம் நிம்மதி இருந்தாலும், இழந்த நீண்ட 13 வருடம் திரும்பி வருமா.
நன்றி