ThangaMalar
Well-Known Member
கதை சுருக்கமாக..அறியாத வயதில்
அறிந்த காதலும்
புரியும் வயதில்
உணர்ந்த உண்மையும்
விலகிட செய்தது...
அருகில் இருக்கும் போது
விலகல் வலி தரவில்லை..
தூர சென்ற போது
காதல் விலகி செல்ல மறுக்கிறது..
வாழும் நாட்களில்
கடந்து போகும் நபர்கள் பலர்
சில தடயங்களை விட்டுச் செல்லும்
நபர்கள் சிலர்..
நேர்மை உள்ளம்
நேர்மையாய் காதல்
சொல்லதயங்கியது
உண்மை சொல்ல
தயங்கவில்லை...
தவறு டன் இணைவது கடினமென..
அன்பும் அக்கறையும்
கொண்டவன்
காதல் நெஞ்சத்தின்
விலகல் வலி தந்த போதும்
தவறுகளை சரி செய்ய முடியாது
என் புரிந்து..
அவளது நேர்மை கவுரவித்து
அவளது காதலுக்கு
மரியாதை செய்த
காதல் கணவனாகிறான்...
அருமை பாத்திமா..