அடிப்பாவி...யாழினி இப்படி அசிங்கமா பொய்யை சொல்லி இருக்கா
,என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்காம பவித்ரா அவள ஓட வச்சதா தேவி வீணா பழி போட்டு குடும்பத்தையே பிரிக்க பார்த்திருக்கா ராட்சஷி
.
பொண்ணு ஓடிப் போய்டான்னு சொல்றது பரவாயில்லையா,கல்யாணத்துக்கு முன்னே கர்ப்பமா இருக்கான்னு சொல்றது பரவாயில்லையான்னு பவித்ரா தன் குடும்பத்தை பார்த்து கேட்டது சரிதான் பிரபாவுக்கு இப்போதாவது கேட்கனும்னு தோனுச்சே
.
பவித்ரா ஹால்ல தொட்டில் கட்டி வந்தவங்களை மாடிக்கு போக வைக்கிறதும்,பிரபாகரை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு அவங்கள வெளியே போக வைக்கிறதும் அருமை.
.
யாழினியோட நகையெல்லாம் அவங்க பொண்ணுக்கு போடவும் தான் ஆத்தாளுக்கும்,மகளுக்கும் சொத்தை பிரிச்சு வாங்குனா அதுவும் போயிடும்னு தெரியுதா
.
சிதம்பரம் தன்னால அலைஞ்சு வியாபாரம் பார்க்க முடியாதுன்னு சொல்லவும் தான் தேவி அவங்க நிலைய புரிஞ்சு இறங்கி வந்ததோடு,வெட்கமில்லாம யாழினி,பவித்ரா குழந்தைய பார்க்க வந்திருக்கான்னு சொல்லி நல்லா வாங்கி கட்டிக்கிட்டா
.