அருமையான பதிவு ரம்யா
.பிரபாகர் வயசு பிள்ளைங்களை வச்சுட்டு ரூம் அலங்காரம் வேணாம்னு தானே சொன்னான்
.அதுக்கு ஏன் வசுந்தரா நக்கலா சிரிக்குது
.
சித்ராவும்,காமினியும்,பவித்ராவிடம் பிரியமாக இருக்க,தன்னை திருமணம் செய்யாமல் பவித்ராவை
திருமணம் செய்த கோபத்தில் தர்ஷினியும்,அவளுடனே இருக்கும் யாழினி இவர்களால் பவித்ராவுக்கு பிரச்சனை வருமா...
.
வீட்டில் எல்லாம் விஷயமும் பிரபாவிடம் கேட்டு செய்ய,பொண்ணை பார்த்ததும் பிடிச்சிருக்கு கட்டி வைக்க சொன்னது மட்டும் குத்தமா
.திலகாவோட பயத்தை போக்காம வசுந்தரா,தேவி தூண்டி விடறாளுங்க பொம்பளைங்களா இவளுங்க ராட்சஷிங்க
.
கல்யாணம் ஆன ரெண்டு நாள்ல வசுந்தரா பேச்சை கேட்டு மகன்ட்ட போட்டு கொடுக்குதே திலகா, இதுவே பவித்ரா கிட்ட கேட்க வேண்டியது தானே
.பிரபாகர்,பவித்ராவை கண்டிச்சதுல ரெண்டு பேரும் அல்பமா சந்தோஷப்படறாங்க என்ன ஜென்மங்களோ
.
வசுந்தரா நைட்டு லேட்டா போயிட்டு,காலையிலே சீக்கிரமா வருமா
.இதோட மருமகள்ட்ட
இது பாச்சா பலிக்கலியா இங்கேயே கிடக்கு
.அம்மாவும்,பொண்ணும் இங்கேயே இருந்து என்னென்ன கலகம் பண்ணுவாங்களோ
.
ஆசைபட்டு கல்யாணம் பண்ணா மட்டும் போதாது,அம்மா சொல்றதை கேட்டு ஆடாம,என்ன நடந்ததுனு கேட்டு பொறுமையா பேசனும்,அவள நல்லபடியா பார்த்துக்கனும் என பிரபாகர் புரிஞ்சுக்குவானா
.