மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அட அட அட தேவதைகளாக அலங்கரித்து இரண்டு குட்டி இளவரசிகளுடன் கௌரி சங்கர் தம்பதி விழாவுக்கு வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்திருக்குமே
இதைப் பார்த்து ஒரு பாட்டியாக ரசித்து சந்தோஷப்படாமல் ஜமுனா மூதேவி எரிச்சல் படுதே
ச்சே இதெல்லாம் என்ன ஜென்மமோ?
இப்போ சிவா வீட்டுக்கு இவள் வந்து என்ன கிழிக்கப் போறாளாம்?
இரண்டு சின்னப் பிள்ளைகளை வைச்சுக்கிட்டு அல்லாடி லோல்பட்டு பைத்தியக்காரனாட்டம் மகன் தவிச்சப்போ கூட வந்து இருக்க முடியலை
இப்போ இடைஞ்சலுக்கு வர்றாளா?
ஆனால் இனி ஜமுனாவின் பப்பு வேகாது
சிவாவே நல்லா செமத்தியா கொடுத்து கட்டப் போறான்
விஜியும் டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு போறப்போ மகேஷ் வீட்டிலேயே இருந்து அவனுக்கு சாப்பாடு கொடுக்க ஜமுனா மூதேவிக்கு உடம்பு வணங்கவில்லையா?
மூட்டு வலின்னா அந்த மூட்டு பேர்த்தெடுத்து வெளியே வீசு ஜமுனா
சூர்யா தொல்லை கொடுப்பாள்ன்னு சொன்னால் அது கௌரிக்கும் சொந்தமான வீடு அதனால சூர்யாவுக்கும் அது சொந்த வீடுதான்னு சொல்லி பிள்ளைகள் மீது பாசத்தை கொட்டும் மேகலா எங்கே?
தான் பெற்ற மூத்த மகன் பொண்டாட்டி இல்லாமல் இரண்டு பிள்ளைகளை வைத்து கஷ்டப்படும் பொழுது கண்டுக்காமல் இருந்த அம்மா என்னும் அரக்கி ஜமுனா எங்கே?