ஹா... ஹா... ஹா..............ஹாய் மை டியர்ஸ்...எல்லாரும் எப்படி இருக்கீங்க...???என்னோட தொல்லை இல்லாமல் ரொம்ப நாள் நிம்மதியா இருக்கீங்கன்னு ரா பிரிவுல இருக்குற ஒன்பதாவது ஒற்றர் படை... தூக்கத்துல இருந்த என்னை எழுப்பி சொன்னதுனால... அப்படி எல்லாம் உங்களை நிம்மதியா விட்டுட்டா... ஊருக்குள்ள பெரியமனுஷனா சுத்திகிட்டு... தூங்கிகிட்டு இருக்குற எனக்கு என்ன மரியாதை இருக்கு... அதனால உடனே உங்க மேல இருக்குற பாசத்துல...ஒரு கதையுடன் உங்களை இம்சை பண்ண ஓடோடி வந்துட்டேன் ப்ரெண்ட்ஸ்...இனி உங்களை யாராலும் என்னிடம் இருந்து காப்பாத்தவே முடியாது... அதுனால யாரும் எங்கயும் ஓடி போக நினைக்காம... ஒழுங்கா நீங்களே வந்து இங்கே ஆஜர் ஆகிடுங்க சொல்லிட்டேன்... இல்லைனா... சங்கத்தின் சட்டம் உங்கள் மீது தாறு மாறாக பாயும் என்பதையும் இங்கே பணிவன்புடன் சொல்லிகொள்கிறேன்...நீங்க அனைவரும்... என்னுடைய முந்தைய இரண்டு கதைக்கு கொடுத்த ஆதரவு மற்றும் ஊக்கத்தை இந்த கதைக்கும் கொடுத்து... எப்படியாவது இந்த கதையையும் முடிக்க எனக்கு உதவுங்க மக்களே பளிச்...ஏன்னா உங்களுக்கே தெரியும் நீங்க இல்லாம... கண்டிப்பா நான் என்னுடைய முதல் இரண்டு கதைகளை வெற்றிகரமாக...சத்தியமா முடித்து இருக்கவே மாட்டேன் என்று... அதுக்காக உங்கள் அனைவர்க்கும் என்னுடைய எல்லையில்லா அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் தோழிகளே... அதே போல் எனக்கு எப்பொழுதும் பக்கபலமா இருந்து...என்னை வழிநடத்துவது மட்டுமில்லாமல்... நான் கேட்டவுடன் இந்த கதைக்கு தளம் அமைத்து கொடுத்து...நெஞ்சார வாழ்த்திய என் அன்பு மஞ்சு அக்காவுக்கு என்னுடைய கோடானகோடி நன்றிகளை இந்த சந்தோஷ தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்..."தீரா திமிரே...!!! தெவிட்டா காதலே...!!!என்னுடைய இந்த மூன்றாவது கதையை பத்தி சொல்லணும்ன்னா... திமிரும் காதலும் கலந்த ஒரு போராட்டம்... யாருடைய திமிர் அல்ல யாருடைய காதல் யாரை இந்த போராட்டத்தில் ஆக்கிரமிக்கபோகிறது என்பதே இந்த கதை...நாயகன் : அமர்நாத் சக்கரவர்த்திநாயகி : தாரா சந்திரசேகர்இனி இவர்களின் ஆட்டத்தை கதையின் ஓட்டத்தில் நாம் பார்க்கலாம்...இப்படிக்கு...இந்த கதையையாவது ஒழுங்கா சீக்கிரம் முடிக்கணும்ன்னு... தூக்கத்தில் மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருக்கும்உங்கள்வான்மதி ஹரி