அத்தியாயம் 03
“பாலா கதவை மூடிட்டு உள்ள என்னடி பண்ற...” கதவு தட்டும் ஓசையுடன் அன்னையின் குரலும் கேட்க தலையை உலுக்கிக் கொண்டவள் “என்னம்மா...” எரிச்சல் குரலில் சீறியபடி கதவை திறந்தாள்.
“எதுக்கிடி கத்துற வெளிய சொந்தக்காரங்க வந்திருக்காங்க நீ பாட்டுக்கு ரூமுக்குள்ள அடைஞ்சி இருந்தா வந்தவங்க என்ன நினைப்பாங்க... ட்ரெஸ் மாத்திட்டு வெளிய வா அடவச்ச கோழி மாதிரி ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்காம...” எரிந்து விழுந்தவர் சிறு முறைப்புடன் சென்று விட்டார்.
சட்டென கண்களில் சூழ்ந்து கொண்ட கண்ணீரை பெரும்பாடு பட்டு உள்ளிழுத்து கொண்ட பாலா முகத்தில் புன்னகையை படர விட்டுக் கொண்டாள்.
சில வேளைகளில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பவள் சிறு நேரங்களில் குழந்தையாய் மாறி விடுவாள். சட்டென உணர்ச்சிவசப்படும் குழந்தை. நொடியில் கட்டுக்குள் கொண்டு வரும் வித்தையும் கை வந்த கலை. இப்போதும் அது தான் கைகொடுத்தது.
குளியலறைக்குள் நுழைந்து முகம் கழுவி வந்தவள் அலுமாரியை திறந்து எதை உடுத்துவது என குழம்பிப் போய் நின்றாள்.
“இந்த ரெட் கலர் உனக்கு ரொம்ப மேட்சா இருக்கு...” செவியில் அவள் மனதை சலனப்படுத்தியவனின் குரல் அபஸ்வரமாய் ஒலித்தது.
காதல் என்ற உணர்வே இல்லாமல் தான் இருந்தாள். தெளிந்த நீரோடை போல். அதை குலைப்பதற்காவகே வந்தவன் போல் அவள் மனதை அம்பு விட்டு அசைத்து விட்டானே அவன். காதலில் நம்பிக்கையே இல்லாமல் இருந்தவளுக்கு தற்போது அந்த காதல் தனக்கும் வராமலே இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.
மீண்டும் அந்த நாள் நினைவு.
அவள் அண்ணன் ஆதியின் மனைவியான அதாவது அவளது அண்ணி மீராவின் வீட்டில் இருந்து விருந்திற்கு அழைத்திருக்க கலையரசியும் மார்த்தாண்டமும் உறவினர்கள் வீட்டிலிருப்பதால் வரமுடியாது போக சம்பிரதாயத்திற்காய் மகன் மருமகளுடன் பாலாவையும் அனுப்பி வைத்தனர்.
அவளுக்குமே உள்ளுக்குள் சிறு ஆசை. அவளையும் அறியாமல் அவனை பார்ப்போமா எனும் கள்ளத்தனம். தன்னை நினைத்தே ஆச்சரியமும் கூட. காரணம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாய் அவள் பின்னே ஒருத்தன் நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்க அவனை நிமிர்ந்தும் பாராதவள் இவனை எதற்காய் தேடுகிறோம் என துடிக்கும் இதயத்துடன் தனக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண்டாள்.
காதலை மதிப்பவள் தான். ஆனால் தான் என்று வரும் போது அவளுக்கு அந்த காதல் வெறும் பொய்யாய் தான் தோன்றியது. பெற்றோர்களை துறக்க செய்யும் காதல் என்ன காதலோ என்ற உள்ளூர நினைப்பு கொண்டவள்.
அதற்கு மாறாய் அவளது வயது அவளையும் அதில் தள்ள முயன்றது. அதில் விளைந்த ஈர்ப்பு அவன்பால் அவளை ஈர்த்து தொலைத்தது.
“பாலா எப்பிடிம்மா இருக்க வாங்க.. மாப்பிள்ளை வாங்க... மீரா மாப்பிள்ளையையும் பாலாவையும் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வாம்மா... சம்பந்தியும் வந்திருக்கலாம்...” மீராவின் தாயாரான மங்கை அவர்கள் மூவரையும் உபசரித்த வண்ணம் சமையல் அறைக்குள் சென்று ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமர்ந்து மூவரும் பருகினர்.
சிறிது நேரத்தில் பாலா வீட்டினுள் இருக்க முடியாமல் தோட்டத்து பக்கமாய் சென்றாள். இதுவரைக்கும் அவள் அண்ணியின் வீட்டுக்கு இரண்டொரு முறை தான் வந்திருக்கின்றாள். அதிலே மீராவின் குடும்பத்தினருக்கு பாலாவை பிடித்து போய்விட்டது. அவளுமே பாசக்காரி என்பதால் சட்டென அவர்களுடன் ஒண்டிக்கொண்டாள்.
தோட்டத்து பூச்சாடிகளில் ரோஜாக்கள் மலர்ந்து இருக்க அந்த சிகப்பு ரோஜாக்களை மென்மையாய் வருடிக் கொடுத்தாள். மென்மையான அதன் ஸ்பரிசம் அவளுக்கு அவனை நினைவு படுத்தியது.
இருந்தும் அதை மறைத்துக் கொண்டு ரோஜாக்களை பார்த்திருந்தவளின் காதில் “இந்த ரெட் கலர் உனக்கு ரொம்ப மேட்சா இருக்கு...” சிறு இடைவெளி விட்டு அவள் மேல் படாத தூரத்தில் நின்று உரைத்தவனின் குரல் அவளை அதிர செய்ய பயத்தில் துள்ளி குதித்தாள்.
நெஞ்சுத்துடிப்பு அபரிதமாய் இருக்க முகத்தினில் துளியாய் வியர்வைகள். பனி படர்ந்த ரோஜா இதழ்கள் போல். நெஞ்சத்தின் துடிப்பிற்கேற்ப அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அவளது செப்பு இதழ்களும் துடித்தது.
துடிக்கும் இதழ்கள் அவனை வா வாவென அழைப்பது போல் இருக்க அவசரமாய் விலகி நின்று கொண்டான். முதல் தடவை அவளை தொட்டது போல் மீண்டும் தொட முயற்சிக்கவில்லை. அவளின் முதல் ஸ்பரிசமே ஆயுளுக்கும் போதுமானதாய் இருந்தது ஆடவனுக்கு.
இவனின் வருகையை எதிர்பாராதவள் விழிகளை விரித்து கணநேரத்தில் அவனை தன் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டாள். ஒரு சில நொடிகள் தான்... இருந்தும் ஆழமாய் பதிந்து விட்டான்.
சடுதியில் தன் பார்வையை மாற்றிக் கொண்டவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க “மது ப்ளீஸ்..” போக விடாமல் கை நீட்டி தடுத்தான்.
“டோன்ட் கால் மீ மது...”
“சரி கூப்பிடல... பேபின்னு சொல்லட்டுமா... இல்ல ஸ்வீட்ஹார்ட்... அதுவும் இல்லன்னா ஹனி... ம்... அது தான் உனக்கு பொருத்தமாவும் இருக்கும்... இனி நான் உன்னைய ஹனி ன்னு தான் கூப்பிடுவேன்...”
“லூசுத்தனமா உளராம வழி விடுங்க... நான் போகணும்...”
“ஏய் ஹனி... நான் என்ன உன்னைய கட்டிபிடிச்சிருக்கேனா... நான் இவ்ளோ தூரம் தள்ளி தான்மா நிற்கிறேன்...” ஒரு அடி இடைவெளியை நூறு மீட்டர் இடைவெளி அளவுக்கு சொல்லியவனை பார்த்து கடையோரத்தில் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அரும் பாடுபட்டு வெளி வராமல் காத்தவள் அவனை முறைத்து வைத்தாள்.
அவளின் முறைப்பை கூட ஆசையாய் ரசித்தவன் ‘இப்பிடி முறைக்கும் நீ ஒரு நாள் என்னை காதலுடன் பார்ப்பாய் ஹனி... அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்...’ அவஸ்தையுடன் எண்ணிக் கொண்டான். காதல் கொடுத்த அவஸ்தை அது.
அதை நினைத்து பார்த்தவளின் கண்கள் குளம் கட்டியது. உடைப்பெடுக்காமல் உள்ளிழுத்து கொண்டாள். வேண்டாவெறுப்புடன் சிகப்பு நிற சுடிதாரை கையில் எடுத்தவள் அதை மென்மையாய் தடவிக் கொடுத்தாள். ஒற்றை துளி கண்ணீர் அதில் பட்டு சிதறிப்போனது. அவள் மனதில் உதித்த காதலை போன்று.
அதற்குள் கலையரசி மீண்டுமொருமுறை குரல் கொடுக்க அதற்கு மேலும் தாமதிக்காமல் அந்த ஆடையை உள்ளே வைத்தவள் கைக்கு கிட்டியதொன்றை எடுத்து அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.
வெளிர் நீல நிறத்தில் இருந்த சுடிதார் வெகு பொருத்தமாய் அவள் உடலை தழுவி இருந்தது. நீண்ட கார் கூந்தலை தூக்கி போனி டெயில் போட்டிருந்தாள். அதற்கும் அடங்க மறுத்த சில முடிகற்றைகள் அவள் கன்னத்தில் இடம்பிடித்து ஒதுங்கிக் கொண்டன அழகுக்காய். ரூஜ் தடவாமல் சிவந்து கிடந்த கன்னங்களும் விழியில் தீட்டியிருந்த மையும் அழகுக்கலை நிபுணர்களின் கைவண்ணமின்றியே மிளிரச் செய்திருக்க அழகு தேவதையாய் நடந்து வந்தாள்.
அந்தி சாயும் நேரத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியால் வந்த மஞ்சள் பூசிய சூரிய ஒளியின் கலவையில் அவள் அழகு மேலும் கூடித்தான் போயிற்று.
அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்தான் ஆர்யன். நேர் எதிரே இருவரும். யாரை பார்க்க கூடாதென மனதிற்குள் சபதமெடுத்திருந்தாளோ விதி மீண்டும் அவனை அவள் கண் முன்னே நிறுத்தி இருந்தது. சற்று நேரத்தின் முன் தன் விழிகளில் இருந்து வந்த கண்ணீருக்கு இவன் தகுதியானவன் தானா என்று அவனை பார்த்த வண்ணம் எண்ணியவளுக்கு அது இல்லை என்று தான் தோன்றியது.
ஆயிரம் பேரை காதலித்தவனுக்கு தானும் ஆயிரத்தில் ஒருத்தி தான் என்ற எண்ணமே அவளை சுக்கு நூறாய் உடைக்க மறக்க நினைத்தும் முடியாமல் உள்ளத்தில் பூத்த முதல் காதல் ஆழமான வடுவாய் மீண்டும் அவள் நெஞ்சத்தை கிழித்தது.
அந்த வடுவினால் உண்டான வலி காதலாய் பார்க்க வேண்டியவனை வெறுப்புடன் தழுவியது. தன் கண்ணீருக்கு சிறிதும் தகுதியற்றவன் என்ற அகந்தையுடன்.
அவனோ சிறிதும் சலனமில்லாமல் அவளை பார்த்து தன் ஆக்மார்க் புன்னகையை சிந்தியவன் அவளை பார்த்த வண்ணமே வரவேற்பறையில் இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.
“பாலா கதவை மூடிட்டு உள்ள என்னடி பண்ற...” கதவு தட்டும் ஓசையுடன் அன்னையின் குரலும் கேட்க தலையை உலுக்கிக் கொண்டவள் “என்னம்மா...” எரிச்சல் குரலில் சீறியபடி கதவை திறந்தாள்.
“எதுக்கிடி கத்துற வெளிய சொந்தக்காரங்க வந்திருக்காங்க நீ பாட்டுக்கு ரூமுக்குள்ள அடைஞ்சி இருந்தா வந்தவங்க என்ன நினைப்பாங்க... ட்ரெஸ் மாத்திட்டு வெளிய வா அடவச்ச கோழி மாதிரி ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்காம...” எரிந்து விழுந்தவர் சிறு முறைப்புடன் சென்று விட்டார்.
சட்டென கண்களில் சூழ்ந்து கொண்ட கண்ணீரை பெரும்பாடு பட்டு உள்ளிழுத்து கொண்ட பாலா முகத்தில் புன்னகையை படர விட்டுக் கொண்டாள்.
சில வேளைகளில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பவள் சிறு நேரங்களில் குழந்தையாய் மாறி விடுவாள். சட்டென உணர்ச்சிவசப்படும் குழந்தை. நொடியில் கட்டுக்குள் கொண்டு வரும் வித்தையும் கை வந்த கலை. இப்போதும் அது தான் கைகொடுத்தது.
குளியலறைக்குள் நுழைந்து முகம் கழுவி வந்தவள் அலுமாரியை திறந்து எதை உடுத்துவது என குழம்பிப் போய் நின்றாள்.
“இந்த ரெட் கலர் உனக்கு ரொம்ப மேட்சா இருக்கு...” செவியில் அவள் மனதை சலனப்படுத்தியவனின் குரல் அபஸ்வரமாய் ஒலித்தது.
காதல் என்ற உணர்வே இல்லாமல் தான் இருந்தாள். தெளிந்த நீரோடை போல். அதை குலைப்பதற்காவகே வந்தவன் போல் அவள் மனதை அம்பு விட்டு அசைத்து விட்டானே அவன். காதலில் நம்பிக்கையே இல்லாமல் இருந்தவளுக்கு தற்போது அந்த காதல் தனக்கும் வராமலே இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.
மீண்டும் அந்த நாள் நினைவு.
அவள் அண்ணன் ஆதியின் மனைவியான அதாவது அவளது அண்ணி மீராவின் வீட்டில் இருந்து விருந்திற்கு அழைத்திருக்க கலையரசியும் மார்த்தாண்டமும் உறவினர்கள் வீட்டிலிருப்பதால் வரமுடியாது போக சம்பிரதாயத்திற்காய் மகன் மருமகளுடன் பாலாவையும் அனுப்பி வைத்தனர்.
அவளுக்குமே உள்ளுக்குள் சிறு ஆசை. அவளையும் அறியாமல் அவனை பார்ப்போமா எனும் கள்ளத்தனம். தன்னை நினைத்தே ஆச்சரியமும் கூட. காரணம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாய் அவள் பின்னே ஒருத்தன் நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்க அவனை நிமிர்ந்தும் பாராதவள் இவனை எதற்காய் தேடுகிறோம் என துடிக்கும் இதயத்துடன் தனக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண்டாள்.
காதலை மதிப்பவள் தான். ஆனால் தான் என்று வரும் போது அவளுக்கு அந்த காதல் வெறும் பொய்யாய் தான் தோன்றியது. பெற்றோர்களை துறக்க செய்யும் காதல் என்ன காதலோ என்ற உள்ளூர நினைப்பு கொண்டவள்.
அதற்கு மாறாய் அவளது வயது அவளையும் அதில் தள்ள முயன்றது. அதில் விளைந்த ஈர்ப்பு அவன்பால் அவளை ஈர்த்து தொலைத்தது.
“பாலா எப்பிடிம்மா இருக்க வாங்க.. மாப்பிள்ளை வாங்க... மீரா மாப்பிள்ளையையும் பாலாவையும் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வாம்மா... சம்பந்தியும் வந்திருக்கலாம்...” மீராவின் தாயாரான மங்கை அவர்கள் மூவரையும் உபசரித்த வண்ணம் சமையல் அறைக்குள் சென்று ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமர்ந்து மூவரும் பருகினர்.
சிறிது நேரத்தில் பாலா வீட்டினுள் இருக்க முடியாமல் தோட்டத்து பக்கமாய் சென்றாள். இதுவரைக்கும் அவள் அண்ணியின் வீட்டுக்கு இரண்டொரு முறை தான் வந்திருக்கின்றாள். அதிலே மீராவின் குடும்பத்தினருக்கு பாலாவை பிடித்து போய்விட்டது. அவளுமே பாசக்காரி என்பதால் சட்டென அவர்களுடன் ஒண்டிக்கொண்டாள்.
தோட்டத்து பூச்சாடிகளில் ரோஜாக்கள் மலர்ந்து இருக்க அந்த சிகப்பு ரோஜாக்களை மென்மையாய் வருடிக் கொடுத்தாள். மென்மையான அதன் ஸ்பரிசம் அவளுக்கு அவனை நினைவு படுத்தியது.
இருந்தும் அதை மறைத்துக் கொண்டு ரோஜாக்களை பார்த்திருந்தவளின் காதில் “இந்த ரெட் கலர் உனக்கு ரொம்ப மேட்சா இருக்கு...” சிறு இடைவெளி விட்டு அவள் மேல் படாத தூரத்தில் நின்று உரைத்தவனின் குரல் அவளை அதிர செய்ய பயத்தில் துள்ளி குதித்தாள்.
நெஞ்சுத்துடிப்பு அபரிதமாய் இருக்க முகத்தினில் துளியாய் வியர்வைகள். பனி படர்ந்த ரோஜா இதழ்கள் போல். நெஞ்சத்தின் துடிப்பிற்கேற்ப அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அவளது செப்பு இதழ்களும் துடித்தது.
துடிக்கும் இதழ்கள் அவனை வா வாவென அழைப்பது போல் இருக்க அவசரமாய் விலகி நின்று கொண்டான். முதல் தடவை அவளை தொட்டது போல் மீண்டும் தொட முயற்சிக்கவில்லை. அவளின் முதல் ஸ்பரிசமே ஆயுளுக்கும் போதுமானதாய் இருந்தது ஆடவனுக்கு.
இவனின் வருகையை எதிர்பாராதவள் விழிகளை விரித்து கணநேரத்தில் அவனை தன் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டாள். ஒரு சில நொடிகள் தான்... இருந்தும் ஆழமாய் பதிந்து விட்டான்.
சடுதியில் தன் பார்வையை மாற்றிக் கொண்டவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க “மது ப்ளீஸ்..” போக விடாமல் கை நீட்டி தடுத்தான்.
“டோன்ட் கால் மீ மது...”
“சரி கூப்பிடல... பேபின்னு சொல்லட்டுமா... இல்ல ஸ்வீட்ஹார்ட்... அதுவும் இல்லன்னா ஹனி... ம்... அது தான் உனக்கு பொருத்தமாவும் இருக்கும்... இனி நான் உன்னைய ஹனி ன்னு தான் கூப்பிடுவேன்...”
“லூசுத்தனமா உளராம வழி விடுங்க... நான் போகணும்...”
“ஏய் ஹனி... நான் என்ன உன்னைய கட்டிபிடிச்சிருக்கேனா... நான் இவ்ளோ தூரம் தள்ளி தான்மா நிற்கிறேன்...” ஒரு அடி இடைவெளியை நூறு மீட்டர் இடைவெளி அளவுக்கு சொல்லியவனை பார்த்து கடையோரத்தில் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அரும் பாடுபட்டு வெளி வராமல் காத்தவள் அவனை முறைத்து வைத்தாள்.
அவளின் முறைப்பை கூட ஆசையாய் ரசித்தவன் ‘இப்பிடி முறைக்கும் நீ ஒரு நாள் என்னை காதலுடன் பார்ப்பாய் ஹனி... அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்...’ அவஸ்தையுடன் எண்ணிக் கொண்டான். காதல் கொடுத்த அவஸ்தை அது.
அதை நினைத்து பார்த்தவளின் கண்கள் குளம் கட்டியது. உடைப்பெடுக்காமல் உள்ளிழுத்து கொண்டாள். வேண்டாவெறுப்புடன் சிகப்பு நிற சுடிதாரை கையில் எடுத்தவள் அதை மென்மையாய் தடவிக் கொடுத்தாள். ஒற்றை துளி கண்ணீர் அதில் பட்டு சிதறிப்போனது. அவள் மனதில் உதித்த காதலை போன்று.
அதற்குள் கலையரசி மீண்டுமொருமுறை குரல் கொடுக்க அதற்கு மேலும் தாமதிக்காமல் அந்த ஆடையை உள்ளே வைத்தவள் கைக்கு கிட்டியதொன்றை எடுத்து அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.
வெளிர் நீல நிறத்தில் இருந்த சுடிதார் வெகு பொருத்தமாய் அவள் உடலை தழுவி இருந்தது. நீண்ட கார் கூந்தலை தூக்கி போனி டெயில் போட்டிருந்தாள். அதற்கும் அடங்க மறுத்த சில முடிகற்றைகள் அவள் கன்னத்தில் இடம்பிடித்து ஒதுங்கிக் கொண்டன அழகுக்காய். ரூஜ் தடவாமல் சிவந்து கிடந்த கன்னங்களும் விழியில் தீட்டியிருந்த மையும் அழகுக்கலை நிபுணர்களின் கைவண்ணமின்றியே மிளிரச் செய்திருக்க அழகு தேவதையாய் நடந்து வந்தாள்.
அந்தி சாயும் நேரத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியால் வந்த மஞ்சள் பூசிய சூரிய ஒளியின் கலவையில் அவள் அழகு மேலும் கூடித்தான் போயிற்று.
அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்தான் ஆர்யன். நேர் எதிரே இருவரும். யாரை பார்க்க கூடாதென மனதிற்குள் சபதமெடுத்திருந்தாளோ விதி மீண்டும் அவனை அவள் கண் முன்னே நிறுத்தி இருந்தது. சற்று நேரத்தின் முன் தன் விழிகளில் இருந்து வந்த கண்ணீருக்கு இவன் தகுதியானவன் தானா என்று அவனை பார்த்த வண்ணம் எண்ணியவளுக்கு அது இல்லை என்று தான் தோன்றியது.
ஆயிரம் பேரை காதலித்தவனுக்கு தானும் ஆயிரத்தில் ஒருத்தி தான் என்ற எண்ணமே அவளை சுக்கு நூறாய் உடைக்க மறக்க நினைத்தும் முடியாமல் உள்ளத்தில் பூத்த முதல் காதல் ஆழமான வடுவாய் மீண்டும் அவள் நெஞ்சத்தை கிழித்தது.
அந்த வடுவினால் உண்டான வலி காதலாய் பார்க்க வேண்டியவனை வெறுப்புடன் தழுவியது. தன் கண்ணீருக்கு சிறிதும் தகுதியற்றவன் என்ற அகந்தையுடன்.
அவனோ சிறிதும் சலனமில்லாமல் அவளை பார்த்து தன் ஆக்மார்க் புன்னகையை சிந்தியவன் அவளை பார்த்த வண்ணமே வரவேற்பறையில் இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.