arumai Banuma super comment...இவன் பார்த்த மாமா வேலையை இத்தனை காலம் கழித்தும் உதயேந்திரனிடம் சொல்ல ராஜசேகருக்கு தயக்கம்ன்னா அவன் எவ்வளவு கேவலமான வேலையைப் பார்த்திருக்கணும்?
தான் ஏற்கனவே கல்யாணமானவன் ஒரு குழந்தைக்கு அப்பான்னு தெரிஞ்சு சந்திரசேகரே சும்மா இருந்திருக்கும் பொழுது தான் முன்னேறணும் பணம் வசதி வேணும்ன்னு எவ்வளவு சுயநலமா யோசிச்சு சிவனேன்னு இருந்த சந்திரசேகருக்கு ஜெய்சக்தியை கல்யாணம் செஞ்சு வைச்சிருக்கான் இந்த ராஜசேகர் கேடிப்பயல்
இவனுக்கு உதய் எவ்வளவோ பரவாயில்லையே
பல்லு துருத்திக்கிட்டு இருக்கு
உடம்பு ஒல்லியா இருக்குங்கிறதெல்லாம் புனிதாவைக் கல்யாணம் செய்யச் சொல்லி பெற்றவள் கேட்கும் பொழுது சந்திரசேகருக்கு கண்ணு தெரியலையோ
நான் ஆணழகன் எனக்கு ஏற்ற அழகு சுந்தரியைத்தான் நான் கல்யாணம் செய்வேன்னு அம்மாவிடம் சொல்ல வேண்டியதுதானே
அப்போ வாயிலே கொழுக்கட்டையா இருந்தது?
அவளுக்கு ஏற்ற ஏதாவது ஒரு நெட்டையோ குட்டையோ புனிதா கல்யாணம் பண்ணியிருப்பாளே
பெற்றவள் நிம்மதியா சாகணும்ன்னு விருப்பமில்லாமல் கல்யாணம் செஞ்சு புனிதமான புனிதாவை உயிரோடு சாகடிச்சாச்சு
இன்று இருப்பார் நாளை இல்லைங்கிற நிதர்சனமான உண்மை கூட தெரியாமல் அழியப் போகும் அழகை நினைத்து வாழ்க்கையை கோட்டை விட்டுட்டான் செஞ்ச தப்பை நினைத்து நினைத்து நிம்மதி இல்லாமல் மத்திய வயதில் சந்துரு உயிரை விட்டுட்டான்
பாவத்தின் சம்பளம் மரணம்ங்கிறது சரியாய்த்தான் இருக்கு
சந்துருவைத் தூண்டி விட்ட ராஜசேகர் இனி என்ன கதியாகப் போறானோ?
ஜெய்சக்தி சந்துரு கல்யாணம் எப்படி ஆச்சுன்னு சொச்சத்தையும் சொல்லி இந்த பார்பர் ஷாப் குப்பையை சீக்கிரமா முடிங்க, விஜி டியர்
சந்துருவே புனிதாவை கேவலமா நினைக்கும் பொழுது இந்த கிழட்டு நாய் பரமேஸ்வரன் அந்த பெண்ணை என்னவெல்லாம் சொல்லி வறுத்து எடுத்தானோ?
Thank you so much, பிரியாபிரவீன்குமார் டியர்arumai Banuma super comment...