Sinthiya Muththangal 37

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இவன் பார்த்த மாமா வேலையை இத்தனை காலம் கழித்தும் உதயேந்திரனிடம் சொல்ல ராஜசேகருக்கு தயக்கம்ன்னா அவன் எவ்வளவு கேவலமான வேலையைப் பார்த்திருக்கணும்?
தான் ஏற்கனவே கல்யாணமானவன் ஒரு குழந்தைக்கு அப்பான்னு தெரிஞ்சு சந்திரசேகரே சும்மா இருந்திருக்கும் பொழுது தான் முன்னேறணும் பணம் வசதி வேணும்ன்னு எவ்வளவு சுயநலமா யோசிச்சு சிவனேன்னு இருந்த சந்திரசேகருக்கு ஜெய்சக்தியை கல்யாணம் செஞ்சு வைச்சிருக்கான் இந்த ராஜசேகர் கேடிப்பயல்
இவனுக்கு உதய் எவ்வளவோ பரவாயில்லையே
பல்லு துருத்திக்கிட்டு இருக்கு
உடம்பு ஒல்லியா இருக்குங்கிறதெல்லாம் புனிதாவைக் கல்யாணம் செய்யச் சொல்லி பெற்றவள் கேட்கும் பொழுது சந்திரசேகருக்கு கண்ணு தெரியலையோ
நான் ஆணழகன் எனக்கு ஏற்ற அழகு சுந்தரியைத்தான் நான் கல்யாணம் செய்வேன்னு அம்மாவிடம் சொல்ல வேண்டியதுதானே
அப்போ வாயிலே கொழுக்கட்டையா இருந்தது?
அவளுக்கு ஏற்ற ஏதாவது ஒரு நெட்டையோ குட்டையோ புனிதா கல்யாணம் பண்ணியிருப்பாளே
பெற்றவள் நிம்மதியா சாகணும்ன்னு விருப்பமில்லாமல் கல்யாணம் செஞ்சு புனிதமான புனிதாவை உயிரோடு சாகடிச்சாச்சு
இன்று இருப்பார் நாளை இல்லைங்கிற நிதர்சனமான உண்மை கூட தெரியாமல் அழியப் போகும் அழகை நினைத்து வாழ்க்கையை கோட்டை விட்டுட்டான் செஞ்ச தப்பை நினைத்து நினைத்து நிம்மதி இல்லாமல் மத்திய வயதில் சந்துரு உயிரை விட்டுட்டான்
பாவத்தின் சம்பளம் மரணம்ங்கிறது சரியாய்த்தான் இருக்கு
சந்துருவைத் தூண்டி விட்ட ராஜசேகர் இனி என்ன கதியாகப் போறானோ?
ஜெய்சக்தி சந்துரு கல்யாணம் எப்படி ஆச்சுன்னு சொச்சத்தையும் சொல்லி இந்த பார்பர் ஷாப் குப்பையை சீக்கிரமா முடிங்க, விஜி டியர்
சந்துருவே புனிதாவை கேவலமா நினைக்கும் பொழுது இந்த கிழட்டு நாய் பரமேஸ்வரன் அந்த பெண்ணை என்னவெல்லாம் சொல்லி வறுத்து எடுத்தானோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அப்ப இங்கே பெரிய குற்றவாளி ராஜசேகர் தான்....... கல்யாணமாகியும் கூட பிரண்டுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணி கல்யாணம் பண்ணிவச்சிருக்கிறார்......

அப்பா அம்மா செய்யற தப்பு பிள்ளைகளுக்கு தான் சொல்லுவாங்க......
எந்த பாவமும் அறியாத பிள்ளைகளுக்கு எதுக்கு அந்த தண்டனை...... அது ராஜசேகருக்கு தான் கிடைக்கணும்......

உதய் செஞ்சது தப்புதான்..... ஆனா அந்த நாட்டுல அதெல்லாம் ஒரு சகஜமான விஷயம்.....
ஆனா நீங்க கல்யாணம் ஆகி குழந்தை இருக்குதுனு சம்பந்தப்பட்ட நபரே சொன்ன பிறகு கூட உங்களுடைய சுயநலத்துக்காக 3 பெண்களோட life ல Vவிளையாடி இருக்கீங்க.......

உங்க பொண்ணு பத்தி சொன்னது மட்டும் அப்பா முகம் என்னமா போகுது......
அடுத்த வீட்டு பொண்ணுனா என்ன வேணா பண்ணலாமா???

அம்மா அப்பாக்கள் அவங்களோட சந்தோசம் பெருமைக்காக சில நேரம் பிள்ளைங்க வாழ்க்கையில் விளையாடிடுறாங்க...... Illegal relation ல் பெரும் பங்கு அவங்களுக்கு தான்......
இவங்க கட்டி வைக்கும் பொண்ணு வாழ வருவாளா இல்லை இவங்க பையனை திருத்த வர்றாளா தெரியல......
So sad.....

ஜெய்சக்தியை எப்படி கல்யாணம் பண்ணி வெச்சாங்க..... மிச்ச பார்ட்டுக்கு வெயிட்டிங்...... சீக்கிரமா கொடுத்துடுங்க......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top