Ramadan 2021- Day 9 prophet Eesa

Advertisement

fathima.ar

Well-Known Member
யஹோஷுவா என்பதே ஈஸா என்பதன் மூலம் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் யஹோவா(கடவுள்) காப்பாற்றுகிறார் என்பதாகும். இது வெள்ளை என்று பொருள்படும் ஈஸ் என்னும் அரபிச் சொல்லிலிருந்து தோன்றியது என்று சொல்கின்றனர்.

ஈஸா மஸீஹ் எனும் பெயர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. கிரேக்கமொழியில் ‘ஜீஜஸ் கிறைஸ்ட்‘என்று ஆகி தமிழில் ஏசு கிறிஸ்து என்று மருவியுள்ளது.

மஸஹ் என்றால் தடவுதல் என்று பொருள்படும். இவர்கள் நோயாளிகளைத் தம் கைகளால் தடவி அவர்களின் நோயை நீக்கியதால் மஸீஹ் என்னும் பட்டம் ஏற்பட்டதென்றும் சொல்லுவார்கள். அதுவே கிரேக்க மொழியில் கிரைஸ்ட் ஆகியிருக்கிறது.

ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வயது 20இருக்கும்போது தங்களது சிற்றன்னை நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி ஈஷாஉ அவர்கள் வீட்டிற்குச் சென்று ஒரு மறைவான இடத்திற்குச் சென்று குளிப்பதற்காக உடைகளை மாற்றி உடுத்திக் கொண்டிருக்கும்போது நடைபெற்ற சம்பவத்தை பற்றி அல்லாஹ் தனது திருமையில் கூறுகிறான்.

இவ்வேதத்தில் (ஈஸா நபியின் தாயாராகிய) மர்யமைப் பற்றியும் கூறும். அவர் தம் குடும்பத்தினரை விட்டு விலகி,கிழக்குத் திசையிலுள்ள (தம்) அறைக்குச் சென்று, (குளிப்பதற்காகத்) தம் ஜனங்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில், (ஜிப்ரயீல் என்னும்) தம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் சரியான ஒரு மனிதருடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.(மர்யம் அவரைக் கண்டதும்) ‘நிச்சயமாக நான், உம்மிடமிருந்து என்னை இரட்சித்துக் கொள்ளுமாறு ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் நன்னடத்தையுடையவராக இருந்தால்… (இங்கிருந்து அப்புறப்பட்டுவிடும்)’ என்றார்.
அதற்கவர், ‘பரிசுத்தமான ஒரு மகனை உமக்களிக்கப்படும் என்பதை உமக்கு அறிவிப்பதற்காக நான் உம் இறைவனால் அனுப்பப் பெற்ற (மலக்காகிய) ஒரு தூதன்தான் என்றார்.

அறத்கவர் ‘எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே’ என்று கூறினார். அதற்கவர், ‘அவ்வாறே (நடைபெறும்) அது எனக்கு எளிது. அவரை மனிதர்களுக்கு ஒரு திருஷ்டாந்தமாகவும்,நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம். இது முடிவாகக் நிச்சயம் செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயம்’ என்றுஉமதிறைவன் கூறுகிறான்’ என்றார்.

மேலும் குர்ஆனில்

‘(மேலும் மர்யமை நோக்கி) மலக்குகள் (ஆகுக! என்ற) ஒரு சொல்லைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாரயங் கூறுகின்றான். அதன் பெயர், ‘மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ்’ என்பதாகும். இவர் இம்மை-மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்’ என்று கூறினார்.
அன்றி, ‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்போது (தம் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி)யும், (தம் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கம் உள்ளவராகவுமிருப்பார்'(என்றும் கூறினார்கள்)

(அதற்கு மர்யம் தம் இறைவனை நோக்கி) ‘என் இறைவனே! எந்த ஒரு மனிதரும் என்னைத் தீண்டாதிருக்கும்போது,எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்’ என்று கூறினார். (அதற்கு)
‘இவ்வாறே,அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால்,அதனை ‘ஆகுக’ என அவன் கூறுவதுதான் (தாமதம்) உடனே அது ஆகிவிடும்’ என்று கூறினான்.’

அதன்பின் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சட்டையில் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஊதினார்கள். உடனே கர்ப்பம் உண்டாயிற்று. இவ்வாறு அவர் இறைவனுடைய ஆவியை ஊதி இவர்கள் பிறந்ததினால் ரூஹுல்லாஹ்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டனர். சில காலத்திற்குப் பின் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடம்பில் மாறுதல் உண்டானது. கர்ப்பிணிக்குரிய அடையாளங்கள் தென்பட்டன. இதனைக் கண்ட ஜகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெரும் கவலை கொண்டார்கள். இதனை தமது மனைவியிடம் மெதுவாக சொன்னார்கள்.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு ஜகரிய்யா நபி அவர்களின் மனைவியார்,”நல்ல செய்தியைச் சொன்னீர்கள். இதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும்?”என்ற கேட்டார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் எவ்வளவு பெரிய அவமானச் செய்தியை உன்னிடம் கூறுகிறேன். நீ அதிர்ச்சியடைவாய் என்று பார்த்தேன். ஆனால் நீ ஆனந்தப்படுகிறாயே! என்று கூறினார்கள்.
உடனே ஈசாஉ அவர்கள், ‘தகப்பன் இல்லாமல் ஒரு நபி பிறப்பார். அவர் மக்களுக்கு நேர்வழி காட்டுவதோடு,அவர்களின் பிணிகளையும் நீக்குவார். மரித்தவர்களை உயிர்ப்பிப்பார். அவரால் மற்றும் பல அற்புதங்களும் நிகழும் என்று நீங்கள் தவ்ராத் வேதத்தில் படித்ததில்லையா? என்றும், அந்த நபியின் கரு இதுவாகத்தான் இருக்கும் என்றும் என் மனசாட்சி கூறுகிறது. எனவே மர்யமை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைத்து வரப்பட்டதும்,நீ ரொம்ப அதிர்ஷ்டசாலிதான். உன் வயிற்றில் உள்ள குழந்தை பிறந்து பல்வேறு அற்புதங்களை செய்யப் போகிறது என்று சொன்னார்கள்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களோ இது உண்மைதானா? என்று கேட்டார்கள். ஆம் அவற்றையெல்லாம் நான் தவ்ராத்தில் படித்துள்ளேன் என்று சொன்னார்கள். இந்த குழந்தை அந்த நபிதான் என்று எப்படி நம்புவது? அதற்கு ஆதாரம் என்ன? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உனது வயிற்றிலிருக்கும் குழந்தை அந்த நபியேதான். இதற்குரிய இப்பொழுதைய ஆதாரம் என்னவென்றால்,நான் உன்னைச் சந்தித்ததுமே எனது வயிற்றிலிருக்கும் குழந்தை உனது வயிற்றிலிருக்கும் குழந்தைக்குத் தலை தாழ்த்துவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது’ என்றார் ஈஷாஉ. அச்சமயத்தில் நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈசாஉ அவர்களின் கர்ப்பத்தில் இருந்தார்கள்.
அதேசமயம் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், ‘அச்சமயத்தில் எனது கருவிலிருக்கும் குழந்தையும் அசைவதை நான் உணர்ந்தேன்;’ என்றார்கள்.
 

fathima.ar

Well-Known Member
Purely magical kidல..
கருவானதே இறைவன் அருளால்..
இப்படி ஒரு கர்ப்பம் நபிமாகிய ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் அவர்களே ஒரு நிமிஷம் தடுமாறுறாங்க.. ஆனால் ஈஷாஉ ஸ்ட்ராங் லேடி தான்.. தவ்ராத் வேதத்தை தெளிவாக புரிந்து சரியா கணவரையும் வழி நடத்துறாங்க..
ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம் சரி..
பனி இஸ்ரவேலர்கள் எப்படி எடுத்துப்பாங்க???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top