புகுந்த வீட்டிற்கு முதன் முதலாய் அடியெடுத்து வைக்கிறாள். முற்றிலும் அந்நியர்கள்; இஃது எல்லாப் பெண்களும் சந்திக்க வேண்டிய ஒன்றுதான் என்றாலும் அவர்களுக்கு இருக்கின்ற பிடிப்பொன்று விழிக்கு இல்லை. அஃது அவளைக் கொண்டவனின் நேசம், திருமணநாளன்று யாருமறியாத ஓர பார்வையும், ஒரு விரல் தீண்டலும் மனதால் நான் இருக்கிறேன் எனக் கணவன் தரும் நம்பிக்கையும் அவளுக்கு இல்லை. அதற்குக் கதிரவன் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டான்தான் என்றாலும் விழியின் இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் அதற்கான ஏக்கம் இருக்கவே செய்தது. அதை மறுப்பதற்கு இல்லை. அதை நினைக்கின்ற போது, அவளின் இயல்பையும் மீறி இலேசாகக் கண்ணைக் கரிப்பத்தைப் போல இருந்தது.
பெற்றவர்களின் ஆதரவும் இல்ல, கணவனின் அரவணைப்பும் இல்லை. இஃது எதுவுமே இல்லாமல் போனதற்குக் காரணம் விழி மட்டுமே. ஆனாலும் விழி சோர்ந்துவிடவில்லை. சற்று முன் கோவில் மணடபத்தில் கூறிய தன்னுடைய உயிராக நினைக்கும் தந்தையின் வார்த்தைகளை மீண்டும் மனதிற்குள் நினைவுபடுத்திக்கொண்டாள்.
கந்தசாமி கூறிய அந்த வார்த்தைகள்,
"இதோ பாரு... எந்தப் பிரச்சனைனாலும் துணிஞ்சு நில்லு, எதித்து நில்லு, போராடு, வெற்றியோ தோல்வியோ சமாளி. ஆனா அழமட்டும் செய்யாத. நீ அழுதனா உன்னோட அப்பாவோட வளர்ப்பு தோத்துப்போய்டும். சொல்லு அததான் நீ விரும்புரியா ?"
சோர்ந்திருந்த மனம் இனி ஒருபோதும் சோர்ந்துவிடவே கூடாது என்ற தெளிவு பிறந்தது அவளுள். "இல்ல அழமாட்டேன். முடுஞ்சத யோசிக்கவும் மாட்டேன். போராடி என்னோட காதல்லயும் ஜெயிப்பேன். வாழ்க்கையிலையும் ஜெயிப்பேன்" எனச் சொல்லிக்கொண்டாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
வேலைக்கார கிழவிக்கிட சொல்லி நீ வீட்டுல கால எடுத்து வைக்கும் போது கரட்டு பொட்டிய அமத்த சொல்லிட்டேன்.
எம்மவ வலது கால வைக்கும் போது மறுபடியும் போட்டுவிடச் சொல்லிட்டேன். இதுல பொழச்சு போ . அடுத்த நிமிஷமே உன்ன ராசிகெட்டவளா மாத்தி காட்டுறேன் டி" எனத் தனக்குள் சூழுரைத்துக்கொண்டார் பாரிஜாதம்.
----------------------------------------------------------------------------------------------------------------------
பெற்றவர்களின் ஆதரவும் இல்ல, கணவனின் அரவணைப்பும் இல்லை. இஃது எதுவுமே இல்லாமல் போனதற்குக் காரணம் விழி மட்டுமே. ஆனாலும் விழி சோர்ந்துவிடவில்லை. சற்று முன் கோவில் மணடபத்தில் கூறிய தன்னுடைய உயிராக நினைக்கும் தந்தையின் வார்த்தைகளை மீண்டும் மனதிற்குள் நினைவுபடுத்திக்கொண்டாள்.
கந்தசாமி கூறிய அந்த வார்த்தைகள்,
"இதோ பாரு... எந்தப் பிரச்சனைனாலும் துணிஞ்சு நில்லு, எதித்து நில்லு, போராடு, வெற்றியோ தோல்வியோ சமாளி. ஆனா அழமட்டும் செய்யாத. நீ அழுதனா உன்னோட அப்பாவோட வளர்ப்பு தோத்துப்போய்டும். சொல்லு அததான் நீ விரும்புரியா ?"
சோர்ந்திருந்த மனம் இனி ஒருபோதும் சோர்ந்துவிடவே கூடாது என்ற தெளிவு பிறந்தது அவளுள். "இல்ல அழமாட்டேன். முடுஞ்சத யோசிக்கவும் மாட்டேன். போராடி என்னோட காதல்லயும் ஜெயிப்பேன். வாழ்க்கையிலையும் ஜெயிப்பேன்" எனச் சொல்லிக்கொண்டாள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
வேலைக்கார கிழவிக்கிட சொல்லி நீ வீட்டுல கால எடுத்து வைக்கும் போது கரட்டு பொட்டிய அமத்த சொல்லிட்டேன்.
எம்மவ வலது கால வைக்கும் போது மறுபடியும் போட்டுவிடச் சொல்லிட்டேன். இதுல பொழச்சு போ . அடுத்த நிமிஷமே உன்ன ராசிகெட்டவளா மாத்தி காட்டுறேன் டி" எனத் தனக்குள் சூழுரைத்துக்கொண்டார் பாரிஜாதம்.
----------------------------------------------------------------------------------------------------------------------