mithravaruna
Well-Known Member
இனிய புத்தாண்டு இன்பங்களை
இனிதாய் இசைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சித்திரமாய் சிரிக்கும்
சித்திரைப் பெண்ணும்
சிங்காரமாய் வந்து விட்டால்…?
வைரங்களாய் வரிக்கும்
வைகாசி நாதனும்
வைபவமாய் வந்து விட்டால்…?
ஆனந்தமாய் விரிக்கும்
ஆனி திருமஞ்சனமும்
ஆரவாரமாய் வந்து விட்டால்…?
ஆரூடமாய் கரிக்கும்
ஆடி மாதமும்
ஆர்ப்பாட்டமாய் வந்து விட்டால்…?
ஆச்சர்யமாய் உரிக்கும்
ஆவணி அவிட்டமும்
ஆரோகணமாய் வந்து விட்டால்…?
புருசோத்தமனை வரிக்கும்
புரட்டாசி திங்களும்
புண்ணியமாய் வந்து விட்டால்…?
ஐஸ்வர்யமாய் தரிக்கும்
ஐப்பசி ஜணனமும்
ஐய்க்கியமாய் வந்து விட்டால்…?
காந்தர்வமாய் சரிக்கும்
கார்த்திகை தீபமும்
காருண்யமாய் வந்து விட்டால்…?
மானசீகமாய் அரிக்கும்
மார்கழி பாவையும்
மகத்துவமாய் வந்து விட்டால்…?
தைபொங்கலாய் பூரிக்கும்
தை மகளும்
தைரியமாய் வந்து விட்டால்…?
மாமாங்கமாய் நெரிக்கும்
மாசி மகமும்
மங்களமாய் வந்து விட்டால்…?
பங்காளியாய் சிரிக்கும்
பங்குனி மஹோற்சவமும்
பரவசமாய் வந்து விட்டால்…?
புத்தாண்டே ……!
உன் வரவு வசந்தமாய்
உலகுக்கு உற்சவமாய்
ஊர் போற்றும் திரு நாளாய்
உன்னதமாய் மலரட்டும்!
உல்லாசம் திரும்பட்டும்!
வாழிய புத்தாண்டே! வாழ்க! வாழ்க!
இனிய புத்தாண்டு இன்பங்களை
இனிதாய் இசைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி சிவானந்தம்.
அன்புடன்,
செல்வி சிவானந்தம்.
இனிதாய் இசைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சித்திரமாய் சிரிக்கும்
சித்திரைப் பெண்ணும்
சிங்காரமாய் வந்து விட்டால்…?
வைரங்களாய் வரிக்கும்
வைகாசி நாதனும்
வைபவமாய் வந்து விட்டால்…?
ஆனந்தமாய் விரிக்கும்
ஆனி திருமஞ்சனமும்
ஆரவாரமாய் வந்து விட்டால்…?
ஆரூடமாய் கரிக்கும்
ஆடி மாதமும்
ஆர்ப்பாட்டமாய் வந்து விட்டால்…?
ஆச்சர்யமாய் உரிக்கும்
ஆவணி அவிட்டமும்
ஆரோகணமாய் வந்து விட்டால்…?
புருசோத்தமனை வரிக்கும்
புரட்டாசி திங்களும்
புண்ணியமாய் வந்து விட்டால்…?
ஐஸ்வர்யமாய் தரிக்கும்
ஐப்பசி ஜணனமும்
ஐய்க்கியமாய் வந்து விட்டால்…?
காந்தர்வமாய் சரிக்கும்
கார்த்திகை தீபமும்
காருண்யமாய் வந்து விட்டால்…?
மானசீகமாய் அரிக்கும்
மார்கழி பாவையும்
மகத்துவமாய் வந்து விட்டால்…?
தைபொங்கலாய் பூரிக்கும்
தை மகளும்
தைரியமாய் வந்து விட்டால்…?
மாமாங்கமாய் நெரிக்கும்
மாசி மகமும்
மங்களமாய் வந்து விட்டால்…?
பங்காளியாய் சிரிக்கும்
பங்குனி மஹோற்சவமும்
பரவசமாய் வந்து விட்டால்…?
புத்தாண்டே ……!
உன் வரவு வசந்தமாய்
உலகுக்கு உற்சவமாய்
ஊர் போற்றும் திரு நாளாய்
உன்னதமாய் மலரட்டும்!
உல்லாசம் திரும்பட்டும்!
வாழிய புத்தாண்டே! வாழ்க! வாழ்க!
இனிய புத்தாண்டு இன்பங்களை
இனிதாய் இசைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி சிவானந்தம்.
அன்புடன்,
செல்வி சிவானந்தம்.