அகல்யா குழந்தை உண்டாகி இருப்பதால்... இந்த நேரம் பிரயாணம் செய்ய வேண்டாம் என குழந்தைக்கு பெயர் வைத்த அன்று வந்ததோடு சரி. அதன்பிறகு அண்ணியும் நாத்தனாரும் இன்றுதான் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் இருவருக்கும் பேச நிறைய இருக்க.... இருவரும் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அமுதா வந்து “உன் பையன் அமைதியா இருக்கும் போதே நீ வந்து சாப்பிடு.” என அழைக்கும் வரை இருவரும் பேச்சை நிறுத்தவில்லை.
“உனக்கும் பசிக்கும் நீயும் வந்து சாப்பிடு.” என வெண்ணிலா அகல்யாவையும் அழைத்துக் கொண்டு உணவு உண்ண செல்ல, அங்கே ஏற்கனவே ஜெய்யும் புகழும் உணவு உண்டு கொண்டிருந்தனர்.
“அப்படி என்ன பேசுவீங்க?” என ஜெய்யும்,
“இன்னைக்கே எல்லாம் பேசனும்ன்னு இல்லை. நாளைக்கும் பேசலாம்.” என புகழும் சொல்ல, வெண்ணிலாவும் அகல்யாவும் புன்னகையுடன் அவர்களுடன் சேர்ந்து உண்டனர்.
*************************************************************************************
“அவன் என் கூடவே தூங்கட்டும் அண்ணி.”
“ராத்திரியில அழுதா பால் நீயா கொடுப்ப, ஒழுங்கா பிள்ளையை அவகிட்ட கொடு.” என காமாக்ஷி சொல்ல, ஓ இது வேற இருக்கா என அசடு வழிந்தபடி ராதிகா அர்ஜுனைக் கொடுத்தாள்.
அமுதா மருமகள் பேரனை உட்கார வைத்து டிஷ்ட்டி எடுத்து விட்டே அறைக்கு அனுப்பினார்.
வெண்ணிலா உடைமாற்றிவிட்டு வரும் வரை ஜெய் மகனை வைத்திருந்தான். வெண்ணிலா வந்து பசியாற்ற, அர்ஜுன் பால் குடித்தபடி உறங்கி விட்டான்.
அடப்பாவி அங்க எங்க வீட்ல ராத்திரி எல்லாம் தூங்க மாட்டான். இங்கப் பாரு உடனே துங்கிட்டான் என வெண்ணிலா ஆச்சர்யப்பட...
“கொஞ்சம் ஆட்டமா அவனும் போட்டான். அதோட இன்னைக்கு தான ஊர்ல இருந்து வந்திருக்கீங்க, அவனுக்கும் அலுப்பா இருக்கோ என்னவோ.” என ஜெய் சொன்னதற்கு, வெண்ணிலாவும் இருக்கும் என்றாள்.
சிறிது நேரம் தோளில் போட்டு தட்டியவள், ஏற்கனவே தயாராக இருந்த தொட்டிலில் மகனை படுக்க வைத்து விட்டு வந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“ஆமாம் இப்ப எதுக்கு திடிர்ன்னு கார் வாங்கினீங்க? பொய் சொல்லாம சொல்லுங்க, உங்க பையனுக்கு தானே வாங்கினீங்க.”
“என் பையன் என்னை மாதிரி அவனுக்கு கார் எல்லாம் தேவை இல்லை. நீதான் நோஞ்சானா இருக்க... இந்நேரம் பஸ்ல வந்திருந்தா பத்துதரம் வாந்தி எடுத்திருப்ப... உனக்காகத்தான் வாங்கினேன்.”
கணவனின் பதிலில் திருப்தி உற்றவள், அவனை இன்னும் ஒன்ற, ஜெய்யும் மனைவியை அனைத்துக் கொண்டான்.
******************************************************************************************
ஏற்கனவே கணவன் தான் தன் தங்கைகளை அங்கே கொடுக்க மாட்டான் என சொல்லி இருந்தானே... அதனால் சுரத்தே இல்லாமல் பேசினாள்.
அன்று இரவு உணவு வேளையின் போது, “ராதிகாவை அண்ணனுக்கு கேட்கிறாங்க.” என வெண்ணிலா பொதுவாக சொல்லிவிட.... இது என்னடா வம்பு என்பது போல இரண்டு மாமன்களும் பார்க்க, ஜெய் மட்டும் முறைத்தான்.
“நீ என்ன சொல்ற சந்திரா?” என ஜெயராமன் தம்பியைப் பார்க்க, அவர் காமாட்சியை பார்த்தார்.
“ஜெய் சொன்னா சரியா இருக்கும். நீ என்ன ஜெய் சொல்ற?” என்றதும்,
“என்னை ஏன் கேட்கிறீங்க? உங்க இஷ்டம்.” என்றான் ஜெய்.
“இது என்ன டா பதில்?” என ஜெயராமன் மகனைப் பார்க்க,
“உங்களுக்கு எல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தியே வராதா பா... அத்தையை கட்டி கொடுத்திட்டு பட்டது எல்லாம் மறந்து போச்சா... இன்னைக்கு இன்னொரு பெண்ணையும் தரேன்னு சொல்றீங்க.”
“இது நீ அங்க இருந்து பெண் எடுக்கும் போது தெரியலையா? அவங்க பெண்ணையே எடுத்திட்டு.. இப்ப பொண்ணு மட்டும் கொடுக்க முடியாதுன்னு சொல்ல முடியாது.”
“என்னவோ பண்ணுங்க என்னை ஏன் கேட்கிறீங்க?”
“அண்ணனுக்கு இஷ்டம் இல்லைனா எனக்கு வேற இடமே பாருங்க.” என ராதிகா சொல்ல,
“இங்கப் பாரு உனக்கு இஷ்டமா கல்யாணம் பண்ணிட்டு போ... அப்புறம் உனக்கு வந்த நல்ல இடத்தை நான் கெடுத்துட்டேன்னு நீயே ஒரு நாள் சொல்லுவ.,” என ஜெய் ராதிகாவிடமும் எரிந்து விழுந்தான்.
அமுதா வந்து “உன் பையன் அமைதியா இருக்கும் போதே நீ வந்து சாப்பிடு.” என அழைக்கும் வரை இருவரும் பேச்சை நிறுத்தவில்லை.
“உனக்கும் பசிக்கும் நீயும் வந்து சாப்பிடு.” என வெண்ணிலா அகல்யாவையும் அழைத்துக் கொண்டு உணவு உண்ண செல்ல, அங்கே ஏற்கனவே ஜெய்யும் புகழும் உணவு உண்டு கொண்டிருந்தனர்.
“அப்படி என்ன பேசுவீங்க?” என ஜெய்யும்,
“இன்னைக்கே எல்லாம் பேசனும்ன்னு இல்லை. நாளைக்கும் பேசலாம்.” என புகழும் சொல்ல, வெண்ணிலாவும் அகல்யாவும் புன்னகையுடன் அவர்களுடன் சேர்ந்து உண்டனர்.
*************************************************************************************
“அவன் என் கூடவே தூங்கட்டும் அண்ணி.”
“ராத்திரியில அழுதா பால் நீயா கொடுப்ப, ஒழுங்கா பிள்ளையை அவகிட்ட கொடு.” என காமாக்ஷி சொல்ல, ஓ இது வேற இருக்கா என அசடு வழிந்தபடி ராதிகா அர்ஜுனைக் கொடுத்தாள்.
அமுதா மருமகள் பேரனை உட்கார வைத்து டிஷ்ட்டி எடுத்து விட்டே அறைக்கு அனுப்பினார்.
வெண்ணிலா உடைமாற்றிவிட்டு வரும் வரை ஜெய் மகனை வைத்திருந்தான். வெண்ணிலா வந்து பசியாற்ற, அர்ஜுன் பால் குடித்தபடி உறங்கி விட்டான்.
அடப்பாவி அங்க எங்க வீட்ல ராத்திரி எல்லாம் தூங்க மாட்டான். இங்கப் பாரு உடனே துங்கிட்டான் என வெண்ணிலா ஆச்சர்யப்பட...
“கொஞ்சம் ஆட்டமா அவனும் போட்டான். அதோட இன்னைக்கு தான ஊர்ல இருந்து வந்திருக்கீங்க, அவனுக்கும் அலுப்பா இருக்கோ என்னவோ.” என ஜெய் சொன்னதற்கு, வெண்ணிலாவும் இருக்கும் என்றாள்.
சிறிது நேரம் தோளில் போட்டு தட்டியவள், ஏற்கனவே தயாராக இருந்த தொட்டிலில் மகனை படுக்க வைத்து விட்டு வந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“ஆமாம் இப்ப எதுக்கு திடிர்ன்னு கார் வாங்கினீங்க? பொய் சொல்லாம சொல்லுங்க, உங்க பையனுக்கு தானே வாங்கினீங்க.”
“என் பையன் என்னை மாதிரி அவனுக்கு கார் எல்லாம் தேவை இல்லை. நீதான் நோஞ்சானா இருக்க... இந்நேரம் பஸ்ல வந்திருந்தா பத்துதரம் வாந்தி எடுத்திருப்ப... உனக்காகத்தான் வாங்கினேன்.”
கணவனின் பதிலில் திருப்தி உற்றவள், அவனை இன்னும் ஒன்ற, ஜெய்யும் மனைவியை அனைத்துக் கொண்டான்.
******************************************************************************************
ஏற்கனவே கணவன் தான் தன் தங்கைகளை அங்கே கொடுக்க மாட்டான் என சொல்லி இருந்தானே... அதனால் சுரத்தே இல்லாமல் பேசினாள்.
அன்று இரவு உணவு வேளையின் போது, “ராதிகாவை அண்ணனுக்கு கேட்கிறாங்க.” என வெண்ணிலா பொதுவாக சொல்லிவிட.... இது என்னடா வம்பு என்பது போல இரண்டு மாமன்களும் பார்க்க, ஜெய் மட்டும் முறைத்தான்.
“நீ என்ன சொல்ற சந்திரா?” என ஜெயராமன் தம்பியைப் பார்க்க, அவர் காமாட்சியை பார்த்தார்.
“ஜெய் சொன்னா சரியா இருக்கும். நீ என்ன ஜெய் சொல்ற?” என்றதும்,
“என்னை ஏன் கேட்கிறீங்க? உங்க இஷ்டம்.” என்றான் ஜெய்.
“இது என்ன டா பதில்?” என ஜெயராமன் மகனைப் பார்க்க,
“உங்களுக்கு எல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தியே வராதா பா... அத்தையை கட்டி கொடுத்திட்டு பட்டது எல்லாம் மறந்து போச்சா... இன்னைக்கு இன்னொரு பெண்ணையும் தரேன்னு சொல்றீங்க.”
“இது நீ அங்க இருந்து பெண் எடுக்கும் போது தெரியலையா? அவங்க பெண்ணையே எடுத்திட்டு.. இப்ப பொண்ணு மட்டும் கொடுக்க முடியாதுன்னு சொல்ல முடியாது.”
“என்னவோ பண்ணுங்க என்னை ஏன் கேட்கிறீங்க?”
“அண்ணனுக்கு இஷ்டம் இல்லைனா எனக்கு வேற இடமே பாருங்க.” என ராதிகா சொல்ல,
“இங்கப் பாரு உனக்கு இஷ்டமா கல்யாணம் பண்ணிட்டு போ... அப்புறம் உனக்கு வந்த நல்ல இடத்தை நான் கெடுத்துட்டேன்னு நீயே ஒரு நாள் சொல்லுவ.,” என ஜெய் ராதிகாவிடமும் எரிந்து விழுந்தான்.
Last edited: