“வாட் டூ யூ தின்க் அபவுட் மீ..??” என்று தீபன் சீர,
அவனின் இப்படியொரு முகத்தினை அனு சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
‘தவறு செய்துவிட்டோமோ..’ என்று தோன்றியது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
பயம் அவளைக் கொண்டு அல்ல, தேவையில்லாது நீரஜாவையும் இதில் இழுத்துவிட்டோமோ என்று தோன்றியது.
“நீரு நீ கிளம்பு.. நான் எப்படினாலும் வந்திடுவேன்..” என,
“எப்படி.. எப்படி?? எப்படி?? நீ கிளம்பனும்னு நான் நினைச்சா மட்டும்தான் நீ போக முடியும்..” என்றான் தீபன் சக்ரவர்த்தி.
“நான் கிளம்பனும்னு நினைச்சா எப்படினாலும் கிளம்பிடுவேன்..” என்று அனு சொல்ல,
“எப்படி எவனையோ பாக்க இப்போ என்னோட கிளம்பி வந்தது போலவா ???!!!” என்றான் தீபன்.
---------------------------------------------------------------
“தீப்ஸ் வேணாம்டா..” என்று புனீத் சொல்ல,
“நான் டிசைட் பண்ணிட்டேன்...” என்றவனின் பார்வையும் குரலும் சொன்னதை செய்வேன் என்றே சொல்லியது.
அதற்குமேல் அவன் யார் சொல்வதையும் கேட்கமாட்டான் என்று நண்பர்களுக்குத் தெரியாத..
இதுவரைக்கும் பெண்கள் விசயத்தில் யாரிடமும் இப்படி தீபன் பிடிவாதம் செய்ததில்லை. அனால் அனு காணோம் என்றதும் அவன் மனதில் தோன்றிய அந்த நொடிப் பொழுது பயமே அவனை இப்படி நடந்துகொள்ளச் செய்கிறது என்று அவனே அறியான்.
ஆம் பயம்தான்..
அந்த ஷர்மா தன்னைப் பழிவாங்க அனுவை எதுவும் செய்துவிட்டானோ என்று..
ஆனால் அவளோ மிக மிக சாதாரணமாக ‘பிரஷாந்த் போல இருந்தது..’ என்று நீரஜாவிடம் சொல்ல, தீபனின் எண்ணங்கள் அப்படியே மாறிப்போயின..
------------------------------------------------------
‘பிரசாந்த்..’ என்ற ஒருவனை தீபன் இதுவரைக்கும் கண்டதில்லை. ஆனால் என்னவோ மனதளவில் அவன் இவனுக்கு எதிரியாகிப் போனான்.
என்னை கண்டுகொள்ளாது ஒருத்தி.. அதுவும் என்னருகில்.. யாரோ ஒருவனைக் காண என்னைப் பயன்படுத்திக்கொண்டாள்.
‘ஒ..!! நோ...!!’ என்று அவன் மனம் சொல்ல, பார்வை என்னவோ அனுராகா பக்கம் செல்ல,
அவளோ ‘நீ என்ன செய்தாலும் என்னை அசைக்க முடியாது..’ என்பது போல் அமர்ந்திருந்தாள்.
பெங்களூரு, தமிழக எல்லையில் தீபன் சக்ரவர்த்திக்கு சொந்தமான இடத்தில் இருந்தார்கள்.. இருட்டிய நேரம் என்பதால் அது என்ன இடம் என்பது அனுராகவிற்குத் தெரியவில்லை. ஆனால் எந்த இடமாக இருந்தால் எனக்கென்ன என்றுதான் அவளின் பார்வை சொல்லியது.
------------------------------------------------------------
“நீங்க எலெக்சன் வேலை பார்ப்பீங்களோ என்னவோ கொஞ்சம் அப்பாவாவும் நடந்துக்கணும்..” என்று உஷா சொல்ல,
“ப்பா..!!!!” என்ற சக்ரவர்த்தி “சொல்லு என்ன பண்ணனும்..” என,
“அவங்க வீட்ல பேசணும்.. அதுவும் இப்போவே...” என்றார் உஷா..
“இப்போவா ??!!!”
“ஏன் ஏதாவது ஒரு வேலை, மீட் பண்ணனும்னா மட்டும் எந்த டைம்மா இருந்தாலும் அரேஞ் பண்றீங்கதானே.. இது மிதுன் லைப் விஷயம்...”
“ம்ம்ம் எஸ் அதான் சொல்றேன். மிதுன் வறட்டும் ஒரு வார்த்தை கேட்டுப்போம்..”
“அதெல்லாம் நான் கேட்டாச்சு.. அவன் ஓகே சொல்லிட்டான்..” என்று உஷா பெருமையாய் சொல்ல,
“ஒ..!! இவ்வளோ நடந்து போச்சா??!!” என்றார் சக்ரவர்த்தி சிரிப்பாய்.
அவனின் இப்படியொரு முகத்தினை அனு சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
‘தவறு செய்துவிட்டோமோ..’ என்று தோன்றியது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
பயம் அவளைக் கொண்டு அல்ல, தேவையில்லாது நீரஜாவையும் இதில் இழுத்துவிட்டோமோ என்று தோன்றியது.
“நீரு நீ கிளம்பு.. நான் எப்படினாலும் வந்திடுவேன்..” என,
“எப்படி.. எப்படி?? எப்படி?? நீ கிளம்பனும்னு நான் நினைச்சா மட்டும்தான் நீ போக முடியும்..” என்றான் தீபன் சக்ரவர்த்தி.
“நான் கிளம்பனும்னு நினைச்சா எப்படினாலும் கிளம்பிடுவேன்..” என்று அனு சொல்ல,
“எப்படி எவனையோ பாக்க இப்போ என்னோட கிளம்பி வந்தது போலவா ???!!!” என்றான் தீபன்.
---------------------------------------------------------------
“தீப்ஸ் வேணாம்டா..” என்று புனீத் சொல்ல,
“நான் டிசைட் பண்ணிட்டேன்...” என்றவனின் பார்வையும் குரலும் சொன்னதை செய்வேன் என்றே சொல்லியது.
அதற்குமேல் அவன் யார் சொல்வதையும் கேட்கமாட்டான் என்று நண்பர்களுக்குத் தெரியாத..
இதுவரைக்கும் பெண்கள் விசயத்தில் யாரிடமும் இப்படி தீபன் பிடிவாதம் செய்ததில்லை. அனால் அனு காணோம் என்றதும் அவன் மனதில் தோன்றிய அந்த நொடிப் பொழுது பயமே அவனை இப்படி நடந்துகொள்ளச் செய்கிறது என்று அவனே அறியான்.
ஆம் பயம்தான்..
அந்த ஷர்மா தன்னைப் பழிவாங்க அனுவை எதுவும் செய்துவிட்டானோ என்று..
ஆனால் அவளோ மிக மிக சாதாரணமாக ‘பிரஷாந்த் போல இருந்தது..’ என்று நீரஜாவிடம் சொல்ல, தீபனின் எண்ணங்கள் அப்படியே மாறிப்போயின..
------------------------------------------------------
‘பிரசாந்த்..’ என்ற ஒருவனை தீபன் இதுவரைக்கும் கண்டதில்லை. ஆனால் என்னவோ மனதளவில் அவன் இவனுக்கு எதிரியாகிப் போனான்.
என்னை கண்டுகொள்ளாது ஒருத்தி.. அதுவும் என்னருகில்.. யாரோ ஒருவனைக் காண என்னைப் பயன்படுத்திக்கொண்டாள்.
‘ஒ..!! நோ...!!’ என்று அவன் மனம் சொல்ல, பார்வை என்னவோ அனுராகா பக்கம் செல்ல,
அவளோ ‘நீ என்ன செய்தாலும் என்னை அசைக்க முடியாது..’ என்பது போல் அமர்ந்திருந்தாள்.
பெங்களூரு, தமிழக எல்லையில் தீபன் சக்ரவர்த்திக்கு சொந்தமான இடத்தில் இருந்தார்கள்.. இருட்டிய நேரம் என்பதால் அது என்ன இடம் என்பது அனுராகவிற்குத் தெரியவில்லை. ஆனால் எந்த இடமாக இருந்தால் எனக்கென்ன என்றுதான் அவளின் பார்வை சொல்லியது.
------------------------------------------------------------
“நீங்க எலெக்சன் வேலை பார்ப்பீங்களோ என்னவோ கொஞ்சம் அப்பாவாவும் நடந்துக்கணும்..” என்று உஷா சொல்ல,
“ப்பா..!!!!” என்ற சக்ரவர்த்தி “சொல்லு என்ன பண்ணனும்..” என,
“அவங்க வீட்ல பேசணும்.. அதுவும் இப்போவே...” என்றார் உஷா..
“இப்போவா ??!!!”
“ஏன் ஏதாவது ஒரு வேலை, மீட் பண்ணனும்னா மட்டும் எந்த டைம்மா இருந்தாலும் அரேஞ் பண்றீங்கதானே.. இது மிதுன் லைப் விஷயம்...”
“ம்ம்ம் எஸ் அதான் சொல்றேன். மிதுன் வறட்டும் ஒரு வார்த்தை கேட்டுப்போம்..”
“அதெல்லாம் நான் கேட்டாச்சு.. அவன் ஓகே சொல்லிட்டான்..” என்று உஷா பெருமையாய் சொல்ல,
“ஒ..!! இவ்வளோ நடந்து போச்சா??!!” என்றார் சக்ரவர்த்தி சிரிப்பாய்.