சகோதரி கீதாஞ்சாலி அவர்களுக்கு, தங்களின் மறுபதிவு நாவலான வயல்வெளி கவிதைகள், சிறந்த கிராமிய நாவல். அருமையான நாவல். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சமுககடமை உள்ளது. அதிலும் எழுத்தாளருக்கு அதிகம், அதனை உணர்ந்து தாங்கள் எழுதியதுக்கு என் வாழ்த்துக்கள்.
காடோடி திரிந்தவனின் கவலை தீர்த்தது உழவு
நாடோடியாக வாழ்ந்தவனை நாகரிகமாக்கியது உழவு
உலகிலுள்ள தொழிலுக்கெல்லாம் முன்னோடி உழவு
உனக்கும் எனக்கும் உயிர்வாழ உணவளிப்பது உழவு
ஈரடியால் வள்ளுவனும் ஏற்றிப் புகழ்ந்த உழவு
ஆறடியில் அடங்கும் வரை அவசியம் இந்த உழவு
முன்னோர்தம் கைகளினால் முப்போகம் விளைந்திட்ட உழவு
நம்மோர்கள் நஞ்சிட்டு விஷமாகும் உழவு
ஊருக்கே வேலை தரும் உயர்ந்த தொழில் உழவு
பாருக்கே படியளக்கும் சாமிதானே உழவு
இப்படி பட்ட விவாசாயின் பிரச்சனைகள் பற்றியும், பெண் கொடுமை {கொஞ்சம் மட்டும்} இயற்கை விவாசயம், ஜாதிகலப்பு, காதல், பாசம், அன்பு, அனைத்தும் கலந்த நாவல். மிக சாதரணகரு அதனை மேற்குறியவை வைத்து மிக சாமர்தியாமாக நாவல் படைத்துள்ளீர், அருமை. என்னுடைய முதல் சந்தோஷம் அனைத்து பெயரும் தமிழ் பெயர், {அழகு,அறிவு,சண்முகக்கனி,தங்கபாண்டியன்,வள்ளி,தாமரை,வளவன்,பொன்னுதாயி,செல்வி,கோதையம்மாள் சரவணன்,தீபா, இன்னும் பலர்}. அதன்பிறகு நாவல் முழுவதும் கிராமியமொழி, அதனை எந்த இடதிலும் விடாமல் தொடர்ந்தது அருமை.பிறகு சாண்டில்யன் போல் பெண் வர்ணனை {மலர்களுடன் ஓப்பிடு}, சில இடங்களில் கவிதைகள் மூலமும், சில இடங்களில் படங்களில் மூலமும் எழுதியது அருமை. உங்களின் முதல் வெற்றி, படிக்கும் போதே கண் மூன் காட்சி தெரிகிறது போல் எழுத்து உள்ளது இது அருமை. மொத்ததில் ஒரு பாரதிராஜா திரைப்படம் போல் உள்ளது சகோதரி..
வேறிடம் போக எனக்கு
கல்வியோ துளியும் இல்லை
வயலிடம் வாழ்க்கைப் பட்டேன்
வேதனை சொந்தம் ஆச்சு
மானிடப் பிறவி நானே
பசியினால் துடிக்கும் வேளை
எந்நிலப் பயிர்கள் எல்லாம்
நீரின்றி தவிப்பதைக் காண்
உலகத்தார் பசியைப் போக்க
செய்கிறேன் இந்தப் பணியே
பசியெனக்கு பழகிப் போச்சு
பாதிசொந்தம் விலகிப் போச்சு
மாட்டுக்குப் புல்லும் இல்லை
ஆட்டுக்கு இலையும் இல்லை
பயிருக்கு விலையும் இல்லை
வாழ்க்கையில் ஒளியும் இல்லை
பட்டினி கூட வருது
பிரச்சனை கழுத்தை பிடிக்குது
நாளையோ பயத்தைக் கொடுக்குது
வேதனை மட்டுமே நிலைக்குது எனக்கு
என்று அவனின் பிரச்சனை பற்றி கூறியதுக்கு வாழ்த்துகள் சகோதரி. ஒருசின்ன குறை கதை கரு இன்னும் கணம் தேவை சகோதரி. கண்ணீரை கதையில் சேர்த்துவிடாதீர் , நகைச்சுவை இன்னும் அதிகபடுத்துங்கள் சகோதரி, இன்றைய தலைமுறை தங்கீலிஷ் தலைமுறை அதுவும் புக் இல்லாமல் செல்லில் படிக்கும் தலைமுறை. அவர்களுக்கு புதிய தமிழ் சரியானது. கிராமிய மொழி சற்று கடினம். உங்கள் உழைப்பு வீணாகும் அபாயம் உள்ளது.அதுபோல் செண்டிமெண்ட்ம் புரியாது. எனவே உங்கள் முடிவு உங்கள் உரிமை சகோதரி. வாழ்த்துகள் சகோதரி அன்புடன் V.முருகேசன்.