நன்றி சகோ ....இளையவன் என்ற படம் சகோதரி, இளையராஜா இசையில், சத்யன் ஹீரோ{இப்போ காமடியன்}
அடுத்த பக்கத்தில் உங்கள் பதில் ..தாமதமாக பார்த்தேன்.
நன்றி சகோ ....இளையவன் என்ற படம் சகோதரி, இளையராஜா இசையில், சத்யன் ஹீரோ{இப்போ காமடியன்}
மிக, மிக, அருமையான பதிவு, பொன்ஸ் டியர்
இந்த எபிலாக், எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிச்சது,
பொன்ஸ் செல்லம்
நிறைய தடவை படித்தேன், பொன்ஸ் டியர்
வாவ், என்ன ஒரு அழகான நாவல், இந்த ‘’ கனவுகளின்
சுயம்வரமே’’
மிகவும் அருமையாக, சமுதாய சிந்தனைகளோடு
எழுதியிருக்கிறீர்கள், பொன்ஸ் செல்லம்
விதவை திருமணம், பசுமைப்புரட்சி, சுய தொழில்,
வேலை வாய்ப்பு, விவசாயத்தை திட்டமிட்டு முன்னேற்றுதல்,
இவற்றுடன் நாட்டின் தற்போதைய சூழலில், நம்ம
நாட்டுக்கு மிகவும் தேவையான, மரம் வளர்ப்போம்=ங்கற,
மிகப்பெரிய, நாட்டுக்குத் தற்போது, மிகவும் தேவையான,
விஷயத்தை மிக அழகாக, கையாண்டிருக்கிறீர்கள், பொன்ஸ் டியர்
அத்துடன் நல்லதொரு, அழகான குடும்பத்திற்குள்ளும்,
என்னைக் கொண்டு சென்றுவிட்டீர்கள்,
சுட்டித்தனமாயிருந்தாலும், கல்யாணமானவுடன்,
தன் கணவன் and மாமனாரைப் பேணும், அன்பான
மகள், வினி @ வினயா
அவளின் வாழ்க்கையைப் பார்த்து ஆனந்தப்படும்,
அன்பே உருவான, அமைதியான, நல்ல, ஒரு
தாயார், மீனாம்மா
விதிவசத்தால், பெற்றோரை இழந்தாலும் சில, நல்ல
உள்ளங்களின் உதவியோடு படித்து, வேலைப் பார்த்து,
தன்னைக் காதலித்தவனையே கரம் பிடித்து, கணவன்
அல்பாயுசில் போனதற்கு, மாமனாரின் அன்பும்,
மாமியாரின் வசவுகளுக்கிடையில், ஒரு அழகான
நிலாவைப் பெற்றெடுத்து, தனியே வளர்த்தாலும், அன்புக்கும்,
பாசத்துக்கும், ஏங்கும் அழகான, பண்பான மனைவி,
சங்கமித்ரா
இவர்களை அரவணைத்து செல்லும், இவர்களின் மீது
அன்பான, பாசமான, நம்ம ஹீரோ விக்னேஷ் டியர்
நண்பனின் தங்கையை மனமார விரும்பி, ஆவலுடனும்,
காதலுடனும், மனமொத்து குடும்பம் நடத்தும், தந்தை மீது
மிகுந்த பாசமுள்ள, உற்ற நண்பனாக, சதீஷ் டியர்
பெரியவர்கள் தவறு செய்தாலும், பின்னர் திரும்பி வந்து
பாசமாக இருந்தாலும், எந்நாளும் அண்ணனின் பாசமான
உறவை வேண்டி நிற்கும், ராஜா
தன்னை நம்பிய, நண்பனுக்குத் துரோகம் செய்து,
நண்பனை, நண்பனின் குடும்பத்தை, இரு முறை ஏமாற்றி,
பாவத்தின் சம்பளமாக, மகனின் மரணத்தைப் பார்த்து,
மனம் திருந்தி, ஏமாற்றிய சொத்தை நண்பனின்
குடும்பத்திடம், மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, திரும்பக்
கொடுக்கும், பழனிச்சாமி
மகனை இழந்த வருத்தமின்றி, மருமகளை
அலட்சியப்படுத்தி,
பின்பு தானும் உயர்ந்து, மக்களையும் உயர்த்திய, வாழ்வில்
ஜெயித்த மருமகளை, உணர்ந்து, அவளை மதிக்கும்,
போற்றும், நம்ம மகேஸ்வரனின் பெற்றோர் மற்றும்
உடன்பிறந்தோர்,
என அனைவரையும், மிகச் சிறப்பானவர்களாகவே,
நீங்கள் படைத்திருந்தீர்கள், பொன்ஸ் செல்லம்
நல்ல, அழகான, காவியம் போல, சிறந்த, ஒரு
அருமையான நாவலை, தந்ததற்கு, எனது நன்றி,
பொன்ஸ் டியர்
waiting for your next lovely and cute noval, பொன்ஸ் செல்லம்
இன்னும், கொஞ்சம் சொல்ல விட்டுப் போனது,
பொன்ஸ் டியர்
ஹீரோ and ஹீரோயின் ரொமான்ஸ், கொஞ்சமாக
இருந்தாலும், நன்றாக இருந்தது, பொன்ஸ் செல்லம்
அப்புறம், நம்ம எல்லோருக்கும், மிகவும் தேவையான
சமையல் குறிப்புகளையும் கொடுத்து, அசத்தோ அசத்துன்னு, அசத்திட்டீங்க, பொன்ஸ் டியர்
அனைத்திற்கும், எனது மனமார்ந்த நன்றிகள்,
பொன்ஸ் செல்லம்
லலிதா,ஹாய் பொன்ஸ்,
அற்புதம் பா.ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல ஸ்டோரி படிச்ச பீலிங் இருக்கு .வெற்றிகரமா கதைய முடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.உங்க எழுத்துப்பணி மென்மேலும் தொடர ஆண்டவன்கிட்ட வேண்டுகிறேன்.
நன்றி சித்து....அருமையான யதார்த்தமான அன்பான மிகைப்படுத்தல் எதுவும் இல்லாத கதை கொடுத்த பொன்ஸ்க்கு நன்றி...
கதையில் புரட்சி,சமூக சிந்தனை,பாசம், காதல்,சமையல் குறிப்பு என்ற அனைத்தையும் கலந்து ஒரு விருந்து படைத்து உள்ளீர்கள்.நல்ல பாசிட்டிவ் அப்ரோச்.ஒரு வேண்டுகோள்.பதிவுகள் பக்கம் அதிகமாக இருந்தால் படிக்கும் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.உங்களின் அடுத்த கதை எதிர்பார்த்து வெயிட்டிங்.