வாசமில்லா மலரிது ..பாட்டை பார்த்ததுமே தெரிஞ்சு போச்சு மல்லி,இந்த அப்டேட் கூட வாசமிருக்காதுனு
...
ஆனா கதை முடிவு ஒருதலை ராகமா மாக்கிடாதிங்க மல்லி..நல்ல வாசத்துடன் இருக்கணும்
..
மனநோய்,மன அழுத்தமானு கேட்கிறா..படிக்கிற எங்களை மனஅழுத்தமாகி மன நோயா மாறாம இருந்தா சரி
அவ பக்குவப்படலையானு கேட்கிறியே ஈஸ்,நீ பக்குவப்பட்டியா?????
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு...
கோபம் இல்லாம அவகிட்டே பொறுமையா கேட்டு இருந்தா அந்த பிடிவாதக் குழந்தை அப்படித்தான் செய்வேன் என்று எகிறி இருக்குமா??
திமிருக்கு பிறந்தவன்..
பிடிவாதத்திற்கு பிறந்தவள்...
நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை உங்க குணத்தை விட்டு வரப்போறதில்லை..ஆனாலும் உங்க காதல் ஜெய்க்கப் போகிறது..
நல்லா கண்டுபிடிச்சு ஜோடி சேர்த்திங்க மல்லி
..
சீட் நுனிலே உட்கார்ந்து படிக்கிற எங்களுக்கு இல்ல டென்ஷன்
...
ஈஷ்க்கு் அழகான பெண்ணிடம் தோன்றாத காதல் ..பக்குவமில்லா குழந்தை இடம் தோன்றி இருக்கு ...
அதுவும் மோகம் கொண்ட பின் தான் உணர்கிறான்...ஆனால் அதை சரியாக சொல்லாததால் கிடைத்ததோ??????
முதன்முதலில் ஈஷை பார்த்து சைட் அடிச்சது வர்ஷ்..
அவனை ஹீரோ லெவெலுக்கு ரேஞ் செய்து அவன் பின்னாடி என்ன செய்றான்னு தெரிஞ்சு அவனை ஈர்த்தது வர்ஷ்..
அவனின் மனநிலை கண்டு அவனை வயப்படுத்தி,டென்ஷன் குறைத்து அவனை சமநிலைபடுத்தியது வர்ஷ்...
இப்போதும் அவனின் விழியோர கண்ணீர் கண்டு மனதில் அடி ஆழத்தில் இருக்கும் அன்பை வெளிபடுத்த தெரியாமல் மனமுதிற்சில்லா கன்னி வர்ஷ்...
எதற்கு நீ உன்னை பற்றி அவனிடம் பேசினாய்???
வர்ஷ் நினைக்கும் இந்த வார்த்தைகள் மேலே கண்ட வர்ஷை முற்றிலும் மாற்றி இருக்கு..இன்னும் அவனை அவளால் தன்னவனாக உணரத்தோன்றலை..
போல...அவள் இவனை ஆழ் மனதில் கொண்டதால் தான் தந்தை தந்த எந்த வரனையும் ஏற்கவில்லை..எப்போதும் தனியாக இருந்தவள்,குடும்பம்,வாழ்க்கை என அதை உணரனும் என்றால் ஈஸ் சொன்னது போல் பிரிவு ஒன்று தான் மனம் அலசும்...
அதையும் ஈஸ் அவளை மாற்றி சிகிச்சை அளித்து தன்னை உணர்த்தி தன்
காதலை உணர்த்தணும்...அப்போதும் அந்த பிடிவாதம் போகாது தான்
நினைக்கிறேன்....பார்போம்...எப்படியோ..
இருந்தாலும் வர்ஷ் தண்ணீர் தெளிச்சு நல்லா தெளிய வைச்சு தெளிய வைச்சு அடிக்கிறாயா
...முடிலை..அழுதுடுவேன்...
ஷாக் மேல ஷாக் கொடுக்கிறா இல்லே ஈஸ்..
பேசாம நீ ஐஸ் விஷயத்தை சொல்லி அவளுக்கு ஒரு ஷாக் கொடேன்...
மைனஸ் இண்டு மைனஸ் பிளஸ் ஆகுமா??இல்லே அந்த அஞ்சு விரல் உன் கன்னத்துக்கு மாறுமானு பார்த்துடுலாம் நீயா நானானு???