Hi mam
நன்றாக இருந்தது mam,கண்ணனுக்கு இபோதுதான் வயதுக்குரிய அறிவு & முதிற்ச்சி வந்திருக்கும்,அத்தோடு குழந்தைபற்றிய நினைவும் தெரிந்ததிலிருந்து இப்போது வரை அலைகழிக்குமல்லவா,தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்பார்களே அதே போல் தன்பிள்ளைபற்றிய எண்ணம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் ,இப்போது இன்னும் வளர்ந்து உலகனுபவமும் சேரந்தவுடன் கடந்தகாலத்தை நினைக்கும்போது ,தன்னுடைய தவறை விளங்கிக்கொண்டுள்ளார்,விவாகரத்து கோரும்போது அப்பெண்ணுடன் வாழவில்லையென்றால் நிறைய சட்டசிக்கல்& காலதாமதம் ஆகலாம்,அதனால்தான் கண்ணன் அப்படி நடந்திருக்கவேண்டுமென்று நினைக்கின்றேன்,ஒன்று மட்டும் உறுதி மீண்டும் சுந்தரியுடனும் குழந்தையுடனும் கண்ணன் சேர்வது என்றால் கண்ணன் சூடு சுரணை காதுகேளாமை வாய்பேசாமை இது எல்லாம் இருந்தால்தான் சுந்தரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்,ஏனெனில் மல்லிகா mam இன் நாயகிகள் எப்போதுமே ஒருவித திமிர் & கர்வம் உள்ள நாயகிகள்தான்,அடம் பண்ணத்தொடங்கினார்கள் என்றால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்,என்னமோ பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி
Aravin22
Hi Friends
என்னுடைய எழுத்தால் யாரையும் மனவருத்தம் செய்ய விருப்பமில்லை,அப்படி என் எழுத்து மனம் வருந்தும்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே,தோழிகள் சிலபேர் மிக மனவருத்தத்துடன் எனது விமர்சனத்திற்க்கு பதில் பதிவு செய்திருந்தார்கள் ,எனக்கு மிகவும் சங்கடமாகப்போய்விட்டது தோழிகளின் பதில் விமர்சனத்தைப்பார்த்து,ஆனால் mam இன் எல்லாக்கதைகளும் வாசித்திருப்பீர்கள்தானே அநேக நாயகிகள் அப்படித்தான் சித்தரித்திருப்பார் ,அது அந்தந்த கதையின் நாயகிகளுக்கு இந்த திமிர் & கர்வம் எல்லாம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் நேர்மையினாலும் & ஒழுக்கத்தினாலும் வந்ததாயிருக்கும்,அதைதான் அப்படி எழுதினேன் ,ஏன் சுந்தரி கூட கணவன்செய்த தவறினால் எவ்வளவு பேரின் ஏளனத்திற்கு ஆளாகியிருப்பார்,ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி தன்னந்தனியாக குழந்தையை வளர்த்து தங்களுடைய தொழிலையும் விருத்திசெய்யவில்லையா ,எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் நிமிர்ந்து நின்று செயாலாற்றுவது ,அவருக்கு ஒருவித நல்ல அழகு கர்வம் திமிர் இது எல்லாவற்றையும் கொடுக்கின்றதல்லவா , அது தன்னால் நேர்மையாக எதையும் சாதிக்கமுடியுமென்ற நம்பிக்கையால் வந்தது , இதைத்தான் நான் அப்படி எழுதினேன்,ஏன் வர்ஷினியைக்கூட எடுத்துக்கோங்க ,mam சிலபகுதிகளில் எழுதியிருப்பார்கள்,திமிராய் பார்க்கின்றார் பதில் சொல்கின்றார் என்று,ஏனென்றால் அவருடைய ஈஸ்வர் எப்படி இன்னொரு பெண்ணிடம் காதல் சொல்லி ஏமாற்றலாம் என்ற கோபத்தினால்தான் வந்தது ,அப்படி சரியான காரணத்திற்கு கோபப்படும் நியாயவாதிகள்தான் நம்ம mam இன் நாயகிகள் ,நான் அதைதான் அச்சொற்களால் பயன்படுத்தினேன்,மற்றும்படி நம் நாயகிகளை இழிவுபடுத்தும் அர்த்தத்தில் அச்சொற்களை பயன்படுத்தவில்லை,என்னுடைய எல்லா விமர்சனங்களையும் வாசித்துப்பார்த்தால் தெரியும் நான் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக்கூட ஒருமையில் விளித்து எழுதியது இல்லை,ஏனென்றால் கதாபாத்திரமாக இருந்தால் கூட மதிப்புடன் எழுத வேண்டுமென்று நினைப்பவள் நான்,ஆனால் நம்பெண்களை அதுவும் கதையென்றால்கூட தவறான கண்ணோட்டத்திலோ சொற்றொடரிலோ எழுதமாட்டேன்,எங்கிருந்தாலும் எல்லோரும் சக மனிதர்களே,எந்நாடாயிருந்தாலும் எல்லோரும் பண்புடன்தான் இருக்கவேண்டும்,அதில்மாற்றுக்கருத்தேயில்லை,இது என்னுடைய தன்னிலை விளக்கம்,யாரையும் மனம்வருத்தச்செய்வதற்கோ அல்ல நண்பர்களே,உங்கள் மனதுக்கு தவறென்று தோன்றினால் விளக்கம் கேட்பதில் தவறு இல்லை.அதற்கு பதில் சொல்ல கடமைபட்டவள்.
நன்றி
Aravin22