சொல்லி தான் தெரிய வேண்டுமோ கணவன் மனைவி புரிதல்.. அங்கே அங்க உணர்வு அறியப்படாதென தெரியவில்லை என வலிக்க வலி சொல்லும் பேதை ...தெரிந்திருந்தால் கொணர்திருப்பேன் சான்றிதழ் ஒன்று...
எடுத்த சாட்டையை விடுவதாய் இல்லை..அவள் ரணங்கள் சொல்லாமல் தீர்வதாய் இல்லை..
தாலி போட்டும் தரமான பார்வை தரும் சமூதாயமா இது...
கூர்முனை தாக்குதல்...
உயிர் போகாது உடல் நோகாது..
சாவதாய் மனமும்..
சமாதியாய் உடலும்...
ஆன தாக்குதல் உணர்வுகளால்..
கொன்று தின்ற தாக்குதல்..
அவனின் குற்றமில்லை..
இரண்டு நாளோடு காதலும் ஒரு மாதமோடு மணமும் செய்தவன்..தாயின் தவறான போதனையின் அடி மனதினோடு விஷமாய் பதிந்து போன அவனின் குற்றமில்லை...
இன்று பேசும் யாவும் 3 மாதத்தில் ஏதேனும் ஒரு பொழுதோடு பேசாது போன அவள் குற்றமுமில்லை...
உறவு உணரப்பட வேண்டும்..
உணர்த்தப்பட வேண்டும்....
இன்றோடு இந்த குடும்பத்துல இனி ஒரு கூக்குரல் வேண்டாமென நிதானமாய் நின்று நிலைபடுத்து அவள் கேள்வியும் வேள்வியும் சிறப்பான பதிவு.... எப்பவும் போல
அருமையான எழுத்து...