குட்டி டீசெர் தான் செல்லம்ஸ் ENJOY.
கதையை எழுதலாம் னு பார்த்தா disturbance ஏவுகணையா இல்ல தாக்குது. mood spoil ஆனதால் இங்க ஓடி வந்துட்டேன்.
தூங்கும் மலர்விழியையே பார்த்திருந்தான் பிரதீபன். அமுதனின் விரல் அடையாளம் கூட அவளின் கழுத்தில் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் பதிந்திருந்தது. அமுதனுக்கு எவ்வளவு கோபமிருந்திருந்தால் அவ்வளவு அழுத்தமாக மலர்விழியின் கழுத்தை நெறித்திருப்பான். மலர்விழியும் திமிராமல் அவனையே வெறித்து பார்த்திருந்தது இன்னும் ப்ரதீபனின் கண்களுக்குள் வந்து போக அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது அது மலர்விழி அமுதனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் என்பதே!
ரிஷிக்கு வந்த ஆபத்தை ப்ரதீபனால் தடுக்க முடியாமல் போனது இன்னும் அவன் மனதில் ஆறாத ரணமாக இருக்க, அமுதனை சென்னைக்கு அனுப்பிய போது அவனின் பாதுகாப்பை பலப் படுத்தி இருந்த போதிலும் ரிஷியை போலவே இருப்பதால் அமுதனை ஆபத்து தேடி வரும் என்று அறிந்திருந்தவன் மலர்விழி அமுதனை கல்யாணம் பண்ண நினைத்தது தந்தையின் முகத்தில் கரியை பூசவென்று சொன்ன கதையை நம்பவில்லை.
பதவியும், செல்வமும் குவிந்து கிடக்கும் தந்தையின் முகத்தில் கரியை பூச வேண்டிய அவசியம் தான் என்ன? அதுவும் அமுதனை கல்யாணம் செய்து. அவள் தந்தையை பற்றி சொன்னது உண்மையோ பொய்யோ! அமுதனை தெரியும் என்று அவள் சொல்ல நினைக்கவே இல்லை. அப்படியாயின் அவனை அவள் காப்பாற்ற நினைக்கின்றாளா? அவனுக்கு ஆபத்து வரக் கூடாதென்று நினைக்கின்றாளா?
அமுதனின் வீட்டில் வைத்து முதன் முதலாக மலர்விழியை சந்தித்த பொழுது திமிராக பேசினாலும் அவளின் கண்களில் கள்ளத்தனம் இல்லை என்று கண்டு கொண்டான் பிரதீபன்.
ஆனால் கடத்தினவனிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் அவளுக்கு இல்லையே! ரிஷி இறந்து விட்டான் என்று நினைத்து அமுதனை காப்பாற்ற வேண்டியே அவள் உண்மையை கூறினாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அதை புரிந்துக் கொள்ளாத அமுதன் தான் அவளுடைய கழுத்தை நெறித்தான் என்றால் அவள் அசையாமல் நின்றதுக்கு காரணம் ரிஷியின் இறப்புக்கு தன் தந்தை தான் காரணம் என்பதனாலையா? அப்படியென்றால் அவள் ரிஷியை காதலித்தாளா? குழப்பமான மனநிலையிலையிலையே! அமர்ந்திருந்த பிரதீபன் அவனின் அலைபேசி சிணுங்கவே! யார் என்று பார்க்க திரையில் ரிஷி என்று மின்னிக் கொண்டிருந்தது.
கதையை எழுதலாம் னு பார்த்தா disturbance ஏவுகணையா இல்ல தாக்குது. mood spoil ஆனதால் இங்க ஓடி வந்துட்டேன்.
தூங்கும் மலர்விழியையே பார்த்திருந்தான் பிரதீபன். அமுதனின் விரல் அடையாளம் கூட அவளின் கழுத்தில் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் பதிந்திருந்தது. அமுதனுக்கு எவ்வளவு கோபமிருந்திருந்தால் அவ்வளவு அழுத்தமாக மலர்விழியின் கழுத்தை நெறித்திருப்பான். மலர்விழியும் திமிராமல் அவனையே வெறித்து பார்த்திருந்தது இன்னும் ப்ரதீபனின் கண்களுக்குள் வந்து போக அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது அது மலர்விழி அமுதனின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள் என்பதே!
ரிஷிக்கு வந்த ஆபத்தை ப்ரதீபனால் தடுக்க முடியாமல் போனது இன்னும் அவன் மனதில் ஆறாத ரணமாக இருக்க, அமுதனை சென்னைக்கு அனுப்பிய போது அவனின் பாதுகாப்பை பலப் படுத்தி இருந்த போதிலும் ரிஷியை போலவே இருப்பதால் அமுதனை ஆபத்து தேடி வரும் என்று அறிந்திருந்தவன் மலர்விழி அமுதனை கல்யாணம் பண்ண நினைத்தது தந்தையின் முகத்தில் கரியை பூசவென்று சொன்ன கதையை நம்பவில்லை.
பதவியும், செல்வமும் குவிந்து கிடக்கும் தந்தையின் முகத்தில் கரியை பூச வேண்டிய அவசியம் தான் என்ன? அதுவும் அமுதனை கல்யாணம் செய்து. அவள் தந்தையை பற்றி சொன்னது உண்மையோ பொய்யோ! அமுதனை தெரியும் என்று அவள் சொல்ல நினைக்கவே இல்லை. அப்படியாயின் அவனை அவள் காப்பாற்ற நினைக்கின்றாளா? அவனுக்கு ஆபத்து வரக் கூடாதென்று நினைக்கின்றாளா?
அமுதனின் வீட்டில் வைத்து முதன் முதலாக மலர்விழியை சந்தித்த பொழுது திமிராக பேசினாலும் அவளின் கண்களில் கள்ளத்தனம் இல்லை என்று கண்டு கொண்டான் பிரதீபன்.
ஆனால் கடத்தினவனிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் அவளுக்கு இல்லையே! ரிஷி இறந்து விட்டான் என்று நினைத்து அமுதனை காப்பாற்ற வேண்டியே அவள் உண்மையை கூறினாள் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அதை புரிந்துக் கொள்ளாத அமுதன் தான் அவளுடைய கழுத்தை நெறித்தான் என்றால் அவள் அசையாமல் நின்றதுக்கு காரணம் ரிஷியின் இறப்புக்கு தன் தந்தை தான் காரணம் என்பதனாலையா? அப்படியென்றால் அவள் ரிஷியை காதலித்தாளா? குழப்பமான மனநிலையிலையிலையே! அமர்ந்திருந்த பிரதீபன் அவனின் அலைபேசி சிணுங்கவே! யார் என்று பார்க்க திரையில் ரிஷி என்று மின்னிக் கொண்டிருந்தது.
Last edited: