Eswari kasi
Well-Known Member
மூளையின் ஆற்றல் தெரியுமா உங்களுக்கு ?
நானூறு பக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை நான்கே மணி நேரத்தில் படித்து அதனை தலை கீழாக ஒப்புவிக்கும் ஆற்றல் உடையது.
.இந்த உலகில் மிக சிறந்த அறிவாளியாக கருதப்படும் அதி மேதாவியும் கூட தனது மூளையின் ஆறு சதவீதத்திற்கும் மேலாக பயன் படுத்தவில்லை என்பது ஆராய்ச்சியின் முடிவு.(அப்படியெனில் மீதி?)
தேவையே கண்டுபிடிப்பின் தாய் .
செல்போன் வருவதற்கு முன் பல தொலைபேசி எண்களை நாம் மனப்பாடம் செய்து தானே வைத்திருந்தோம்.
இன்றோ நமது பாஸ் வேர்டை கூட நம்மால் எழுதி வைத்து கொள்ளும் நிலை.
நிறையபடிப்பவர்கள் சுறுசுறுப்போடு இருப்பவர்கள் வயதே ஆனாலும் சிலரை மறதி பிடிக்காததை நாம் பார்க்க தானே செய்கிறோம்.
நம் தாத்தா, பாட்டி, போன்ற பெரியோரிடம்.
ஞாபக சக்தி பெருக ..
கவனக்குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம்.பதற வேண்டாம் .
நிதானத்தோடு அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி
எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்
எழுதாத கணக்கு அழுதாலும் வராது.
சரியான சக்தியுள்ள உணவை உண்ணுங்கள் -சரிவிகித உணவு உங்களை தட்டியெழுப்பும் .(வெண்டைக்காய் போன்றவை)
ஒப்பிட்டு மனப்பாடம் செய்யுங்கள் -உங்களது கற்பனை வளத்தை அதிகபடுத்தி கொள்ளுங்கள்.
தூக்கமின்மை உங்களது மூளையை துருபிடிக்க செய்திடும் .
தேவை இல்லாமல் சத்து மாத்திரை என்றோ,ஆங்கில மருந்தையோ உபயோகிக்காதீர்கள்
பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் -வாழ்க்கை ஒரு முறை தான் -டென்ஷனை குறையுங்கள் .
வாரம் ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணை வைத்து குளியுங்கள் -
மேலும்,
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும்.
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது.
தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.
இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டன், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம், மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை.
இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.
சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை.
இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும் பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.
ஆனால் அவர்களில் பி6, பி12, ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.
நாம் செய்யும் பயிற்சி
நம் ஞாபகசக்தி அதிகரிக்க உதவும்
நானூறு பக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை நான்கே மணி நேரத்தில் படித்து அதனை தலை கீழாக ஒப்புவிக்கும் ஆற்றல் உடையது.
.இந்த உலகில் மிக சிறந்த அறிவாளியாக கருதப்படும் அதி மேதாவியும் கூட தனது மூளையின் ஆறு சதவீதத்திற்கும் மேலாக பயன் படுத்தவில்லை என்பது ஆராய்ச்சியின் முடிவு.(அப்படியெனில் மீதி?)
தேவையே கண்டுபிடிப்பின் தாய் .
செல்போன் வருவதற்கு முன் பல தொலைபேசி எண்களை நாம் மனப்பாடம் செய்து தானே வைத்திருந்தோம்.
இன்றோ நமது பாஸ் வேர்டை கூட நம்மால் எழுதி வைத்து கொள்ளும் நிலை.
நிறையபடிப்பவர்கள் சுறுசுறுப்போடு இருப்பவர்கள் வயதே ஆனாலும் சிலரை மறதி பிடிக்காததை நாம் பார்க்க தானே செய்கிறோம்.
நம் தாத்தா, பாட்டி, போன்ற பெரியோரிடம்.
ஞாபக சக்தி பெருக ..
கவனக்குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம்.பதற வேண்டாம் .
நிதானத்தோடு அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி
எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்
எழுதாத கணக்கு அழுதாலும் வராது.
சரியான சக்தியுள்ள உணவை உண்ணுங்கள் -சரிவிகித உணவு உங்களை தட்டியெழுப்பும் .(வெண்டைக்காய் போன்றவை)
ஒப்பிட்டு மனப்பாடம் செய்யுங்கள் -உங்களது கற்பனை வளத்தை அதிகபடுத்தி கொள்ளுங்கள்.
தூக்கமின்மை உங்களது மூளையை துருபிடிக்க செய்திடும் .
தேவை இல்லாமல் சத்து மாத்திரை என்றோ,ஆங்கில மருந்தையோ உபயோகிக்காதீர்கள்
பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் -வாழ்க்கை ஒரு முறை தான் -டென்ஷனை குறையுங்கள் .
வாரம் ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணை வைத்து குளியுங்கள் -
மேலும்,
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும்.
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது.
தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன
ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.
இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டன், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம், மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை.
இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.
சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை.
இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.
மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும் பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.
ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.
ஆனால் அவர்களில் பி6, பி12, ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.
‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.
நாம் செய்யும் பயிற்சி
நம் ஞாபகசக்தி அதிகரிக்க உதவும்