நான் தான் ஃபர்ஸ்ட் dear
மிகவும் அருமையன பதிவு
இது எல்லாம் பானு சிஸ் உபயோகிக்கும் வார்த்தைகள். யார் கதை update கொடுத்தாலும் அவர் தான் முதலில் வந்து comment செய்வார். இதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. அது ஒரு தனி ஊக்கம்.
யார் பதிவு போட்டாலும் முழு விமர்சனம் தருவார். அவர் பதிவுகள் அனைத்தும் நுட்பமானவை. கதையின் ஓட்டம் தடம் பதிக்கும் இடத்தில் அவர் விமர்சனங்கள் அழமாய் எடுத்துக்காட்டும்.
அவர் பதிவுகளின் வழியே எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தைஅள்ளி அள்ளி வழங்கியவர்.
இது அனைத்தையும் தாண்டி நம் கண்ணுக்கு தெரியாமல் இதயத்திற்கு நெருக்கமானவராய் இத்தளத்திலும் வெளியிலும் வாழ்ந்திருக்கிறார்.
உங்களை இப்போது இழப்போம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இழப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை பானுமா.
Miss you Banu Sis...