தாயின் கருவறையைப் போல்
இருளால் ஆட்கொள்ளப்பட்ட வானம்!!
மல்யுத்த களத்தில் இரு வீரர்கள்
மல்யுத்தம் புரிவது போல்
கும்மிருட்டு சூழ்ந்த வானில்
தமக்கிடையே மோதிக்கொள்ளும்
மழைமேகங்கள்!!
இரு கற்கள் உரசும் போது
தோன்றும் தீயைப்போல்
மழைமேகங்கள் உரசுகையில்
உருவாகும் மனதை
கிலி கொள்ள வைக்கும்
மின்னளொளி!!
போர்களத்தில் வெற்றி பெற்ற
படையினர் தமது வெற்றியை
பரைசாற்ற வெற்றி முரசு
முழங்குவதை போல்
காதை பிளக்கும் இடியோசை!!
சுயம்வரம் வென்ற
அரசனுக்கு நடைபெறும்
மரியாதை அணிவகுப்பு போல்
இறைவனின் கொடையாக
உருவகிக்கப்படும்
மழையின் வரவை
அறிவுறுத்துவதாக நிகழும்
நிகழ்ச்சிகள்.....
இயற்கையின் விசித்திரங்களா??
அல்லது அதிசயங்களா????
இருளால் ஆட்கொள்ளப்பட்ட வானம்!!
மல்யுத்த களத்தில் இரு வீரர்கள்
மல்யுத்தம் புரிவது போல்
கும்மிருட்டு சூழ்ந்த வானில்
தமக்கிடையே மோதிக்கொள்ளும்
மழைமேகங்கள்!!
இரு கற்கள் உரசும் போது
தோன்றும் தீயைப்போல்
மழைமேகங்கள் உரசுகையில்
உருவாகும் மனதை
கிலி கொள்ள வைக்கும்
மின்னளொளி!!
போர்களத்தில் வெற்றி பெற்ற
படையினர் தமது வெற்றியை
பரைசாற்ற வெற்றி முரசு
முழங்குவதை போல்
காதை பிளக்கும் இடியோசை!!
சுயம்வரம் வென்ற
அரசனுக்கு நடைபெறும்
மரியாதை அணிவகுப்பு போல்
இறைவனின் கொடையாக
உருவகிக்கப்படும்
மழையின் வரவை
அறிவுறுத்துவதாக நிகழும்
நிகழ்ச்சிகள்.....
இயற்கையின் விசித்திரங்களா??
அல்லது அதிசயங்களா????