மண்ணில் தோன்றிய வைரம் 14

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அன்றும் வழக்கம் போல் மரத்தடி பெஞ்சில் புத்தகம் படிப்பதாக பந்தா பண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தாள் சாரு.அஸ்வினின் வருகையை மட்டும் எதிர்பார்த்திருந்த சாருவிற்கு அவனுடன் அவள் வகுப்புத்தோழி ரோஹினியும் வந்தது ஏதோ தனக்கு எதிரான சம்பவம் ஒன்று இடம்பெற இருப்பதை உணர்த்தியது. தான் அங்கிருந்தால் ரோஹினி கண்ணில் பட்டுவிட நேருமென்று எண்ணிய சாரு தான் அலைபேசியை ஏரோப்லேன் மோடில் வைத்துவிட்டு பின் வாய்ஸ் ரெகாடரை ஆன் செய்து தன் கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தினுள் வைத்து புத்தகத்தை அவள் வழமையாய் அமரும் பெஞ்சின் ஓரத்தில் வைத்துவிட்டு சற்று தொலைவில் இருந்த மரத்தின் பின் மறைவாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாதவாறு நின்றுக்கொண்டாள்.
ரோஹினியுடன் வந்த அஸ்வின் ரோஹினியை அமரச்சொல்வதும் பின் அவள் ஏதோ சொல்லி பின் அழகான பளிச்சிடும் நீல நிற உறையால் ராப் செய்யப்பட்டு சிவப்பு நிற ரிப்பனால் முடிச்சிடப்பட்ட ஒரு பரிசுப்பொதியை அவனிடம் நீட்டுவதும் அவன் அதனை வாங்காமல் மறுப்பதும் பின் ஏதோ சொல்ல அவள் கண்கலங்கியவாறு செல்வதும் என்று ஒரு ஊமைப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள் சாரு. ரோஹினி சென்ற அடுத்த நிமிடமே அஸ்வினும் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அவன் சென்ற அடுத்த நிமிடம் அவ்விடம் நோக்கி விரைந்த சாரு புத்தகத்தில் ஒளித்து வைத்திருந்த வாய்ஸ் ரொக்கோடரை நிறுத்திவிட்டு அதனை சேவ் செய்தாள்.
பின் தனக்குள்ளே "இந்த ரோஹினி நிச்சயமா ரௌடி பேபிக்கு பிரபோஸ் பண்ண தான் வந்திருப்பா. ஆனா நம்ம ஆளு பயங்கர டோஸ் குடுத்திருச்சு போல.. அதான் புள்ள அழுதுகிட்டே போகுது.. இதே மத்த பசங்களா இருந்திருந்தா இன்னேரம் ஓகே பண்ணி வா அவுட்டிங் போகலாம்னு கூட்டிட்டு போய் இருப்பாங்க.. ஆனா நம்ப ஆளு... சான்சே இல்லை.. என்னான்னாலும் நம்ம ஆளு கெத்து தான்..." என்று அஸ்வின் ரோஹினியின் ப்ரபோசலை மறுத்ததை எண்ணி மகிழ்ந்த சாருவிற்கு அந்த ஆடியோவில் தனக்கான அணுகுண்டு காத்திருக்கின்றது என்ற உண்மை தெரியவில்லை...
ஹாஸ்டலுக்கு சென்ற சாரு அன்றைய பாடங்களை படித்துவிட்டு இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் விழுந்தவள் தன் ரூம்மேட் நிஷா மற்றும் ஆதிரா உறங்கும் வரை காத்திருக்கலானாள். அவர்களும் உறங்கிய பின் தன் இயர் போனின் உதவியுடன் அஸ்வின் மற்றும் ரோஹினியின் உரையாடலை கேட்கத் தொடங்கினாள்.
"இப்போ சொல்லுங்க.. என்ன பேசனும்" இது அஸ்வின்.
" சொல்கின்றேன். அதுக்கு முதல்ல நீங்க என்னைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்"
" நீங்க என்னோட ஜூனியர். அதை தவிர வேறு எதுவும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. சரி அதை விடுங்க என்னிடம் என்ன பேச வேண்டும் அதை சொல்லுங்க." அவனது குரலினை தொடர்ந்து ஏதோ சலசலக்கும் சத்தம் கேட்டது."இது என்னது??"
"ஏங்க இதை பார்த்தா என்னவென்று தெரியவில்லையா??"
"இல்லை தெரியவில்லை நீங்களோ சொல்லுங்க என்னனு??"
" சின்ன கிப்ட்.."
"எனக்கு எதுக்கு நீங்க கிப்ட குடுக்கனும்??"
"சும்மா கிப்ட் குடுக்க நான் என்ன மலையனூர் மகாராஜாவா??"
" நீங்க மகாராஜா தான். ஆனா மலையனூருக்கு
இல்லை. இந்த ரோஹினியின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் மன்னவன்"
அதை கேட்டு பலமாக சிரித்த அஸ்வினின் குரல் தொடர்ந்து பேசியது.
"ஏம்மா ரோஹினி நேற்று ஏதும் கட்டபொம்மன் படம் பார்த்தியா?? இப்படி மகாராஜா மதகஜராஜானு வசனம் பேசுற? "
"நான் என்ன சொல்ல வர்ரேனு உங்களுக்கு புரியலையா??"
"அது நீ என்கூட தனியா பேசனும்னு சொன்னப்போவே புரிந்தது. தெரிந்தும் ஏன் உன்கூட பேசிக்கிட்டு இருக்கேனா என்னோட நிலமையை உனக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்குமா.. இங்க பாரு ரோஹினி நீ எனக்கு தங்கை மாதிரி. நீ என்று இல்லை. இந்த காலேஜில் இருக்க எல்லோரையும் நான் என்னோட அக்கா தங்கையா தான் நினைக்கிறேன். நீ என்னை ஒரு சீனியர் என்ற முறையிலோ அல்லது அண்ணன் என்ற முறையிலோ என்னுடன் பேசுவதாய் இருந்தால் மட்டும் இனிமேல் என்னிடம் பேசு. வேறு ஏதாவது எண்ணத்தோடு என்னை நெருங்கனும்னு நினைத்தாயேயானால் அப்போது என்னுடைய கோபத்தை நீ சந்திக்க வேண்டி வரும். என்னடா பையன் சாப்டா இருக்கானேனு நினைச்சிராத..இப்படினா என்னோட ஆட்டிடியூட் வேற மாதிரி இருக்கும். சோ பார்த்து நடந்துக்கோ.. சொன்னது எல்லாம் புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன். இப்போ இடத்தை காலி பண்ணுங்க சிஸ்டர்."என்று அந்த ரெகோடிங் முடிவடைந்திருந்து.
இதுவரை ரெக்கோடிங்கை கேட்டுக்கொண்டிருந்த சாருவிற்கு அஸ்வினை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. ஆண்மையின் உச்ச பிரதிபலிப்பாய் திகழ்ந்த அஸ்வின்பால் பெண்கள் மையம் கொள்வதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அவர்களை தெறித்து ஓடச்செய்யும் அவனது பேச்சு சாருவை கிலி கொள்ள வைத்தது. என்னதான் ஒருபுறம் மனம் கர்வப்பட்டுக்கொண்டாலும் மறுபுறும் உனக்கும் இதே நிலைமை தான் என்று மனம் குட்டுவது அவளை நிலை தடுமாறச்செய்தது. இதற்கு விடை காண முடியாமலே அவளது அந்த வருடம் முடிந்ததோடல்லாமல் அவள் தன் காதலை வெளிப்படுத்தாமல் இருக்க அஸ்வின் கல்லூரியின் இறுதியாண்டினை முடித்துவிட்டு மாஸ்டர்ஸ் செய்ய ஆஸ்ரேலியா பறந்துவிட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top