பொன்னியின் செல்வன்.... கல்கி... நமக்கு தெரிந்த இவர்களை, அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சி...
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி... எங்க ஊர் புத்தக கண்காட்சியில்என் பொண்ணுக்கு பொன்னியின் செல்வன் காமிக் வாங்கி கொடுத்தேன்... (அப்போ அவ மூணாவது படிச்சா...)" ஒரே ஒரு பார்ட்டுதான் வாங்கி தந்தேன்... அதில் வந்தியத்தேவன் வரும் பகுதி கூட இல்லை... அதற்கு முந்தைய வர்ணனை... ஆழ்வார்கடியார், ஊரின் பெருமை எனதான் இருந்தது... அதே அவ ஆசையா எழுத்து கூட்டி படிச்சு புரிஞ்சிகிட்டா....
அப்போ விஷ்வளாக வந்தால்... வாவ்...
எனக்கு படிக்க நேரமிருந்தது... நமக்கு வார்த்தைகளை ரசிக்க நேரம் இருந்தது...
ஆனா, அவர்களுக்கு அது இல்லை... இப்படி படமா வந்தா... போற போக்குளையாவது நல்லத பார்ப்பார்கள்...
எனக்கு சொந்த ஊர் வேளாங்கண்ணிதான்... அங்க பக்கத்தில்தான் கோடியகரை... நாகபட்டினம் எல்லாம்... அதில் எனக்கு சற்று பெருமையே... வானதி இன்னமும் அந்த பெயர் அங்கு வைக்கப்படும்...