Because தமனுக்கு கூட தெரியாத சில விஷயங்கள் நமக்கு தெரியும். மலருக்கு பிரவாகனோட first-night அன்று முதலில் நடந்த conversation, (மறந்திருந்தால் போய் படிச்சு பாருங்க) and pregnancy decision கிட்டத்திட்ட கட்டாயப்படுத்தி அவளை ஒத்துக்க வெச்சது.
இந்த ரெண்டு விஷயம் போதும் அவனுக்கு மலரே certificate கொடுத்தாலும் அவன் ஒரு பெண்ணை -மனைவியை சரியா மதிக்காதவன் என்று. அது மட்டுமா more or less அப்படி ஒரு suggestion தான் அவன் விஷ்ணுவுக்கும் கொடுத்தான் மிர்ணாவை விட்டு பிரியாமல் இருக்க.
பிரவாகன் மாதிரி ஒருத்தன் மனைவி கிட்ட அன்பா இருக்கறது அவளை எல்லா விதத்திலும் கவனிச்சுக்கறது இதெல்லாம் ஆச்சரியப்பட வேண்டிய செயல்களா வேணும்னா பார்க்கலாம் ஆனால் கொண்டாடற அளவுக்கு பிரவாகன் தரத்தை உயர்த்தாது.
சில விஷயங்களில் domination compulsion அதெல்லாம் கணவன் மனைவிக்குள் இருப்பது அப்படிப்பட்டவரின் personality-க்கு கரும்புள்ளி தான் கறை தான். அதை எந்த -எத்தனை மாற்று நற்செயல்களலாலும் போக்க முடியாது.
சரி தமன் சொல்லறதெல்லாம் 100%உண்மை தான் Agreed. அதனால என்ன. பிரவாக மகாராஜா கடைக்கண் கடாக்ஷம் பெற அன்புமலர் அதிருஷ்டம் செஞ்சுருக்கணுமா என்ன?
(தமன் அப்படி கூட சொல்லுவான். ஆனால் அதை மலரோ, வாசர்களோ அப்படியே ஒத்துக்கணுமா என்ன?)
நினைச்சப்படி கிடைக்கலைன்னு விதியை நொந்துட்டு வாழாமல் கிடைச்சதை நல்ல விதமாக பார்க்கற எதார்த்தவாதியா மலர் இருக்கான்னு சொல்லி அவளை வேணும்னா பாராட்டலாம்.
ஆனால் இவங்க வாழ்க்கையோட சுமுக தொடக்கத்துக்கு சரியான நேரத்தில் சரியான அறிவுரையை மலருக்கு சொன்ன கீர்த்தியை தான் எல்லா கீர்த்தியும் போய் சேரும்.
இல்லைனா ஒன்னு பிரவாகன் ஒரு rapist-ஆகி இருப்பான் or இன்னும் பல மண்டை வீக்கங்களை பரிசாக வாங்கி இருப்பான் மலரிடம் இருந்து அவங்களோட முதலிரவில்.