அடேய் பிரவாகா, மலர் உன் காதலை சந்தேகப்பட்டது கூட கஷ்டமாயில்லை -ஏன்னா அது தான் நிஜம். ஆனால் உன் tatoo-வை சிறுமை படுத்தி பேசிட்டாளே, அது தான் எனக்கு வருத்தமா இருக்கு.
நீ "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா"- இருந்தும் எவ்வளவு தன்னடக்கத்தோட உன்னோட driver சொன்ன அறிவுரையை ஏற்று, உன் மூளையை கசக்கி காய்ச்சல் பட்டு இந்த tatoo -வை வரைஞ்சுகிட்ட. அது அவளுக்கு புரியலையே. Designer dress முதல் இப்ப வரவழைத்த ஜப்பான் திராச்சை வரை ஐடியாவும் பணமும் உன்னோடது தான் என்றாலும்அதை execute பண்ணினதும் அதற்கு efforts போட்டதும் தமன் தான். ஆனால் tatoo அப்படி இல்லை. உன் உடம்பில நீயே வலி பொருத்து வரைஞ்சுகிட்டது. இதை கண்டிப்பாக மலர் உணரணும்.
அதனால் நீ இப்ப என்ன செய்யறன்னா சட்டை மறைக்கிற மாதிரி போட்ட tatoo ஒன்னு இருந்தாலும், சட்டை கூட மறைக்க முடியாத மாதிரி உன் நெத்தியில ரெட்டைப் பிள்ளைங்களோட மலர் முகத்தை மறுபடியும் tatoo-வா வரைஞ்சுக்கோ. அதைப் பார்த்து அசந்து போய், அவ chennai போகாமல் உன்னோடவே இருந்துடுவா.
Just Try it man. உன் driver சொன்னதான் கேட்பியா என்ன?.
29 episodes-ஆ உன் அலப்பறைய படிச்சும் நீயும் ஒரு நாள் ஹீரோவாகிடுவன்னு நம்பிக்கையோட காத்துகிட்டு இருக்குற நான் சொன்னா கேட்கக்கூடாதா?