தரமற்ற கல்வியை தருகிறோமாம் நாம் மாற்றத்திற்காக அவர்கள் புதிய கல்விக்கொள்கையை புகுத்துகின்றனர்.எட்டாவது வரை அனைவரும் தேர்ச்சி என்றிருப்பதால் பாதி வழி நிற்றல்குறைகிறது.மூன்றாம் வகுப்பு மொட்டுகளுக்கு எதற்கு பொதுத்தேர்வு? மறைமுக குலக்கல்வி திட்டம் எதற்கு ?இரண்டாம் மூன்றாம் தவைமுறையே இப்போதுதான் தலை எடுக்கிறது.தலை எடுக்கும்போதே நசுக்கி விட்டு ஆண்டாண்டு காலமாய் சிலருக்கு ஊழியம் செய்ய திரும்பச்சொல்கிறார்கள்.ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் வேலூரில் வெற்றி வாய்ப்புக்காக போராடவே நேரம் சரியாக இருக்கிறது இவர்கள் எங்கனம் இத்தகைய கல்விக்கொள்கையை பற்றி கவலைப்படப்போகிறார்கள்?நாமே.விழித்தால் தான் உண்டு.இயன்ற வரை அனைவரும் கருத்து தெரிவிப்போம்.